Friday, December 5, 2008

தொலைந்து போனவர்கள்

அந்த பையனை அவன் அப்பா என்னிடம் அழைத்துவந்தபோது அவனுக்கு வயது 17. பிளஸ் 2 முடித்திருந்தான். ஓவியக்கல்லூரியில் சேர்ந்து பயில வேண்டும் என்பது ஆசை. அதற்கான பயிற்ச்சிக்களம்தானே எங்கள் கடை. பிரமாதமாக வரைவான். நல்ல பயிற்ச்சி எடுத்த பின் நுழைவுத்தேர்வுக்கு அனுப்பி வைத்தோம். முற்பட்ட வகுப்பில், நெல்லை சைவப்பிள்ளையாய் பிறந்ததினால் சீட் கிடைக்கவில்லை. விடவில்லை, மீண்டும் ஒரு வருடம் பயிற்ச்சி. அடுத்த வருடம் மீண்டும் கஜினி முகம்மது.

அவன் தந்தை ஒரு புகைப்பட ஆர்வலர், மில்லில் குமாஸ்தா. பையனுக்கும் புகைப்பட ஆர்வம் தொற்றிவிட்டது. எனக்கு ஒரு யோசனை தோன்றியது. ஏன் இவனை திரைப்படக்கல்லூரிக்கு அனுப்பக்கூடாது, என் தம்பி அப்போதுதான் படிப்பை முடிக்கிறான். பையனின் மாமா நடிகர் சிவகுமாருக்கு நண்பர். எப்படியோ திரைப்பட்க்கல்லூரியில் மெரிட்டிலேயே இடம் கிடைத்தது. தங்க பதக்கத்துடன் வெளிவந்தான்.

படிக்கும்போதே சா.கந்தசாமியின் 'தொலைந்து போனவர்கள்' தொலைக்காட்சி தொடரிலும் சிறுவனாக நடித்து புகழ் பெற்றான். என் தம்பியின் முதல் படமான 'அதர்மத்தில்' துணை ஒளிப்பதிவாளராக சேர்த்துவிட்டேன். இன்னொரு சிஷ்யன் மணிராஜுக்கும் இதுதான் அறிமுகப்படம்.

நீண்ட நாட்கள் கழித்து அவன் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டான், கஸ்தூரிமான், திருவிளையாடல், மருதமலை, மலைகோட்டை என்று அவன் பணி புரியும் படங்களின் பெயரை சொன்னான். மிகவும் மகிழ்ந்தேன்.

வைத்தி தன் சொந்த சிக்கல்களில் இருந்து மீண்டு, மீண்டும் கலை பயணத்தை தொடர வேண்டும் என்பது என் பேராவல்.

Nov 07

No comments: