<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697</id><updated>2012-02-16T12:14:17.079-08:00</updated><title type='text'>ஜீவா ஓவியக்கூடம்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>32</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-610276272219845352</id><published>2011-11-03T01:27:00.000-07:00</published><updated>2011-11-03T01:33:26.082-07:00</updated><title type='text'>நூலகங்கள்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-0nk9bXsSYaw/TrJRAJhU8YI/AAAAAAAAAoA/6S_XQ9aHEL0/s1600/library.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 212px;" src="http://1.bp.blogspot.com/-0nk9bXsSYaw/TrJRAJhU8YI/AAAAAAAAAoA/6S_XQ9aHEL0/s320/library.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5670683943810429314" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்ற போகிறார்கள் என்ற செய்தி பலரின் அதிருப்தியை சம்பாதித்திருக்கிறது. பல கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன!! நூலகம்..எவ்வளவு அழகான வார்த்தை!!!! எனது டியூஷன் மாஸ்டரும், என் தந்தையின் நண்பருமான பஷீர் அவர்கள் என்னை விரல் பிடித்து கோவை மத்திய நூலகத்திற்கு அழைத்து சென்று குழந்தைகள் பகுதியில் அமர வைத்தது இன்றும் நினைவிருக்கிறது. காமிக்ஸ் புத்தகங்களுடன் தொடங்கிய தொடர்பு பின்னர்  நான் வளர வளர விரிவடைந்தது.  சிதம்பரம் பூங்கா அருகில் இருந்த அந்த நூலகம் பின்னர் ஆர்.எஸ்.புரம் பகுதிக்கு இடம் பெயர்ந்தது.. இந்த கட்டிடத்தில் அருங்காட்சியகம் வந்து, பின்னர் குண்டு வெடிப்பு விசாரணை நீதிமன்றமாகவும் மாறி, இப்போது பூட்டி கிடக்கிறது!!!&lt;br /&gt;&lt;br /&gt;கிக்கானி பள்ளியில் ஆறாவது வகுப்பில் சேர்ந்தபோது பள்ளியில் என்னை எதுவும் கவரவில்லை, நூலகத்தை தவிர. விளையாட்டுகளில் ஈடுபாடு இல்லாததால் மதிய இடை வேளைகளிலும் கூட  நூலகமே கதியாயிற்று. காலையில் எட்டரை மணிக்கே நூலக வாசலில் காத்து கிடப்பேன். எனக்காக நூலகர் நடராஜன் அந்நேரத்திற்க்கே  சைக்கிளை மிதித்து கொண்டு வருவார். பள்ளியில் இந்தியும் ஆங்கிலமும் மட்டுமே படித்து வந்த எனக்கு தமிழின் கதவுகளை பள்ளி நூலகம் திறந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பல மாலை நேரங்களில் டவுன்ஹால் மாடியில் இருந்த புராதான நூலகம் எனது வாசஸ்தலமானது. யாராவது படியேறி வந்தாலே..திம் திம் என்று நூலகமே அதிரும்!!!! மேசைகளில் படிப்பது போல பாவனை செய்துகொண்டு தூங்குபவர்கள் திடுக்கென விழித்து எழும் சூழ்நிலைகள் அடிக்கடி ஏற்படுவதுண்டு. இன்று அங்கு நூலகம் இல்லை. பல இலக்கிய நிகழ்ச்சிகள் நடைபெற்ற அந்த நூறாண்டு கடந்த மண்டபம் இன்று நகர்மன்ற கூட்டங்கள் நடக்கும் கூடமாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மணிக்கூண்டை தெரியாத கோவைவாசிகள் இருக்க முடியாது. அங்கும் வெறும் செய்தித் தாள்களுக்கு மட்டுமே ஒரு நூலகம் இருந்தது. ஒரே பேப்பரை பல பாகங்களாக்கி பெருசுகள் படித்துக்கொண்டிருப்பார்கள்.  இன்று மணிக்கூண்டு இருக்கிறது, அதனுடன் ஒட்டியே கழிப்பறைகளும் இருக்கின்றன. நூலகம் மட்டும் இல்லை!&lt;br /&gt;&lt;br /&gt;கோவை அரசினர் கல்லூரியில் சேர்ந்தவுடன் நான் விஜயம் செய்த முதல் இடம்....யூகித்திருப்பீர்கள்....அங்குதான்!  அங்கு நூலகத்தினுள் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. நமக்கு வேண்டிய புத்தகத்தை கேட்லாக்கை பார்த்து , தேர்ந்தெடுத்து, நூலகரிடம் சொன்னால் அவர் எடுத்து வைப்பார். 'பில்கிரிம்ஸ் பிராக்ரஸ்' புத்தகத்தை நான் கேட்டவுடன், வெறுப்பாக பார்த்து, இரண்டு நாட்களுக்கு பிறகு கொடுத்தார், 'படிக்கவா, பந்தா பண்ணவா' என்ற கேள்வியுடன். பின்னர் அவரும் எனது நலம் விரும்பியானார் என்பது காலத்தின் கட்டாயம்!&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை மாநிலக்கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் நூலகங்களின் பிரம்மாண்டம் என்னை வசீகரித்தது! அண்ணா சாலை நூலகத்தில், கிரேக்க அரசியல் தத்துவ நூலை தேடி சென்றபோது, பின்னர் இதே வளாகத்தில் எனது நூல் ஒரு நாள் வெளியிடப்படும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டேன். பிரிட்டிஷ் கவுன்சில் நூலகமும் அமெரிக்கன் நூலகமும் பிரம்மிப்பூட்டின. அமெரிக்கன் நூலகம் எனக்கு மிகவும் பிடித்த இடமானது. குளிரூட்டப்பட்ட வளாகம், அதிசயமாய்  தெரிந்த வீடியோ கேசட்கள், அதன் குடிநீர் குழாய்களும் கூட மனதை கவர்ந்தன. திரைப்படம், கவிதை சார்ந்த நூல்களை அதிகமாய் படித்தது இங்குதான். சென்னை பல்கலைக்கழக நூலகமும் அண்ணா சாலை நூலகம் போலத்தான் இருந்தது. காதலர்களுக்கான இருட்டு மூலைகள், இடம் மாறிக்கிடக்கும் புத்தகங்கள் , எங்கேயாவது குருட்டாம்போக்கில் தென்படும் பொக்கிஷங்கள் என்று ஒரு மாயத்தன்மை நிறைந்த இடம். கன்னிமாரா நூலகம் அப்படி இருந்ததில்லை. அதுவும் ஒரு அற்புதச்சுரங்கம். அதன் சிறப்பு அதன் வளாகமும். அருங்காட்சியகமும் , மியூசியம் தியேட்டரும் ரசிகனுக்கு கூடுதல் பரிசுகள்!&lt;br /&gt; &lt;br /&gt;ஏனோ மாநிலக்கல்லூரி நூலகம் என்னை கவரவில்லை. மாறாக எங்கள் விக்டோரியா விடுதி நூலகம் எனது இரண்டாவது விடுதி அறையாக மாறிப்போனது. பகுதி நேர நூலகராக அங்கு பணி புரிந்த பால்ராஜை, காக்காய் பிடித்து, பல நூல்களை மாதக்கணக்கில் என் அறையில் வைத்து படிக்கும் ஏற்பாடை செய்து கொண்டேன்.! அவற்றில் ஒன்று எஸ்.கிருஷ்ணசாமி எழுதிய 'இந்தியன் பிலிம் '!  திருவல்லிக்கேணியில் இன்னொரு நூலகத்தை கண்டு பிடித்தேன். அது 'ஹிந்து' பத்திரிக்கை  நிறுவனர் கஸ்தூரி அய்யங்கார் பெயரை கொண்டிருந்தது. பெரும்பாலும் ஹிந்து நிறுவனத்திற்கு  வந்த நூல்களை இங்கு பொது மக்களுக்கு பயன் பெரும் வகையில் வைத்திருந்தனர். வழக்கம் போல அந்த நூலகரும் என் நண்பரானார்! அரிய நூல்களை தந்து உதவினார்!&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி வாழ்க்கையில் ஏமாற்றம் தந்த நூலகம் கோவை சட்டக்கல்லூரி நூலகம்தான்.  நாங்கள்தான் கல்லூரிக்கே முதல் செட். ஒரு வாடகை கட்டிடத்தில் இயங்கியது கல்லூரி. எந்த வசதிகளும் இல்லை. விளையாட்டுகளுக்கு நிதி ஒதுக்க்கப்பட்டு விளையாட்டு சாதனங்கள் எல்லாம் வாங்கப்பட்டன. ஆனால் நூலகம் இல்லை. நூலகம் வேண்டி மனுக்கள் அனுப்பினோம். விசாரணைக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் வந்தார். பெட்டிஷன் பார்ட்டிகளான நாங்கள் மூவரும் அவர் முன் நின்று வீராவேசத்துடன் இது என்ன சட்டக்கல்லூரியா,  உடற்பயிற்சிக் கல்லூரியா ..எங்களுக்கு உடனடித்தேவை நூலகம்தான்  தவிர பந்துகளும் மட்டைகளும் அல்ல என்று முழங்கினோம். நீதிபதி உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். 'தம்பிகளா, என் இத்தனை வருஷ சர்வீசில் இப்படி சட்டக்கல்லூரி மாணவர்களை பார்த்தில்லையப்பா, இதோ வருகிறது நூலகம்'! என்று ஆணையிட்டு நூலகமும் வந்தது..! ஆனால் நாங்கள் யாரும் உள்ளே எட்டி பார்க்கவில்லை என்பதுதான் விசேஷம். 'ஒரே பார்வையில் முப்பது&lt;br /&gt;கேள்விகள்' என்ற கைடுகள்தானே தானே எங்களுக்கு ஆபாத்பாந்தவர்கள்! வழக்கம் போல நூலகர்தான் நண்பரானார்....பின்னர் மன உபாதைகளால் வேலை நீக்கமும் செய்யப்பட்டார்!!!&lt;br /&gt;&lt;br /&gt;நூலகங்கள் என்றாலே, அங்கு வரும் விதவிதமான மனிதர்கள்தாம் நினைவுக்கு வருவார்கள். நிறைய புத்தகங்களை தங்கள் முன் குவித்து வைத்து கொண்டு குறிப்பெடுக்கும் ஆராய்ச்சி மாணவர்கள், எல்லோரும் தேடும் வாரப்பத்திரிகையை, தான் படிக்கும் பேப்பருக்கு கீழ் ஒளித்து வைத்து பாதுகாக்கும் அற்ப ஜீவிகள், தங்களுக்கு வேண்டிய நூலை, வேறொரு செக்சனில் ஒளித்து வைக்கும் கில்லாடிகள், பனியனுக்குள் புத்தகத்தை வைத்து வெளியே கடத்தும் அறிவுத்தாகம் மிக்கவர்கள்,குறட்டை விட்டு தூங்கும் உல்லாசிகள், பெரும்பாலும் கடுகடுப்பை சுமந்து கொண்டிருக்கும் நூலக சிப்பந்திகள், ரெபரென்ஸ்  புத்தகங்களில் முக்கிய தாள்களை கிழித்து திருடி செல்லும் பொதுநலவாதிகள், நூல்களில் தங்கள் கருத்தை எழுதி வைப்பவர்கள், பல சமயங்களில் கெட்ட வார்த்தைகளால் இந்த நூலை படிக்க போகிறவர்களை திட்டி எழுதியிருப்பவர்கள்,  பெண்களின் கவனத்தை கவர மெகா நூல்களை படிப்பது போல நடிப்பவர்கள்......அது ஒரு தனி உலகம்தான்!!!&lt;br /&gt;&lt;br /&gt;யோசித்து பார்க்கும்போது மாணவப் பருவத்துடன்  நூலகங்களின் தொடர்புகள் அற்றுப் போய்விட்டன என்ற கசப்பான உண்மை இப்போது சுடுகிறது.  உண்மை எப்போதும் சுடுவதுதானே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-610276272219845352?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/610276272219845352/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=610276272219845352' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/610276272219845352'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/610276272219845352'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2011/11/blog-post.html' title='நூலகங்கள்!'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-0nk9bXsSYaw/TrJRAJhU8YI/AAAAAAAAAoA/6S_XQ9aHEL0/s72-c/library.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-4214421819930697331</id><published>2011-03-20T05:38:00.001-07:00</published><updated>2011-03-20T05:41:26.010-07:00</updated><title type='text'>நினைவிருக்கிறதா, அவசர நிலையை?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-G36HjP2W_WM/TYX12Xaf1KI/AAAAAAAAAeg/OJkVkxA2Log/s1600/1231-Indira-Gandhi.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 172px;" src="http://4.bp.blogspot.com/-G36HjP2W_WM/TYX12Xaf1KI/AAAAAAAAAeg/OJkVkxA2Log/s200/1231-Indira-Gandhi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5586141227169862818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-m3ywDv89DeY/TYX12Wg9PzI/AAAAAAAAAeY/f-3nTbkJ67s/s1600/Abu.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 164px;" src="http://2.bp.blogspot.com/-m3ywDv89DeY/TYX12Wg9PzI/AAAAAAAAAeY/f-3nTbkJ67s/s200/Abu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5586141226928521010" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-NSt9o3Hh9JA/TYX12BoEAuI/AAAAAAAAAeQ/C7XaXAcIXXg/s1600/1975.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 168px;" src="http://4.bp.blogspot.com/-NSt9o3Hh9JA/TYX12BoEAuI/AAAAAAAAAeQ/C7XaXAcIXXg/s200/1975.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5586141221321179874" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-DL5z2lYOwkM/TYX12oI5m0I/AAAAAAAAAeo/2J0ovQz7nvw/s1600/total%2Brevolution%2Bat%2BPatna%2BGandhi%2BMaidan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 200px; height: 132px;" src="http://3.bp.blogspot.com/-DL5z2lYOwkM/TYX12oI5m0I/AAAAAAAAAeo/2J0ovQz7nvw/s200/total%2Brevolution%2Bat%2BPatna%2BGandhi%2BMaidan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5586141231659457346" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;முப்பது வருடங்களுக்கு மேலாயிற்று...அந்த கொடிய காலங்களின் ஆட்டங்கள் நிகழ்ந்து!!!&lt;br /&gt;அப்போது நான் மாணவன் . திடீரென்று  அந்த செய்தி வந்தது. 'அவசர நிலை பிரகடனம்'....! அப்படி என்றால் என்னவென்பதே பலருக்கு தெரியாது. இதற்கு முன் ஒரு போரின்போது இது அறிவிக்கப்பட்டதாக சிலர் சொன்னார்கள். தேர்தல் முறைகேடுகளால், இந்திராகாந்தி பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை , நாட்டுக்கே ஆபத்து என்று திரித்து, அவசர  நிலை பிரகடனம்  செய்தார்  அம்மையார்! அப்போதைய  ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதியான பக்ருதீன் அலி அகமது இந்த சட்டத்தையும், பின்னால் வந்த பல அவசர சட்டங்களுக்கும் மறுப்பேதும் சொல்லாமல் கையெழுத்து போட்டு தள்ளிக்கொண்டிருந்தார்! என்ன ஏது என்று புரிவதற்குள் எதிர்கட்சி தலைவர்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்டனர். ஆயிரக் கணக்கான தொண்டர்களும் சிறையில்..  பலர் தலைமறைவானார்கள்! அப்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சி. காங்கிரசுக்கு எதிரான நிலை. தலைவர்கள் பலர் தமிழகத்தில் தலைமறைவாக தஞ்சம் புகுந்தனர். ஜார்ஜ் பெர்னாண்டஸ் கோவை பேரூரில் ஒரு  வீட்டில் தலைமறைவாக இருந்தார் என்றெல்லாம் நண்பர்கள் சொன்னார்கள்! போராட்டங்கள் தடை செய்யப்பட்டன. வீராதி வீர சூராதி சூர தொழிற்சங்க தலைவர்கள் எல்லோரும் கப்சிப். நேரத்துக்கு ரயில்கள் ஓடின...காலை பத்து மணிக்கெல்லாம் அவரவர் சீட்டில் அரசு ஊழியர்கள் பவ்யமாக அமர்ந்தனர்! யாரை வேண்டுமானாலும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று உதைக்கலாம், கைது செய்யலாம், சித்ரவதை செய்யலாம், கொலை கூட செய்யலாம் என்ற நிலை உருவானது. அடக்குமுறைக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்பட்டன. எதிர்த்து குரல் கொடுத்த பெரும் தலைவர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், கிருபளானி, மொரார்ஜி, சரண்சிங் போன்ற தலைவர்கள் எந்த காரணமும் இன்றி கைது செய்யப்பட்டனர். பல அமைப்புக்கள் தடை செய்யப்பட்டன. ஆர்.எஸ் .எஸ். இவற்றில் ஒன்று. சில கட்சிகள் எதிர்த்து குரல் கொடுத்தன..மார்க்சிஸ்ட் கட்சியும் திமுகவினரும் இதில் அடங்குவர். இவர்களின் தலைவர்களும் தொழிற்சங்க வாதிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இவர்களை முடக்கிய சட்டமான 'மிசா'வையே பலர் பின்னாளில் பட்டமாக அணிந்து கொண்டனர். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த கொடிய அடக்குமுறைக்கு ஒரு பட்டுக்குஞ்சலம் கட்டினர் இந்திரா காந்தியும் அவருடைய ஆலோசகர்களும்...இருபதம்ச திட்டம் என்ற பெயரில்! நாட்டு நலனுக்கு என்று  இருபது திட்டங்களை  அறிவித்து இருபத்தி நாலு மணிநேரமும் இதன் பஜனை பாடினார்கள். ‘Be Indian, Buy Indian’ என்பது இதில் ஒன்று. இதன்படி அந்நிய பொருட்களுக்கு தடை என்ற வதந்தி கிளம்பியது. அப்போது கடத்தல் என்பது பெரும் தொழில் அல்லவா! அந்நிய வாட்சுகள், அந்நிய டேப் ரிக்கார்டர்கள் என்று இந்தியாவுக்கு கடத்தப்பட்ட பொருட்கள்தான் பரவலாக நம் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த செய்தி கேட்டதும் அனைவரும் இவற்றை வீட்டுக்குள் மறைத்து வைத்த காமெடிகளும் நடந்தன. திடீரென்று ஒரு வதந்தி கிளம்பும்...'மேம்பாலத்துல கஸ்டம்ஸ் செக்கிங் பண்ணி பாரீன் வாட்சுகளை பிடிக்கிறாங்களாம்' என்று...அவ்வளவுதான்...அனைவரும் தத்தமது சீக்கோ, ரீக்கோ வாட்சுகளை உள்ளாடைக்குள் மறைத்து வைக்காத குறையாய் ஒளித்து வைத்து நடமாடுவார்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;கோமாளி இளவரசனைப் போல் சஞ்சய் காந்தியின் கொடூரங்கள் பிரபலமாயின. குடும்ப கட்டுப்பாட்டு  திட்டத்தை பலவந்தமாக குடிசைவாசிகள் மீது பிரயோகப்படுத்தினார். தில்லியை அழகுபடுத்துகிறேன் பேர்வழி என்று துர்க்மான் கேட்  குடிசைகள் மீது புல்டோசர்களை ஏவினார். அவசர நிலையை கேலி செய்து எடுக்கப்பட்ட 'கிச்சா குர்சி கா' படத்தின் நெகடிவ்களை கைப்பற்றி கொளுத்தினார். காங்கிரஸ்காரர்களின் அட்டகாசம் அதிகரித்தது...தங்களுக்கு வேண்டாதவர்களை உள்ளே தூக்கி போட  அவசர நிலை அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக ஆயிற்று! கல்லூரி விடுதிகளுக்குள்ளும் காவல் துறை நுழைந்தது. புரட்சிகர சிந்தனை மிக்க மாணவர்கள் இழுத்து செல்லப்பட்டனர்.கேரளத்தில் ராஜன் என்ற மாணவன் காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று வரை அவன் உடலுக்கு என்ன ஆயிற்று என்ற தகவல் இல்லை. எதிர்ப்பு குரல் கவிஞர்களும் இலக்கியவாதிகளும் காவல் நிலையங்களில் தொங்க விடப்பட்டு உதைக்கப்பட்டனர்..உருளைக்கட்டை சிகிச்சைகள் செய்யப்பட்டு நடக்க முடியாதவர்கள் ஆனவர் பலர். இயல்பாகவே ஆதரவுக்குரல் கொடுப்பவர்களும் உருவாயினர். 'இந்திராதான் இந்தியா' என்ற டி.கே.பருவாவின் புகழ் பெற்ற ஜால்ரா வார்த்தையை சிரமேற்க்கொண்டு  தமிழகத்தில் இலக்கியங்கள் உருவாகின. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிட்டத்தட்ட இந்திராவின் மக்கள் தொடர்பாளராகவே மாறி, இந்தோ சோவியத் கழகம் சார்பில் பல கருத்தரங்கங்கள் நடத்தியது. இன்றும் நினைவிருக்கிறது...முன்னாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு இருபதம்ச திட்டத்தின் புகழ் பாடும்போது சொன்ன வரி...காஷ்மீர் ஆப்பிளை இங்கே இருப்பவனும் வாங்கி திங்க பயன்படுகிறது இந்த திட்டம் என்று. ஒரு இழவும் புரியவில்லை அப்போதும் இப்போதும்! வினோபா பாவே, அன்னை தெரசா, குஷ்வந்த் சிங் போன்றவர்கள் பகிரங்கமாக அவசர நிலையை ஆதரித்தனர் என்று சொல்வார்கள். எம்.எப்.உசைன் என்ற ஓவியரின் அடிவருடித்தனம் உச்சமானது. அவர் இந்திராவை ஒரு துர்கையாக சித்தரித்து ஒரு மாபெரும் ஓவியத்தை காட்சிக்கு வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிக்கை தணிக்கை அப்போது கொடி கட்டி பறந்தது. ஹிந்து போன்ற பத்திரிகைகள் கப்சிப் ஆயின. எதிர்ப்புக்குரல் இந்தியன் எக்ஸ்பிரஸ், துக்ளக் போன்ற பத்திரிகைகளில் இருந்து மட்டும் வந்தன. அதிகாரிகளுக்கு ஒரு செய்தி பிடிக்கவில்லை என்றால் நீக்கப்பட்ட பின்புதான் அச்சுக்கு போயின. அப்போதைய பத்திரிகைகளில் பல பத்திகள் காலியாகவும் வெள்ளையாகவும் இருப்பதை பார்க்கலாம். துக்ளக்குக்கு பயங்கர டிமாண்டு, பல பக்கங்கள் வெள்ளையாய் இருந்தும்! ஒரு இதழில் எம்ஜியார் நடித்த 'சர்வாதிகாரி' படத்தின் வசனங்களை  பல பக்கங்களுக்கு அச்சடித்திருந்தார் சோ! வானொலியை திருப்பினால் எப்போதும் 'இருபதம்ச திட்டம்...ஆஹா...இது இந்திராவின் சட்டம்...ஓஹோ' என்ற கண்றாவி பாட்டை கேட்க வேண்டியது தலைவிதியானது! திரைப்படத் தணிக்கைகளும் தடைகளும் இன்னும் பிரபலம். குடிப்பது போன்ற காட்சிகளும், வன்முறைச்சண்டைகளும் கத்திரிக்கு பலியாயின. அரசை விமர்சிப்பது போல காட்சிகள் வந்தால் அம்போதான்! திரைப்பட பிரபலங்களை பந்தாடினர் அதிகாரிகளும் மந்திரிகளும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி ஒரு நாள் பிரகடனப்படுத்தப்பட்டது! பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலின், முரசொலி மாறன் போன்றவர்கள் உள்ளே! மக்கள் மத்தியில் குமுறல்கள் உருவாகத் தொடங்கின. நான் அப்போது சென்னை மாநிலக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். சிறையில் சிட்டிபாபு அடித்து கொல்லப்பட்டார் என்று தகவல் பரவியது. அவரது உடல் திருவல்லிக்கேணியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு குழுமிய மக்களின் உணர்வுகள் இன்றும் பசுமையாக மனதில் பதிந்திருக்கிறது!&lt;br /&gt;சிறைக் கொடுமைகள் பற்றிய பல தகவல்கள் பரவின. அதே நேரத்தில் முரசொலி அடியார் போன்ற சிலர் சிறை ஒரு உல்லாசக்கூடம் என்பது போன்ற தகவல்களையும் பரப்பினர். ஜால்ரா அடித்துக்கொண்டிருந்த பொதுவுடமைக்கட்சியில் இருந்தும் எதிர்ப்பு குரல்கள் வரத்தொடங்கின. அதில் முக்கியமானவரான ராஜேஸ்வர ராவுக்கு மாநிலக்கல்லூரி மாணவர்கள் சார்பாக நாங்கள் மாலை அணிவித்தோம்.  எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வரவேண்டுமல்லவா. 1977ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை கண்டது. இந்திரா, சஞ்சய் போன்றவர்கள் கூட அவர்கள் தொகுதியில் தோற்றனர்! மக்களும் சகஜ நிலைக்கு திரும்பினர்!&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ஒரு நாள் ஜனாதிபதி இறந்ததால் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஒரு மனிதரின் மறைவுக்கு மாணவர்கள் மத்தியில் அப்படி ஒரு மகிழ்ச்சி ஆரவாரம் எழும்பியதை நான் பிறகெப்போதும் கண்டதில்லை!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-4214421819930697331?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/4214421819930697331/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=4214421819930697331' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/4214421819930697331'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/4214421819930697331'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2011/03/blog-post_20.html' title='நினைவிருக்கிறதா, அவசர நிலையை?'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-G36HjP2W_WM/TYX12Xaf1KI/AAAAAAAAAeg/OJkVkxA2Log/s72-c/1231-Indira-Gandhi.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-5148552004950039802</id><published>2011-03-14T01:27:00.000-07:00</published><updated>2011-03-14T01:29:00.964-07:00</updated><title type='text'>'நாங்க மன்னரும் இல்லே......'</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-3nNSQEx66LY/TX3Rwi8856I/AAAAAAAAAeI/VUsZj1Q9xb0/s1600/barber.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/-3nNSQEx66LY/TX3Rwi8856I/AAAAAAAAAeI/VUsZj1Q9xb0/s320/barber.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5583849744955664290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வாங்க! வாங்க !!&lt;br /&gt;டீ கூட  சாப்பிடலை ..அதுக்கு ஒரு அஞ்சு நிமிஷம் வேஸ்ட்....&lt;br /&gt;அட்டடே.. வாங்க &lt;br /&gt;உக்காருங்க...&lt;br /&gt;எங்க...ஊருக்கா?&lt;br /&gt;இல்ல...ஊரிலிருந்து வர்றேன்....&lt;br /&gt;டிராவல்ஸ் பஸ்ஸா?&lt;br /&gt;இல்லை...ரயிலு..!...&lt;br /&gt;வீடு அதே வீடுதானே?&lt;br /&gt;ஆமா..மாடிலே ஒரு வீடு அங்கே போக்கியத்துக்கு இருக்கு..அருவதாயிரம்...!&lt;br /&gt;அப்படி ஒண்ணும் இல்லையே..&lt;br /&gt;அந்த வீட்டுக்காரம்மா கூட தீப்புடிச்ச மாதிரி இருப்பாங்க....&lt;br /&gt;ஆமா ஆமா...&lt;br /&gt;முடிச்சிரலாமா?&lt;br /&gt;வேண்டாங்க..எனக்கு இது போதும்..ஆயிரத்தி ஐநூறு தான் வாடகை...தனி ஆளுதான்! போதும்!&lt;br /&gt;சார்...இந்த மூட்டைப்பூச்சிக்கு என்ன மருந்து சார் பெஸ்ட்? சனியன் என்ன பண்ணினாலும் போகமாட்டேங்குது..வீட்டுக்காரம்மாவுக்கு விடிய விடிய என்ன வேலைங்குறீங்க...மூட்டைபூச்சியை பிடிக்கவேண்டியது...மக்கிலே தண்ணிலே போடவேண்டியது....நமக்கு பெட்டு வாசல்லதான்...பன்னெண்டு  மணியிருக்கும் ..டக்குன்னு எந்திரிச்சி பாக்குறேன்..கழுத்து பூரா மூட்டைபூச்சி...ஏன் கேக்குறீங்க...எஸ்.வி.லாண்டரிலே ஒரு மருந்து அடிச்சாராம்...அறுவது ரூவாயாம்...இன்னைக்கி வாங்கீர வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க சார் பில்டிங் எல்லாம் இப்ப கட்ட முடியாது போல...பத்து வருசத்துக்கு முன்னாலே நம்ம ஹோட்டல்காரர் 22 லச்சத்துக்கு வீடு கட்டுனாரு...இப்ப வாடகையே...வருசத்துக்கு 4 லச்சம் வருது....ஹூம்...!&lt;br /&gt;தங்கம் பாருங்க என்ன விலை விக்குது...! நெருங்க முடியுமா? இவரு எப்படி சம்பாரிச்சாருன்னு நினைக்கிறீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;எவரு?&lt;br /&gt;அட அவருதாங்க.....(ஒரு கிசுகிசுப்பு)&lt;br /&gt;பாம்பேக்கு போகவேண்டியது....நல்ல தண்ணியடிக்கனும்... வெள்ளை தோல்காரிங்க  கூட கூத்தடிக்கணும்....சேட்டு பொம்பளைங்கள.........டாராமா!!! இங்கேயிருந்து ஒரு கோஷ்டியே கூட போகும்....எல்லாம் அழுக்குபசங்க... ஒருத்தன் பக்கத்திலே போமாட்டான்! குடும்பத்தோட அன்ரிசர்வ் பொட்டிலே  வருவானுங்க...பைக்குள்ள தங்க பிஸ்கட் இருக்கும்னு ஒருத்தனுக்கும் தெரியாது. அல்வா மாதிரி பிஸ்கட் இங்க வந்திரும்....ஒரு ஐயாயிரம் கொடுத்தா ஒரு மாசத்துக்கு சந்தோசமா ஆடுவானுங்க....இப்பதான் தங்க கட்டுப்பாடே இல்லையே!!!&lt;br /&gt;&lt;br /&gt;சார், அம்பது ரூபா சார் இப்ப, சங்கத்திலே தீர்மானம் போட்டாச்சு.. பாருங்க அட்டை கூட மாட்டியிருக்கேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓயாத பேச்சு, சதா இயங்கும் கைகளைப் போல ! சலூன்கள்தான் எப்படிப்பட்ட உலகங்கள்! சிறுவயது முதல் எவ்வளவு தடவைகள் இங்கு விஜயம் செய்திருக்கிறோம். தகர டப்பா சலூன் முதல் ஏசி பந்தா அழகு நிலையம் வரை எவ்வளவு ரகங்கள்...! நம் நாட்டில் ஆணாய் பிறந்த எவருக்கும் மறக்க இயலா உலகம் இந்த சலூன் கடைகள்...தலையை பிடித்து அமுக்கி, வெள்ளை துணி போர்த்தி , உம்மென்று முகமெல்லாம் மயிர்த்துகள்கள்  ஊறிக்கிடக்கும் சிறுவர் முகங்கள் முதல் கடு கடு வென்று பீடி நாற்றம் கமழும் முகங்கள் வரை எத்தனை முகங்களை இந்த கடைகள் பார்த்திருக்கும்! உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை அலசப்படும் அரங்கம். அனல் வீசும் அரசியல் வாதப் பிரதிவாதங்களை, வரிசையில் இருந்தும் கண்டுக்கப்படாத சிறுவர்களாய் நாம் எத்தனை முறை கேட்டிருப்போம். எத்தனை லோக்கல் கிசுகிசுக்கள் அலசப்பட்டிருக்கும்! சரக்கென்று உயரும் கைகளின் நடுவே அக்குளுக்குள் கத்தி சுரண்டும்போது...இது எப்ப நமக்கு என்று ஆவென்று எங்கும் சிறுவர்கள்...!&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை விதமான கடைகள்....தரையிலிருந்து ஒரு அடி உயரத்துக்கு மேல், கள்ளிப்பெட்டியினால்  உருவாக்கப்பட்ட சிங்கிள் சேர் கடைகள்,   இயற்கை காட்சிகள், சினிமா போஸ்டர்கள், கவர்ச்சி கன்னிகளின் படங்களுக்கு நடுவே முகம் பார்க்கும் கண்ணாடிகளும் பதிக்கப்பட்ட சுவர்கள், மட்ட ரக பவுடர்களுக்கே உரிய மணம்,  சலூன்களுக்கே உரிய பிரத்யேக பிராண்டு கிரீம்கள், லோஷன்கள், கத்தியை சாணை பிடிக்க தொங்கும் ஒரு பெல்ட், சடாரென்று உதறப்பட்டு கபக்கென்று போர்த்தப்படும்  'வெள்ளை' சலவை துணிகள், மயிர் துண்டுகளை சேகரிக்க மூலையில் ஒரு டப்பா, கசங்கி கிடக்கும் தினத்தந்தி தாள்கள், நாளை கிழிக்கப்பட்டு கத்தி மீது படர்ந்து கிடக்கும் சோப்பை வழிக்க பயன்படலாம் அவை...., கத்திரிக்கோல், சீப்பு, கடக் கடக் என்று தலையில் பயணம் செய்யும் கிராப் வெட்டி என்று அழியாத கோலங்கள்! இன்று காலங்கள் மாறிய பிறகும் இவையெல்லாம் இன்னும் இருக்கின்றன பெரும்பாலான கடைகளில்.! நான் போகும் கடையில் கிராப் வெட்டிக்கு மின்சார இணைப்பு ஒரு கூடுதல் வசதியாக இப்போது தென்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கியங்களில் இவர்களை பற்றி ஏதேனும் குறிப்புகள் உண்டா? நாஞ்சில் நாடன், தோப்பில் முகமது மீரான், நாகராஜன் படைப்புகளில் இவர்களை சந்தித்ததுண்டு. திரைப்படங்களில் அபூர்வம். பழைய 'கடவுளை கண்டேன்' படத்தில் எம்.ஆர்.ராதா பார்பர் ஷாப்காரராக வந்து 'நாங்க மன்னரும் இல்லே, மந்திரி இல்லே, வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார்,' என்று பாடலுக்கு நடித்த காட்சி இருக்கிறது. பொய்க்கால் குதிரை, வறுமையின் நிறம் சிவப்பு, கிழக்கே போகும் ரெயில், இது நம்ம ஆளு, மாயக்கண்ணாடி, குசேலன்   என்று சில சித்தரிப்புக்கள் இருந்தன. மலையாளப்படங்களில் சீனிவாசன் போன்ற நடிகர்கள் பல படங்களில் இத்தகைய வேடங்களையும் சூழல்களையும் உருவாக்கியிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பொருளாதார நிலைகளில் உயர்ந்திருக்கும்  சலூன் கடைக்காரர்களையும் சந்தித்திருக்கிறேன். எங்கள் ஏரியாவில் பல கடைகளுக்கும் வீடுகளுக்கும் உரிமையாளர் ஒரு சலூன் அதிபர். காலையில் ஆறு மணிக்கெல்லாம் இவர் கடை திறந்து தொழில் செய்வதை பார்க்கலாம். எனக்கு ஒரு கோடீசுவரன் தான்  முடி வெட்டுகிறார் என்று நண்பர்களிடம் விளையாட்டாக சொல்வதுண்டு. இன்று சலூன் கடைகள் ஒரு குறிப்பிட்ட சாதியினரின் தொழிற் களமல்ல. அழகு நிலையம் என்ற பெயரில் இன்று பிராமணப் பெண்கள் கூட முடி வெட்டுகின்றனர்! ஏசி வசதிகள்,  தலை கழுவ வாஷ் பேசின்கள் , டிரையர்கள்,  முடி வெட்ட ஆயிரக்கணக்கில் என்று சலூன்களில் வசதிகள் பெருகி விட்டாலும்...இன்றும் நான் எங்களது சந்தில் சின்ன கடை வைத்திருக்கும் நண்பருக்காக அவர் கடை வாசலில் காலை ஆறு மணிக்கே காத்து கிடக்கிறேன். ..சைக்கிளில் வந்து அவர் கடையை திறந்து கூட்டி பெருக்கி, இலவச டிவியையும் ஆன் பண்ணி அழைக்கிறார்...&lt;br /&gt;'வாங்க'!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-5148552004950039802?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/5148552004950039802/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=5148552004950039802' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/5148552004950039802'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/5148552004950039802'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2011/03/blog-post_14.html' title='&apos;நாங்க மன்னரும் இல்லே......&apos;'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-3nNSQEx66LY/TX3Rwi8856I/AAAAAAAAAeI/VUsZj1Q9xb0/s72-c/barber.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-8643824462428990824</id><published>2011-03-11T01:34:00.000-08:00</published><updated>2011-03-11T01:37:38.980-08:00</updated><title type='text'>ஓவியம் வரைந்தால் போதுமா?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-JK0H80dNT18/TXntVeiTzbI/AAAAAAAAAeA/k-kv73wm2Ww/s1600/aDSC02103.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-JK0H80dNT18/TXntVeiTzbI/AAAAAAAAAeA/k-kv73wm2Ww/s320/aDSC02103.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5582754166332444082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நான் முதலில் பார்த்த ஓவிய கண்காட்சி எனது பன்னிரண்டு வயதில். ஆர்.எஸ்.புரம் லேடீஸ் கிளப்பில் யூசுப் புராவும் பிரகாஷ் சந்திராவும் நடத்திய நவீன ஓவிய கண்காட்சி  . என்னை விட நான்கு வயது இளைய தம்பியும் நானும் தனியாக சென்றோம். ஒரு ரூபாய் நுழைவு கட்டணம்...அது கூட கையில் இல்லை...திரு திரு என்று நின்று கொண்டிருந்த எங்களை பரிதாபமாக பார்த்த பிரகாஷ்ஜி இலவசமாக அனுமதித்தார். ஆர்வமுடன் பார்த்த எங்களிடம், எப்படி இருக்கின்றன ஓவியங்கள் என்று ஆங்கிலத்தில் வினவினார். 'ஒன்றுமே  புரியவில்லை' என்று பதிலளித்த என்னை பார்த்து வெடிச்சிரிப்பு சிரித்தார்...'வயதானால் புரிந்துவிடும்' என்று சொல்லி தட்டிக் கொடுத்தார்!!!&lt;br /&gt;&lt;br /&gt;வயதானது...புரிந்துவிட்டதா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி பருவத்தில் அதே பிரகாஷ் சந்திராவும் நண்பர்களும் ஆரம்பித்த சித்ரகலா அகாடமியில் மாணவ உறுப்பினராக இணைந்தேன் . ஓரிரு வருடத்தில் செயலாளர், பின் உதவி தலைவர், பின் தலைவர் என பொறுப்புகள் என் தலையில்....அவர்தான் என் நவீன ஓவிய குருவாக திகழ போகிறார் என்று குழந்தை பருவத்தில் நிச்சயமாக நினைத்திருக்க மாட்டேன். எத்தனை எத்தனை ஓவியக்காட்சிகள்...எத்தனை ஓவியர்கள் என் வாழ்க்கை பாதையில் ! நவீன ஓவியங்கள் குறித்து பல அன்பர்கள் 'புரியவில்லை', 'ஏமாற்று வேலை' என்றெல்லாம் விமர்சிக்கும்போது எனக்கு மிகவும் கோபம் வரும். இப்போதெல்லாம் வருவதில்லை என்பது ஒரு நல்ல விஷயம்! ஏனென்றால் எனக்கும் இந்த சந்தேகங்கள் வந்துவிட்டன. ஓவியங்களை ரசிக்கும்போது நான் பார்ப்பவை ஓவியரின் உத்திகள், வண்ணங்களின் பயன்பாடு, ஓவியத்தின் உள்ளடக்கம் மட்டுமே. ஓவியங்கள் பார்வையாளர்களுடன்  தொடர்பு கொள்ளும் ஒரு ஊடகம் என்பதில் எப்போதும் எனக்கு நம்பிக்கை உண்டு. அவனை அது தொடவில்லை என்றால் அந்த படைப்பு ஒரு தோல்வி என்றும் திடமாக எண்ணுகிறேன். சில அதி நவீன ஓவியர்களுடன் ஏற்படும் சூடான விவாதங்களில் காரசாரமாக பேசியிருக்கிறேன். ஓவியம் என்பது அவர்களின் சொந்த மன வெளிப்பாடு என்று சொல்லிக்கொண்டு கன்னா பின்னா என்று வரைந்து வைத்த ஓவியர்களிடம்..அப்ப இதை எதுக்கய்யா எங்கள் பார்வைக்கு வைக்கிறீர்கள்,  உங்கள் வீட்டுக்குள்ளேயே வைக்க வேண்டியதுதானே என்றெல்லாம் சண்டை போட்டிருக்கிறேன். இப்படி ஒரு சண்டையை ஆதிமூலம் அவர்களுடன் போட்டவுடன்தான் என் ஞானக்கண்ணை அவர் திறந்து வைத்தார்! பிறகு திறந்த மனதுடன் நவீன ஓவியங்களை ரசிக்க தொடங்கினேன். அவருடைய மனவெளி ஓவியங்களில் மனதை பறி கொடுத்தேன். மருதுவின் வீச்சுகள் எனக்கு வீரம் கொடுத்தன...கான்வாஸில்!&lt;br /&gt;முப்பத்தி மூன்று வருடங்கள் ஓவிய கண்காட்சி அனுபவங்களுக்கு பிறகும் அரூப ஓவியங்கள் கைகூடாததில் இன்னும் வருத்தம் ஓயவில்லை!!! எது என்னை தடுக்கிறது ?&lt;br /&gt;&lt;br /&gt;என் வளர்ப்பு முழுக்க முழுக்க சினிமா பேனர் பின்னணியில். என் தந்தை முறையாக ஓவியம் படித்ததுபோல் நான் பயிலவில்லை.புகைப்படத்தை போல தத்ரூபமாக ஓவியமும் திகழவேண்டும் என்ற பாரம்பரிய மன ஓட்டமே என்னையும் நடத்தி சென்றது. உருவங்களை சிதைத்து புதிய பாணியை உருவாக்கிய பிக்காசோவுக்கு இளமைக்காலம் இப்படித்தானே! பணிக்கர் முதல்வரான பிறகுதானே, சென்னை ஓவியக்கல்லூரியிலிருந்து இத்தகைய கலைஞர்கள் உருவானார்கள்! பிரகாஷ் சந்திரா போன்ற கலைஞர்களின் தொடர்பு என்னை மனமாற்றத்திற்கு உள்ளாக்கியது! சினிமா பேனர்களில் புதிய உத்திகளை கையாள தொடங்கினேன், என் தந்தையின் எதிர்ப்பை மீறி....புது வண்ண க்கலவைகள், பாரம்பரிய வண்ண பூச்சுகளில் மாற்றம் என்று உருவாக்கியபோது அதற்கும் ரசிகர்கள் உருவானார்கள். வேறு வழியில்லை...தந்தை பச்சை கொடி காட்டினார்! ஓவியக் கண்காட்சிகளிலும்  முயற்சித்தேன்....முயற்சி செய்து கொண்டே இருக்கிறேன்!!!&lt;br /&gt;&lt;br /&gt;ஓவிய காட்சிகளில் பல வகையான ஓவியங்களை பார்க்கிறேன். என் நண்பர் நெடுஞ்செழியன் எப்போதுமே பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுபவர். உத்திகளில் எப்போதும் அதீத ஈடுபாடு. அசுர உழைப்பாளி. முன்னாள் சென்னை ஓவிய கல்லூரி முதல்வர் பாஸ்கரன் பூனைகளை அதிகம் வரைந்தால் இப்போதைய கும்பகோணம் ஓவியக்கல்லூரி முதல்வர் மனோகரனின் ஓவியங்களில் வித விதமான உயிர்ப்புள்ள ஆடுகள் அதிகமாக மேயும் . ரஞ்சித் துணிகளின் சுருக்கத்தில் ஆழ்ந்து விடுவார். சந்தான கிருஷ்ணனுக்கு  கதவுகளின் மீது காதல் . புகைப்படங்கள் எடுத்து அதை அப்படியே தத்ரூபமாக வரைவது இளையராஜா போன்ற இளைய ஓவியர்களின் உத்தி! இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்!!!! தாந்திரீக ஓவியங்கள் என்று ஒரு சப்ஜெக்டை எடுத்து கொண்டு அதில் மிதப்பவர்கள் ஒரு வகையினர். தஞ்சாவூர் ஓவியர்கள், கண்ணாடி ஓவியர்கள், மண்கூஜா ஓவியர்களை எல்லாம் நான் இதில் சேர்க்கவில்லை!!!&lt;br /&gt;Installations என்று ஒரு வகை...ஓவிய அறையின் ஒரு பகுதியை தரை முதல் குறிப்பிட்ட அளவு வரை பொருட்களை வைத்து நிறைக்கும் ஒரு கலை என்று நான் சொன்னால் கொச்சையாக இருக்கும். ஒரு முறை ஒரு ஓவியர் தரையில் பெரிய கான்வாசை விரித்து வைத்து அதில் குழைய குழைய விலை உயர்ந்த வண்ணங்களை பூசி அதன் மேல் உள்ளாடை மட்டும் அணிந்து யோகாசன முத்திரைகள் புரிந்தார்..