Friday, December 5, 2008

புட் போர்டில்

புட்போர்டில் வைரமுத்துவுடன்....

இதுவும் தூள் தலைப்பு! சாவி நடத்திக்கொண்டிருந்த 'திசைகள்' இளைஞர் இதழுக்கு மாலன் ஆசிரியர். இப்போதைய பிரபலங்கள் எல்லாம் அப்போது சின்னப்பசங்களாக, மாணவர்களாக, அதில் எழுதிக்கொண்டிருந்தனர். என் நண்பர் மார்ஷல் (இன்றைய பாண்டிச்சேரி தொலை தொடர்பு பொது மேலாளர்) ஒரு தொடர்கதை எழுதிக்கொண்டிருந்தார்; கதையின் தலைப்பு-'மென்மையாக கொலை செய்'! (அவர் எழுதியதை நிறுத்தியதில் எனக்கு பெரும் பங்கு உண்டு)அதற்க்கு நான் ஓவியம் வரைந்துகொண்டு இருந்தேன். சில சமயம் அமிஞிக்கரையிலுள்ள பத்திரிகை அலுவலகத்திற்க்கு செல்வதுண்டு. அங்கு லே அவுட் ஓவியராக கங்கன் என்ற இலைஞரும் அவருக்கு உதவியாக அரஸ் என்ற இலைஞரும் இருப்பார்கள். கங்கன் என் ஓவியங்களை கடுமையாக விமர்சிப்பார். அரஸ் அமைதியாக இருப்பார். இன்று அரஸ் ஒரு பெரும் புகழ் பெற்ற ஓவியர்.

ஒரு நாள் திருவல்லிக்கேணியிலுருந்து 27 ஈ பஸ்ஸில் கிளம்பினேன். பயங்கர கூட்டம். புட்போர்டில் பயணம். நுங்கம்பாக்கத்தில் ஒருவர் பஸ்ஸில் ஏறினார். கையில் ஒரு பைல். கறுத்த முகம்,டக் செய்த பேண்ட், மெல்லிய மீசை, இரு முனைகள் மட்டும் கொஞ்ஜம் பெரிதாக. வைரமுத்துதான். சில பத்திரிகைகளில் புகைப்படம் பார்திருக்கிறேன். ஓரிரு வாரங்களுக்கு முன்தான் 'நிழல்கள்' வெளியாயிருக்கிரது. புட்போர்டில் தொங்கிகொண்டெ அமிஞ்ஜிக்கரையில் இறஙினேன். அவரும் அதே ஸ்டாப்பில் இறங்கினார் . சாவி அலுவலகத்திற்க்கு போனேன். அவரும் பின் தொடர்ந்தார். அங்கிருந்து 'விசிட்டர்' பத்திரிகையும் வெளிவந்து கொண்டிருந்தது. அனந்து அறைக்குள் வைரமுத்து போய்விட்டார். அப்போது விசிட்டரில் தொடர்ந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தர்.

'....திரைப்படத்தை
சின்ன தீக்குச்சிக்கு
தின்ன கொடுப்போம்'

என்ற திரைப்படங்களுக்கெதிரான புகழ் பெற்ற வரிகள் அதில்தான் பிரசுரமாகின. அலுவலகத்தில் வழக்கம் போல கங்கனிடம் அர்ச்சனைகள், புன்முறுவலுடன் அரஸ், கடுகடுவென்றிருந்த நகைச்சுவையாளர் சாவி, பக்கத்து டேபிளில் பரபரப்பாக எழுதிக்கொண்டிருந்த பாலகுமாரன்....போன வேலையை முடித்துவிட்டு வெளியே வந்தேன். பஸ்ஸுக்கு காத்திருந்தபோது வைரமுத்துவும் வந்தார். மெதுவாக பேச்சு கொடுத்தேன். 'அது ஒரு பொன்மாலை பொழுது' பற்றித்தான் நிறைய பேசினோம். பஸ் வந்தது. மீண்டும் புட்போர்ட். அதிலும் பேசிக்கொண்டே வந்தோம். இறங்கும்போது சொன்னேன். 'மறந்துடாதீங்க, என் பெயர் ஜீவா'.
பதிலுக்கு கூவினார்- 'மறக்க முடியுமா ஜீவா என்ற பெயரை'. அவர் சொன்னது தோழர் ஜீவாவை.

அதற்க்கு பிறகு பல விழாகளில் அவரை அருகே பார்த்திருக்கிறேன். பேசியதேயில்லை. .

Aug 07

1 comment:

saravanakumar said...

இவரை போல
பல பிரபலங்களை
அவர்களின் ஆரம்ப
காலத்தில் காண கிடைத்தவர் சிலரே {நேரில் இவரை அறியாதவர் கப்சா என்றே
எண்ண கூடும். ஆனால் தேவை
அற்ற
பொய் கூறும் பழக்கம் இல்லாதவர் . பேசும் பொது இல்லாத நகைச்சுவை
எழுதும் பொது