கான்வாஸின் மீது அவர் கரங்கள், கால்கள், புட்டங்கள் பதிந்த பகுதிகள் ஓவியமாக வெளிப்பட்டன! Newsprint காகிதத்தின் மீது கரியையும் எஞ்சின் ஆயிலையும் குழைத்து பூசி  விவான் சுந்தரம் வைத்திருந்த ஓவிய கண்காட்சியையும்  பார்த்திருக்கிறேன். நடிகர் சிவகுமார், பழநிசாமியாக இருந்தபோது ஸ்தலத்திலேயே போய் அமர்ந்து வரைந்த ஓவியங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வடக்கிலிருந்தும் நிறைய ஓவியர்களின் கண்காட்சிகள் இப்போதெல்லாம் காணக்கிடைக்கின்றன. ஓவியங்களை காட்சிக்கு வைப்பதே ஒரு பெரும் வியாபார உத்தியாக கையாண்டு வெற்றி காண்பவர்கள் இருக்கின்றனர். எங்களை போன்றவர்களின் ஓவியங்கள் அதிக பட்சமாக பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கும் . கஸ்தூரி சீனிவாசன் ஓவிய காலரி போன்ற சேவை மனப்பான்மை மிக்கவர்கள் இருப்பதாலேயே எங்களால் ஓவியங்களை காட்சிக்கு வைக்க முடிகிறது. ஆனால் சென்னை போன்ற நகரங்களில் இன்று தனியார் அரங்கங்கள் இரண்டு வாரத்திற்கு ஒன்றரை லட்சம் அளவிற்கு வாடகையே கொடுக்க வேண்டும் என்ற நிலை. அப்போது ஓவியங்களையும் அதிக விலைக்கு விற்க வேண்டும். உடனே வாங்கி விடுவார்களா என்ன? விலை உயர்ந்த அழைப்பிதழ்கள், காக்டெயில் பார்ட்டிகள்,  ஓவியரின் இமேஜை உயர்த்தும் உடை அலங்காரங்கள்,  ஆங்கில பத்திரிக்கை பேட்டிகள், விமர்சனங்கள் என்று பல சாமக்கிரியைகள் உண்டு. நல்ல ஓவியர்களுக்கே இந்த நிலை என்றால் அரை வேக்காடு ஆசாமிகள் எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும்..வடக்கு ஓவியர்களின் ஓவியங்கள் பிரம்மாண்டமான அளவில் பெரும்பாலும் வருகின்றன. பல சமயங்களில் தரமும் இருப்பதில்லை . விலையும் லட்சங்களில் ஓடும். அப்படிஎன்றால் யார்தான் இவற்றை விலைக்கு வாங்குகிறார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;Buyers அனைவரும் ஓவிய ரசனை மிக்கவர்களா? நிச்சயம் சில சதவிகிதத்தினர் உள்ளனர். அவர்கள் ஓவியங்கள் சில ஆயிரங்களில் கிடைத்தால், நண்பர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதற்கும், சொந்த உபயோகத்திற்கும் , தங்கள்  நிறுவனங்கள்  சார்ந்த கட்டிடங்களில் வைப்பதற்கும் வாங்குவார்கள். லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாங்குபவர்கள் யார்? ஓவியங்களை முதலீடாக கருதுபவர்கள்…..&lt;br /&gt;இன்று வாங்கி நாலு வருடம் கழித்து விற்றால் பல மடங்கு போகும் என்று கருதும் வியாபாரிகள். ஒரு உசைன் ஓவியத்தையோ, ஒரு ஆதிமூலம் ஓவியத்தையோ இப்படி வாங்கினால் ஒரு நியாயம் இருக்கும்...ஆனால் இன்று மார்க்கெட்டில் இருக்கும் அனைத்து ஓவியர்களின் படைப்புக்களையும் இப்படி விற்க முடியுமா?&lt;br /&gt;பெரும்பாலும் தரமற்ற ஓவியங்களும் இத்தகைய காட்சிகளில் வைக்கிறார்கள். நான் சமீபத்தில் பார்த்த ஒன்றில் குறைந்த விலையே 75,000ல் ஆரம்பித்து ஐந்தரை லட்சம் வரை விலையிட்டு இருக்கிறார்கள். யானையை குருடர்கள் கண்டது போல ரசிப்பவர்களும் உண்டு. நிர்வாணமாக போன அரசனின் இல்லாத உடையை ரசித்தவர்கள் போல இத்தகைய ஓவியங்களை ரசித்து பாராட்டினால்தான் நமக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்று பாராட்டி மகிழ்பவர்களும் உண்டு.  இத்தகைய களேபரங்களில் ஒரு சில போலி ஓவியர்கள் சத்தமில்லாமல் வறிய ஓவியர்களிடமிருந்து ஓவியங்களை வாங்கி, அதில் தங்கள் கையெழுத்தும் இட்டு  காட்சிக்கும் வைத்து விலைக்கும் வைக்கிறார்கள்...புத்திசாலிகள்!&lt;br /&gt;இனி உங்கள் ஏரியாவில் ஓவிய கண்காட்சி நடந்தால் தவறாது சென்று வாருங்கள் நண்பர்களே, குறைந்த விலைக்கு கிடைத்தால் கட்டாயம் ஒரு ஓவியமாவது வாங்கி வையுங்கள்!!!! யார் கண்டது, ஒரு நாள் அது அதிக விலைக்கு போகலாம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-8643824462428990824?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/8643824462428990824/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=8643824462428990824' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/8643824462428990824'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/8643824462428990824'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2011/03/blog-post.html' title='ஓவியம் வரைந்தால் போதுமா?'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-JK0H80dNT18/TXntVeiTzbI/AAAAAAAAAeA/k-kv73wm2Ww/s72-c/aDSC02103.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-4349184576557098926</id><published>2010-07-03T03:14:00.001-07:00</published><updated>2010-07-03T03:19:32.386-07:00</updated><title type='text'>தமிழ் படிக்காத தமிழ் எழுத்தாளர்.</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/TC8N06xiiOI/AAAAAAAAAZc/BYIg_hS81ww/s1600/new+DSCN1555.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/TC8N06xiiOI/AAAAAAAAAZc/BYIg_hS81ww/s320/new+DSCN1555.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5489621673569323234" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எப்படி அவருக்கு அப்படி ஒரு எண்ணம்  தோன்றியது? ஒரு சேட்டு பையன் ஆங்கிலம், இந்தி, தமிழ் என்று மூன்று மொழிகளில் பிளந்து கட்டுவதை பார்த்தவுடன் தாளவில்லை. தன் பையனும் அவன் படிக்கும் காண்வென்ட்டில்தான் படிக்கவேண்டும் என்று முடிவு கட்டி, வறுமையிலும் அங்கு சேர்த்துவிட்டார். நானும் அங்கு சேர்ந்து மும்மொழி திட்டம் இல்லாததால் ஆங்கிலமும் இந்தியும் மட்டும் படிக்க தொடங்கினேன். கான்வென்ட் சூழலுக்கு ஒவ்வாத தோற்றம்தான் , ஆனாலும் படிப்பில் சோடையில்லை.  தமிழ்மொழி என்னை விடவில்லை. பள்ளிக்கு நடந்து செல்லும்போதே..ஆற அமர சினிமா போஸ்டர்களின் தலைப்பை எழுத்துக்கூட்டி படிக்கத்தொடங்கினேன்.  அடுத்தது பத்திரிகைகளின் வால் போஸ்டர்கள், ஜனசக்தி, தினத்தந்தி , ஆனந்தவிகடன் என்று புரொமோஷன் கிட்டியது. அம்புலிமாமாவில் விக்ரமாதித்தன் கதை, பரோபகாரி பழனி கதைகள் , கண்ணன் பத்திரிக்கை என்று பயணம் தொடர்ந்தது. ஆறாம் வகுப்பு முதல் குஜராத்திகள் நடத்திய பள்ளிக்கு மாற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;என் தந்தை கம்யூனிஸ்ட் கொள்கைகளில் பிடிப்புள்ளவராக இருந்ததால் அவர் செல்லும் அனைத்து கூட்டங்களுக்கும் கருத்தரங்கம், பட்டிமன்றம் என்று எங்கே நடந்தாலும் என்னையும் அழைத்து சென்றுவிடுவார். பெரும்பாலும் கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய  நிகழ்ச்சிகள். இப்போதைய்ய  கெக்கே பிக்கே பட்டிமன்றங்களை போல இல்லை. பல பிரபலங்களை நேரில் காணும் வாய்ப்பும், அவர்கள் பேசுவதை கேட்கும் வாய்ப்பும் அந்த குழந்தை பருவத்திலேயே கிடைத்தது. ஜீவா, குன்றக்குடி அடிகளார், தா.பாண்டியன், ஜெயகாந்தன், கு.அழகிரிசாமி  என்று சொல்லிக்கொண்டே போகலாம். நியூ சென்சுரி நிறுவனத்தின்   மலிவுப்பதிப்பு குழந்தை நூல்கள் அத்தனையும் என் வசம் இருந்தன. படிக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது. ஆங்கில, இந்தி புத்தகங்களுடன் , தமிழ் காமிக்ஸ், குமுதம் என்று பல பட்டறையாக உருவானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய பள்ளியில் எனக்கு நெருக்கமானவர் யாரென்று யூகித்து இருப்பீர்கள்! நூலகர்தான். ஒன்பதேகால் மணிக்கு தொடங்கும் பள்ளியில் தனியாளாக எட்டு மணிக்கே இந்த ஜீவன் காத்துக்கிடக்கும்.  லொங்கு லொங்கென்று சிங்கானல்லூரிலிருந்து வடகோவைக்கு சைக்கிளை மிதித்து  வருவார் அந்த நல்ல மனிதர். 'ஏண்டா, காலையிலேயே உயிரை வாங்குறே' என்று செல்லமாக திட்டிவிட்டு கதவை திறந்துவிடுவார். அவ்வளவுதான், மாத, வார பத்திரிகைகள் முதல் கிடைத்த புத்தகங்களை எல்லாம் பள்ளி மணி அடிக்கும் வரை கரைத்துக்குடிப்பது என் அன்றாட வேலை. இந்தி மாணவனாக இருந்தாலும் என் ஆர்வத்தை கண்டு தமிழாசிரியர்களே வியந்து போயினர். அவர்களே படிக்காத நாவல்களை , நீல பத்மநாபன் எழுதிய 'தலைமுறைகள்', கே.பி.கேசவதேவ், எம்.டி.வாசுதேவன் நாயர் மொழிபெயர்ப்புக்கள் என்று நூலகத்தில் அனாதையாக கிடந்த புத்தகங்கள் என்று அத்தனையையும் வெறியுடன் படிக்க ஆரம்பித்துவிட்டேன். இந்தியிலும் சோடை போகவில்லை. உச்சரிப்புக்காகவே இந்தி நாடகத்தில் ஒரு சாமியார் வேடத்தில் நடிக்க வைக்கப்பட்டேன்.&lt;br /&gt;சினிமா பைத்தியம் என்னை பீடிக்க ஆரம்பித்ததும் பள்ளி நாட்களில்தான். பள்ளிக்கு அந்த பக்கம் சென்ட்ரல் தியேட்டர், இந்த பக்கம் ஸ்ரீனிவாஸ் தியேட்டர்...ஸ்டில்களையும் போஸ்டர்களையும் வெறித்து பார்த்துக்கொண்டிருப்பது பெரும் பொழுதுபோக்கு. வீட்டுக்கு பக்கத்திலேயே தென்னகத்தின் முதல் தியேட்டராக உருவெடுத்து வெரைட்டி ஹால் என்ற பெயரிலிருந்து டிலைட்  என்ற பெயரில் இயங்கிய இந்திப்பட தியேட்டர். மேலும் என் தந்தையின் தொழிலே திரைப்படங்களுக்கு பேனர் வரைவதுதான் என்னும்போது கேட்கவா வேண்டும்...அயல்மொழித்திரைப்படங்களின் பைத்தியம் ஆனேன். ஸ்கிரீன், பிலிம்பேர் பத்திரிகைகளை கரைத்து குடித்து வரப்போகும் படங்களின் கதை, நடிகர்கள் என்று நிரல் நுனித் தகவல்களுடன் நடமாடினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;டிலைட் தியேட்டர் முதலாளி அப்போது ராம் சொரூப் சேட்டு. இந்தி திரைப்பட  உலகின் பெரும் புள்ளிகளுடன் நெருக்கமானவர். ஓவ்வொரு வாரமும் இந்திப்படங்கள் மாறும். பம்பாயிலிருந்து போட்டோ கார்டுகள் வந்துவிட்டால் தியேட்டரிலிருந்து என் தந்தையை அழைக்க ஆள் வரும். சில சமயம் என்னை அனுப்பிவிடுவார். அலுவலக அறையில் மேஜை நாற்காலி இருந்தாலும், சேட் தரையில் ஒரு பெரிய மெத்தை விரித்து , திண்டுகள் சகிதம் படுத்துக்கொண்டிருப்பார். புகைப்படங்களை கொடுத்து யாரை பெரிதாக வரையவேண்டும்...யாரை வரையத்தேவை இல்லை என்றெல்லாம் உத்தரவிடுவார். அவர் சொன்னதை இந்த அதிகபிரசங்கி கேட்டதேயில்லை. எனக்குத்தான் அந்த படங்களின் கதை தெரியுமே. அவர் சொன்னதை மறுத்து..இந்த நடிகருக்குத்தான் கதையில் முக்கியத்துவம்...ஆகவே அவரைத்தான் பெரிதாக போடவேண்டும், இதில் நாயகிக்குத்தான் நல்ல பெயர்..அவரை பெரிதாக வரையலாம் என்று விளக்குவேன். சேட்டுக்கு எப்போதும் இது ஒரு ஆச்சரியம். ஒன்று..அவரை யாரும் மறுத்து பேசுவதில்லை. இரண்டு இந்த கருப்பு நிற பொடியன் இந்தி படங்களை பற்றி இவ்வளவு தெரிந்திருக்கின்றானே என்று.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு என் மீது  தாளா அன்பு பிறந்துவிட்டது. பிரத்தியேகமான வண்ண இந்தி திரைப்பட பாட்டு புத்தகங்களை ஒவ்வொரு பட ரிலீசின்போதும் என்னை அழைத்து கொடுப்பார். என் தந்தையை அங்கு வரக்கூடாது என்று உத்தரவிட்டு விட்டார். 'இனிமேல் ஆர்டர் வாங்க அவன்தான் வரவேண்டும்' என்று உத்தரவு. ' அவன் காலேஜ் முடிக்கட்டும், பம்பாயில்  ராஜ்கபூரிடம் அசிஸ்டென்ட் டைரக்டராக  சேர்த்துவிடுகிறேன்' என்று வேறு யாரும் கேட்காமலேயே வாக்களித்துவிட்டார். என் தந்தைக்கு பிடித்தது கிலி. பின்னே கலெக்டராக வரவேண்டிய மகன் சினிமா இயக்குனராவதா என்று பயந்து எம்.ஏ.படிக்க  சென்னைக்கு துரத்திவிட்டுவிட்டார். இப்படி சினிமா ஆசை மொட்டிலேயே கருக, சென்னை புதிய வாசல்களை திறந்துவிட்டது. காவலாளியே இல்லாத விக்டோரியா விடுதி வாசம், ஏராளமான நண்பர்கள், தினமும் திரைப்படங்கள், படிக்க நிறைய நூல்கள், நூலகங்கள், இலக்கிய கூட்டங்கள் என்று படிக்க போன அரசியல் அறிவியலை தவிர ஏகப்பட்ட வேலைகளில் மூழ்கி தெளிந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவைக்கு ஒரு அரைகுறை சினிமா அறிஞனாக மீண்டு வந்தேன். திரைப்பட ஆர்வலர்களின் ஜோதியில் கலந்தேன். அப்போது அங்கு பணியில் இருந்த அம்ஷன்குமார், அமரநாதன், ஞானி, புவியரசு, கவிஞர் சுகுமாரன் போன்றோர் அமைத்த திரைப்பட சங்கங்களில் ஆர்வத்துடன் பங்கெடுத்து மெருகேறினேன்(!)&lt;br /&gt;&lt;br /&gt;உச்சகட்டமாக ஒரு இலக்கிய கூட்டத்தில் நான் திரைப்படங்களை பற்றி பேசியதை கேள்விப்பட்ட நண்பர் மரபின் மைந்தன் முத்தையா அப்போது ஆரம்பிக்க இருந்த 'ரசனை' மாத இதழில் மாதம் ஒரு கட்டுரை எழுதச்சொன்னார். தமிழ் படிக்காத நான் எப்படி எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது நண்பர்கள் ஊக்குவித்தனர்.  அப்போது ஆரம்பித்து இன்னும் ஐந்து வருடங்களாக எழுதிக்கொண்டே இருக்கிறேன். முத்தையாவின் அடுத்த ஊக்குவிப்பில் கட்டுரைகள் ஒரு நூலாகவும் வந்துவிட்டது, 'திரைச்சீலை' என்ற பெயரில்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் படிக்காமல் தமிழ்நாட்டில் பட்டதாரியாக மட்டுமல்ல, தமிழ் எழுத்தாளராகவும் உருவெடுக்கலாம்!!!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-4349184576557098926?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/4349184576557098926/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=4349184576557098926' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/4349184576557098926'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/4349184576557098926'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2010/07/blog-post.html' title='தமிழ் படிக்காத தமிழ் எழுத்தாளர்.'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/TC8N06xiiOI/AAAAAAAAAZc/BYIg_hS81ww/s72-c/new+DSCN1555.jpg' height='72' width='72'/><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-5365679807762270422</id><published>2010-03-30T08:21:00.000-07:00</published><updated>2010-03-30T08:27:50.697-07:00</updated><title type='text'>தோல்பாவைகள் இனியும் ஆடும்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/S7IYZxvjXYI/AAAAAAAAAXU/5sx1DzXF4xw/s1600/newDSCN1454.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/S7IYZxvjXYI/AAAAAAAAAXU/5sx1DzXF4xw/s320/newDSCN1454.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5454448929827675522" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/S7IYZfQVkQI/AAAAAAAAAXM/XKZCvwjpnL8/s1600/newDSCN1463.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/S7IYZfQVkQI/AAAAAAAAAXM/XKZCvwjpnL8/s320/newDSCN1463.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5454448924864909570" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_bAkfWRFUpXM/S7IYY2r4DSI/AAAAAAAAAXE/7gjcv__lG78/s1600/newDSCN1456.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/_bAkfWRFUpXM/S7IYY2r4DSI/AAAAAAAAAXE/7gjcv__lG78/s320/newDSCN1456.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5454448913974562082" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_bAkfWRFUpXM/S7IYYos1SWI/AAAAAAAAAW8/fSmKUwk4g6k/s1600/newDSCN1447.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 208px;" src="http://4.bp.blogspot.com/_bAkfWRFUpXM/S7IYYos1SWI/AAAAAAAAAW8/fSmKUwk4g6k/s320/newDSCN1447.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5454448910220478818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பல பழங்கால கலைகளை பற்றி புத்தகங்களில் படித்துத்தான் தெரிந்திருக்கிறோம். நகரச்சூழலில் மட்டுமே வாழ்ந்து வந்ததனால் இழந்தது நிறைய. கணியான் ஆட்டத்தை பள்ளி நாட்களில் எங்கள் ஊர் காளி ஊட்டில்தான் பார்க்க கிடைத்தது. தெருக்கூத்தை நான் முதன் முதலில் பார்த்தது எங்கே என்றால் ஆச்சரியப்படுவீர்கள். எங்கோ கிராமத்தில் அல்ல! சென்னை புரசைவாக்கம் மில்லர்ஸ் ரோடு பவர் மேன்ஷன் வாசலில் இருந்த பேருந்து நிழற்குடையின் கீழ்தான்!! கதகளி ஆட்டத்தை கோவை நகரத்து ஆயுர்வேத நிலையம் ஒன்றில்தான் கோவை ஞானியுடன் பார்த்தேன். இப்படி போய்க்கொண்டிருக்கும் எனது வறண்ட வாழ்க்கையில் சமீபத்தில்தான் முதன் முறையாக தோல்பாவைக்கூத்து என்ற அற்புதக்கலையை நேரில் காணும் பாக்கியம் கிடைத்தது. அ.கா.பெருமாள் போன்ற அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் மூலம் இன்னும் சில கலைஞர்கள் குமரி  மாவட்டத்தில் வசித்து வருவதாக அறிந்திருக்கிறேன். அங்கிருந்தே கோவைக்கு வந்து ஒரு கலைஞர் ஒரு நிகழ்ச்சியை நிகழ்த்த இருப்பதாக நண்பர்கள் தட்சிணாமூர்த்தி  கல்யாணி தம்பதிகள் மூலம் அறிந்தேன்..&lt;br /&gt;&lt;br /&gt;'அட்மாஸ்' கோவை நகரத்தின் ஒரு நவீன காபி ஷாப். சுலபத்தில் கண்டுபிடிக்கமுடியாத ஒரு சிறிய சாலையில் இருக்கிறது. அங்குதான் இந்த கூத்து நிகழ்த்த இருப்பதாக அறிந்தேன். நாம் எப்போதுதான் இத்தகைய இடங்களுக்கு செல்வது! புதிய நண்பர்கள் பாலு, பிரபு சகிதம் சென்றேன். அங்கிருந்த வாடிக்கையாளர்களை கண்டு கொஞ்சம் மிரண்டது உண்மைதான். சக்கரை அதிகமாக ஒரு சாயாவை சாலையிலிருந்தே மாஸ்டரிடம் ஆர்டர் கொடுக்கும் ஆசாமியை பிளாக் பாரஸ்ட் கேக்கை நாசுக்காக சுவைத்துக்கொண்டு நீண்ட கோப்பைகளில் குளிர்பானங்களை வைத்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் யுவ யுவதிகள் சபையில் விட்டால் எப்படி இருக்கும்! திறந்த வெளியில் மேசைகளுக்கு நடுவில் வீற்றிருக்கும் மரத்தடி துளசி மாடம் அருகில் கட்டப்பட்டு காத்திருந்தது வெள்ளை திரை!&lt;br /&gt;&lt;br /&gt;லக்ஷ்மண ராவ் மிக எளிமையான மனிதராய் காட்சி அளித்தார். பல தலைமுறைக்கு முன் மராட்டிய தேசத்திலிருந்து வந்து இப்போது நாட்டின் கடைகோடியில் இருக்கிறார். ஆர்வத்துடன் தன் கையிலிருந்த கோப்பில் இருந்த சான்றிதழ்களை காட்டினார். பெரும்பாலும் உள்ளூர் கழகங்கள் அளித்தவை.. கசங்கிய தாள்கள்..லேமினேட் செய்ய சொன்னேன். தோவாளைக்கு அருகில் உள்ள சிற்றூரில் வசிக்கிறார். நூறு நாட்கள் வேலைத்திட்டத்திற்கு கூலி வேலைக்கு போகிறார்,  மனைவி சகிதம்.. கால் வயிற்ருக்கஞ்சிதான் உணவு.. அமரவே மறுக்கிறார். அவரை பற்றி குறிப்புக்கள் வந்த கட்டுரைகளையோ நூல்களையோ கேள்விப்பட்டதேயில்லை என்பது எனக்கு அதிர்ச்சியை  கொடுத்தது. கலைமாமணி பட்டத்தை கேள்விப்பட்டிருப்பாரோ என்னவோ! அவருடைய தோல்பாவைகளை அவரே வடிவமைத்து வெட்டி, நீர்வண்ணங்களை வஜ்ஜிரம் போன்ற பொருட்கள் கலந்து பூசி தயாரிக்கிறார். திரைக்கு பின் அவரது மனைவி, மகன், குட்டி மகள் அனைவரும் வாத்தியங்களுடன் தயாராக இருக்கிறார்கள்.  ராமாயணம் போன்ற நிகழ்வுகள் பல இரவுகள் நடக்குமாம்..இன்று பசுமையை காப்பது குறித்து அவரே எழுதிய நாடகம். ஒலிபெருக்கி இல்லை. முன்னுரைக்கு பின் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திரையில் விநாயகரின் உருவம் தோன்றிய பிறகு கட்டியங்காரனின் வருகை...லட்சுமண ராவ் என்ற எளிய மனிதன் மாபெரும் கலைஞனாக விஸ்வரூபம் எடுக்கும் நிகழ்வுகளின் ஆரம்பம். வரிசையாக கதாபாத்திரங்கள் தோன்றுகின்றன. மரங்கள், மண்டபங்கள், சோலை வனங்கள் என்று திரையின் ஓரங்களில் காட்சிக்கு ஏற்ப தோன்றி மறைகின்றன. குதிரை மீது மன்னர்கள் வருகின்றனர். கேலிச்சித்திரங்கள் போல தோன்றும் பல வித மனிதர்கள் கூடி பேசுகின்றனர், கேலி செய்கின்றனர், அடித்துக்கொள்கின்றனர். வயிறு வீங்கி பெரிய தொப்புளுடன் கூடிய ஒட்டைப்பல்லன், முன் வழுக்கை விழுந்து பின்னால் காவியேறிய மயிருடன் கூடிய மதினி, பிராமண பாஷை பேசும் அண்ணன் , மரத்தை வெட்டி விற்று திங்க துடிக்கும் தம்பி, ஊர் மக்கள் என்று வித விதமான மனிதர்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை குரல்கள், பேசும் பாணிகள், தனித்தனியாய் துடிக்கும்  உடல் பாகங்கள் ,  வித விதமான நடனங்கள் , பாடல்கள்....சொல்லிக்கொண்டே போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மெதுவாக எழுந்து திரைக்கு பின் செல்கிறேன். அமர்ந்திருக்கும் ராவின் பரபரக்கும் கைகள் படு வேகமாகவும் சாதுர்யமாகவும் இயங்கிக்கொண்டிருக்கின்றன.ஒரு கை விரல்களில் சிறு அசைவுகள், பிருஷ்டத்தை ஆட்டும் தடியனின் ஆட்ட வேகத்தை துரிதப்படுத்த, அவனுடன் ஜோடி சேர்ந்து ஆடும் பெண்ணின் இயக்கங்களை இன்னொரு கையின் விரல்கள் ஆட்டுவிக்கின்றன. ஆட்டத்திற்கேற்ப ராவின் குரல் வளைகள் வித விதமான் ஓசைகளை பாவத்துடன் ஒலிக்கின்றன. கால் விரல்கள் ஒரு சிறிய கயிற்றை ஒரு கட்டையுடன் இணைத்து அவ்வப்போது ஒரு பெரும் ஒலியை எழுப்பிக்கொண்டிருக்கின்றன. ஒரு தசாவதானியை இப்போதுதான் பார்க்கிறேன். அவர் குடும்பமே டோலக்கை இசைத்துக்கொண்டு பின் பாட்டு பாடிக்கொண்டிருக்கின்றனர்..அவரை சுற்றி தரையில் இறைந்து கிடக்கின்றன...இனி எதிர்காலம் அறியா தோல் பாவைகள்!!!&lt;br /&gt;&lt;br /&gt;விளக்குகள் ஒளிர்ந்தன. அந்த கலைஞன் மீண்டும் ஒரு எளிய கிராமவாசியாக மாறி சபைக்கு காட்சியளித்தார். நெகிழ்ந்த நெஞ்சங்களோடு விடை பெற்றோம்...இன்னும் சில நிகழ்ச்சிகளை தட்சிணாவும் யாணியும் 'சிறகுவிரி' சார்பில்   ஏற்பாடு செய்யப்போகிறார்கள். அடுத்த நாள் சுமதி நரசிம்மன் வீட்டில் ஒரு நிகழ்ச்சி, பிறகு ஒரு பள்ளியில் நிகழ்ச்சி என்று நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்.  'சிறகுவிரி' நிச்சயமாக இந்த கலைஞனையும் கலையையும் கைவிடாது என்ற நம்பிக்கை ஒளிர்ந்தது ..நாமும் துணை நிற்போம்!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-5365679807762270422?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/5365679807762270422/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=5365679807762270422' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/5365679807762270422'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/5365679807762270422'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2010/03/blog-post_30.html' title='தோல்பாவைகள் இனியும் ஆடும்'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/S7IYZxvjXYI/AAAAAAAAAXU/5sx1DzXF4xw/s72-c/newDSCN1454.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-7617910189801655053</id><published>2010-03-19T00:15:00.000-07:00</published><updated>2010-03-19T00:26:32.715-07:00</updated><title type='text'>ரசிகன்!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_bAkfWRFUpXM/S6MnEpNur2I/AAAAAAAAAW0/T8vDT1y2yqw/s1600-h/adimaipenn.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 160px;" src="http://2.bp.blogspot.com/_bAkfWRFUpXM/S6MnEpNur2I/AAAAAAAAAW0/T8vDT1y2yqw/s320/adimaipenn.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5450242934784831330" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;உலகத்திலேயே நம் தென்னிந்தியாவை போல் சினிமா நடிகர் ரசிகர் மன்றங்கள் இவ்வளவு சுறுசுறுப்பாக செயல்படுகின்றனவா என்று தெரியாது. எவன் நடிக்க ஆரம்பித்தாலும் ஒரு ரசிகர் நற்பணி மன்ற  பேனர் ஒன்று அந்த தியேட்டரில் தொங்குகிறது அவன் படத்துடன்..மற்றும் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஆலோசகர்  பெயர்களுடன். இப்போது பிளக்ஸ் அச்சிடும் பணியில் ஈடுபட்டு இருக்கும் என்னை போன்றவர்கள் படும் பாடு தனி கதை.இந்த துக்கடா மன்றங்களுக்கு இந்த ஆரம்ப நிலை நடிகர்களே பைனான்ஸ் செய்கிறார்கள். கொஞ்சம் வளர்ந்த நடிகர்கள்  என்றால் உடனே பதிவு எண், மன்றக்கொடி போன்ற காமெடிகளுடன்..முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் அல்லது சிறப்பு காட்சிகளோ உண்டு. பிளாக்கில் விற்பதுதான் இவர்களது முக்கிய சம்பாத்தியம். இப்போதெல்லாம் இவர்களுக்கு போட்டியாக ரோட்டரி சங்கங்கள் போன்ற அமைப்புக்களும் ஈடுபட்டு வருகின்றன.! விஜய், அஜீத், தனுஷ், ஜீவா போன்றவர்களிடம் எதை கண்டு இந்த ரசிகர்கள் மொய்த்து வருகின்றனர் என்றால் புரியவில்லை...சில நடிகர்களை ஜாதி அபிமானத்தோடு கொண்டாடுகின்றனர். தென் மாவட்ட திருமண பிளக்சுகளில் இப்போதெல்லாம் நாடார் வீடென்றால் சரத்குமார், தேவர் என்றால் கார்த்திக், தேவேந்திரர் என்றால் விக்ரம் &amp; பிரசாந்த் (இருவரும் ரத்த உறவுள்ள கசின்ஸ் என்பது நிறைய பேருக்கு தெரியாது) கட்டாயமாக இடம் பெறுகின்றனர். முத்துராமலிங்க தேவரையும் கார்த்திக்கையும் பேனர்களில் ஒன்றாக பார்க்கலாம்!! முதன் முதலில் இங்கு யாருக்கு ரசிகர் மன்றங்கள் அமைந்திருக்கும்? பாகவதர் அபிமானிகளும் சின்னப்பா அபிமானிகளும் இருந்தனர்..ஆனால் மன்றங்கள் இருந்தனவா? ஒரு வேளை எம்ஜியாருக்குத்தான் ஆரம்பித்திருப்பார்களோ! தியோடர் பாஸ்கரன், வெங்கடேஷ் சக்ரவர்த்தி போன்ற ஆய்வாளர்களிடம் கூட விசாரித்தேன். ஒரு முன்னாள் கவுன்சிலரிடம் விசாரித்தபோது அவர் சொன்ன ஓர் தகவல் உபயோகமாக இருந்தது. சாமையர் புது வீதியில் பாகவதருக்கு போர்ட் மாட்டி ஒரு மன்றம் இருந்ததாகவும், பின்னர் டி .ஆர்.மகாலிங்கத்துக்கும் அதே ஏரியாவில் ஒன்று அமைக்கப்பட்டதாகவும் சொன்னார். சிவாஜியும் எம்ஜியாரும் சமகாலங்களில் மன்றம் கண்டவர்கள் என்றும் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது மன்றங்களை ரசிகர்களே அமைத்துக்கொண்டனர். நடிகர்கள் அதற்கு பைனான்ஸ் செய்ததில்லை. ரசிகர் மன்ற காட்சிகள், டிக்கட் வாங்கி பிளாக்கில் விற்பது போன்ற வியாபாரங்கள் நுழைந்தவுடன் அரசியலும் தலைமை பீடங்களும் நுழைந்தன. மன்றங்கள் அரசியல் கட்சிகளின் அங்கங்கள் ஆகவும் ஒட்டு வங்கிகளாகவும் மாறின...குறிப்பாக எம்ஜியார், சிவாஜி மன்றங்கள்! கோவையில் மதுரையை போல் எல்லா நடிகர்களுக்கும் மன்றங்கள் இருந்ததில்லை. ஜெமினி கணேசனுக்கு ஒரு மன்றம் இருந்தது.... பள்ளி சிறுவனாக இருந்தபோதே ரசிகர்களின் செயல்பாடுகளை கவனிப்பேன்..எந்த புதிய படம் வருவதாக இருந்தாலும் ரசிகர்கள் எங்கள் கடையில் திரண்டுவிடுவார்கள்...என் தந்தையிடம் படத்தின் ஸ்டில்களை காட்டும்படி கெஞ்சுவார்கள். காட்டியவுடன்..இதை வரையுங்கள், அதை வரையுங்கள் என்று ஆலோசனை தர ஆரம்பித்துவிடுவார்கள். எனக்கு கடுப்பாக இருக்கும்..அப்படி வந்த 'கவுரவம் சிவாஜி மன்ற மறவர்' வேணு என் வாழ்நாள் நண்பர் ஆகிப்போனார்!&lt;br /&gt;&lt;br /&gt;வியட்நாம்   வீடு படத்திற்கு வாட்சை விற்று ஒரு வீடு செட்டிங்க்சை வண்டியில் வைத்து ஊர்வலமாகப்போன சேகர், இன்றும் சிவாஜிக்கு பேனர் வைக்கிறார், ஒரு முழுநேர கோவில் அர்ச்சகராக இருந்தும். கணபதி சிவாஜி செல்லக்குட்டி எண்பது 'நவரச' பாடல்கள் அடங்கிய சிவாஜி சிடியை தயாரித்து தெரிந்தவர்களுக்கெல்லாம் கொடுக்கிறார். கோவை மேயர் வெங்கடாசலத்திடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்ன செய்தி வியப்பாக இருந்தது. திருவிளையாடல் ரிலீசின்போது சிவன் வேடம் போட்டுக்கொண்டு கழுத்தில் பாம்புடன் ஊர்வலம் போனவர் சாட்சாத் இவர்தானாம்!! இன்னும் இது போல பல பேர். எம்ஜியார் பக்தர்கள் இன்றும் பழைய படங்களுக்கு பேனர் வைத்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடுகிறார்கள். 'உனக்காக  நான்' ரிலீசின்போது ஜெமினி ரசிகர்கள் சிவாஜிக்கு இணையாக கட் அவுட் வைக்கவேண்டும் என்று தகராறு செய்தது இன்னும் மறக்க முடியாதது.&lt;br /&gt;யோசித்து பார்க்கும்போது எம்ஜியார் ரசிகர்களாக இருந்தவர்கள் பின்னர் அவரது உதவியால் பெரும் பதவிகளையும் அனுபவித்தனர். சிவாஜி ரசிகர்களுக்கெல்லாம் அவர்களது கட்சியினால் எந்த பிரயோஜனமும் கிடைக்கவில்லை...கோவை குப்புசாமி, ராஜசேகரன் போன்றவர்கள் மட்டும் கொஞ்சம் அதிர்ஷ்டம் செய்தவர்கள்!! ரசிகர்களை வைத்து எம்ஜியார் கட்சி ஆரம்பித்து போன உயரத்தின் கீழ் படியை கூட சிவாஜி ரசிகர் மன்ற கட்சி தொடவில்லை..'என் தமிழ் என் மக்கள் ' என்று ஒரு டப்பா படம் எடுத்ததுதான் மிச்சம்! &lt;br /&gt;&lt;br /&gt;நடிகர்களின் முதலமைச்சர் ஆசை இந்த ஜாம்பவான்களிடம் தொடங்கி குஞ்சு குளுவான்களுக்கேல்லாம் பரவி..இன்று ரசிகர் மன்றங்கள் எல்லாம் , தத்தம் தலைவர்களை வருங்கால முதல்வர்களாக கருதி ஆர்ப்பரிக்கின்றன. சமீப காலம் வரை கரை வேட்டிகளுடன் உலவிய விஜயகாந்த் ரசிகர்கள் இன்று சோர்ந்து போயிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் பார்த்த கேள்விப்பட்ட ரசிகர்கள் பல வகை. கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் நான் சிறுவனாக இருக்கும்போது பார்த்த காட்சி இது. அருகருகே இரண்டு வெங்காயக்கடைகள்.ஒன்றின் சுவர் முழுவதும் எம்ஜியார் படங்களின் தினத்தந்தி முழுப்பக்க விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருக்கும். பக்கத்து கடையில் சிவாஜி விளம்பரங்கள். வாடிக்கையாளர்கள் தத்தம் விருப்ப கடைகளில் வெங்காயம் வாங்கலாம். என் ரொம்ப நாள் சந்தேகம் இரண்டு கடைக்கும் உரிமையாளர் ஒருவர்தானோ என்று!! தங்க பட்டறைகளில் தியாகராஜ பாகவதர் படம் கட்டாயமாக மாட்டப்பட்டிருக்கும். பூதப்பாண்டி ஜீவா சிற்றுண்டி நிலையத்தின் உரிமையாளரான என் சித்தப்பா, கடை முழுவதும் சிவாஜி ஸ்டில்களையும் , காலண்டர்களையும் அலங்கரித்து வைத்திருப்பார் . பாதி நேரம் வாடிக்கையாளர்களான எம்ஜியார் ரசிகர்களுடன் சண்டை நடக்கும். தோசைகளும் ரசவடைகளும் காய்ந்து கிடக்கும். என் மூத்த நண்பர் மறைந்த பேராசிரியர் ஆறுமுகம், தன் நாகர்கோவில் வீட்டில் சிவாஜி நடித்த பெரும்பான்மையான படங்களின் வீடியோ காசட்டுகளையும் 16mm பிரதிகளையும் வைத்திருந்தார்.  அயல் நாடுகளிலிருந்து  சேகரிப்புகள்.. அவர் சொல்வது போல சிவாஜி கத்தியால் உப்புமா கிண்டும் 'மருத நாட்டு வீரன்' போன்ற சில சாதாரண படங்களுக்கு கூட நாலைந்து பிரதிகள்! தன் அபிமான இசை அமைப்பாளர்களின் / பாடகர்களின் இசைத்தட்டுக்களை சேகரித்து வைத்து ரசித்துக்கொண்டிருக்கும் அன்பர்கள்...எஸ்.பி.பாலசுப்ரமணியம்  அவர்களின் பரம பக்தர் கோவை ரவி அவருடைய அனைத்து பாடல்களையும் சேகரித்து வைத்திருக்கிறார்! சங்கீத மேதைகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் பரம ரசிகர்கள் இருக்கிறார்களே.  சுஜாதாவை சும்மா பார்க்கவே பெங்களூர் பயணம் செய்த கல்லூரி நண்பர்கள் இருந்திருக்கின்றனர். ஜெயமோகனை கொண்டாடுபவர்கள் இப்போது உண்டு!!&lt;br /&gt;&lt;br /&gt;ரசிகர்களை செலுத்துவது எது...அந்த வயதா, இல்லை ஆர்வமா, தன்னை கவர்ந்த ஆளுமை மீதான பற்றா, விடை தெரியாத கேள்விகள்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-7617910189801655053?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/7617910189801655053/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=7617910189801655053' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/7617910189801655053'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/7617910189801655053'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2010/03/blog-post.html' title='ரசிகன்!'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_bAkfWRFUpXM/S6MnEpNur2I/AAAAAAAAAW0/T8vDT1y2yqw/s72-c/adimaipenn.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-6978852043036032375</id><published>2010-02-27T00:43:00.000-08:00</published><updated>2010-02-27T01:20:50.467-08:00</updated><title type='text'>டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்</title><content type='html'>எப்படி என் தந்தைக்கு அப்படி ஒரு சிந்தனை வந்ததென்ற தெரியவில்லை. ஒன்பதாவது படிக்கும்போதே என்னை சுறுக்கெழுத்து பயில ஒரு பயிற்சி நிலையத்தில் சேர்த்துவிட்டார்.  அவருடைய நண்பர்களிடம் என் பையன் இப்பவே ஷார்ட்ஹேண்டில் புகுந்து விளையாடுகிறான் என்று சொல்வதற்காகவோ என்னவோ! எலிக்குஞ்சு போல இருப்பேன். ஆர்வம் இருந்தாலும் சக மாணவர்களின் பொறாமை மற்றும் ஏளனப்பார்வை என்னை வாட்டியது. எல்லாம் எனக்கு பெரிசுகள். எனக்கு சுறுக்கெழுத்து மிகவும் பிடித்துவிட்டது. ஆங்கில மொழியின் மீது இருந்த பற்றும் இன்னொரு காரணம். என் ஆசிரியர் ஒரு கறார் பேர்வழி. மலையாள கத்தோலிக்கர். அவருக்கும் அப்போது சின்ன வயதுதான். நேரம் தவறாமை அவரது முக்கிய விதிகளில் ஒன்று. 6 மணி வகுப்புக்கு 5.45க்கு ஆஜராக வேண்டும். 5.46க்கு வந்தாலும் கெட் அவுட்தான். நாளைக்கு வாங்க என்று அனுப்பிவிடுவார். எல்லோரும் அவரை கரித்துக்கொட்டுவார்கள்..ஆனாலும் நகரின் மையப்பகுதியில் இருந்ததாலும் அவருடைய கண்டிப்பு பெற்றோர்களுக்கு பிடித்ததாலும் அங்கு எப்போதும் ஹவுஸ்புல்தான். தட்டச்சு வகுப்புகளுக்கு நமக்கு பிடித்த நேரம் கிடைக்காது. அவர் சொல்லும் நேரம்தான். பெருமழை பொழிவது போல் எந்திரங்களின் சோவென்ற சப்தத்திற்கிடையில் உள்ரூமில் அவர் டிக்டேஷன் கொடுக்கும்போது கவனமாக தொடரவேண்டும். ஹோம் ஒர்க்கிலும் படு கறார். வாரம் ஒரு முறை சுருக்கெழுத்து தியரியில் டெஸ்ட். ஒரு சின்ன தப்பு வந்தாலும் மீண்டும் டெஸ்ட் எழுதிவிட்டுத்தான் அடுத்த பாடம் தொடரப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;நானோ சின்னப்பையன். ஒரு கட்டத்திற்கு மேல் இந்த கண்டிப்பு தாங்க முடியவில்லை. மெதுவாக வகுப்புகளை கட் அடிக்க ஆரம்பித்தேன். வீட்டிலிருந்து கிளம்ப வேண்டியது. இன்ஸ்டிடியூட்டிற்கு எதிரே உள்ள கோனியம்மன் கோயிலுக்குள் சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்து வருவோர் போவோரையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு வீடு திரும்புவது வாடிக்கையானது. ஏன் வரவில்லை என்று கேட்கும் ஆசிரியரிடம் பள்ளியில் டெஸ்ட், காய்ச்சல் என்று சொல்லவேண்டியது. ஒரு முறை பள்ளியில் குறைந்த மார்க் வாங்கியவுடன் கண்டித்த என் தந்தையிடம் எல்லாவற்றிற்க்கும் காரணம் சுறுக்கெழுத்துதான் என்று பழியை போட்டு விட்டேன். அன்றோடு சுறுக்கெழுத்து வகுப்புகளுக்கு முழுக்கு.  ஆனால் சுறுக்கெழுத்து என்னோடு பசையாக ஒட்டிக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி இறுதித்தேர்வு முடிந்த கையோடு என்னை மீண்டும் அங்கே சேர்த்துவிட்டார் என் தந்தை. இப்போது கூடவே ஆங்கில தட்டச்சும். கல்லூரி, கம்யூனிஸ்ட் குடும்பத்துக்கே உரிய ருஷ்ய மொழி வகுப்புக்கள், கடையில் ஓவியம் வரைதல், எல்லாவற்றுக்கும் மேலாக விடாமல் சினிமா பார்த்தல் என்ற என்னுடைய அன்றாட அலுவல்களில் தட்டச்சும் சுறுக்கெழுத்தும் சேர்ந்து கொண்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இன்ஸ்டிடியூட்கள் ஒரு தனி உலகம். காலை 6 மணி முதல் ஓயாமல் இயக்கம். ஒவ்வொரு 10 நிமிட இடைவெளியிலும் 'அட்டையை பார்த்து அடிங்க' என்ற ஆசிரியரின் அசரீரி, ஹால்டா, பேசிட் இயந்திரங்களின் ஓசை, மெக்கானிக்குகளின் பந்தா, டைப்ரைட்டர் விற்பனை பிரதிநிதிகளின் வருகை, தங்கள் நேரத்துக்காக காத்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் என்று எந்நேரமும் கலகலப்பு. இதில் காதல் பறவைகளின் தனி டிராக் வேறு. கையில் சுருட்டிய பேப்பருடனோ நோட்டுப்புத்தகத்துடனோ வரும் பெண்களின் பின்னால் வரும் இளைஞர்கள்..  சிலர் வகுப்புகளில் இதற்காகவே சேர வருவார்கள். அவர்களை ஆசிரியர் சுலபமாக அடையாளம் கண்டு கொண்டு படுத்தும் பாடு இருக்கிறதே…பயங்கர காமடியாக இருக்கும்.  முதலில் அவர்களுடைய ஆங்கில அறிவை பரிசோதித்து, கேலியும் கிண்டலும் செய்து ஒரு வழியாக்கி ஓடவிட்டுவிடுவார். என்னுடன் படித்த நிறைய பேர் காதல் கணைகளில் சிக்கி தவித்தனர்…சிலர் திருமணம் கூட புரிந்தனர்.&lt;br /&gt;கறுப்பாக, சோடாபுட்டி கண்ணாடியுடன் எலிக்குஞ்சு போல் இருந்த நான் யாரும் சீண்டாததால் தப்பித்து வாழ்ந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;தட்டச்சும் சுருக்கெழுத்தும் எனக்கு சரளமாக வந்தன. எந்த சிறு தவறும் இல்லாமல் கீ போர்டை பார்க்காமல் படு வேகமாக நான் டைப் அடிப்பதை பார்க்க ஒரு கூட்டமே கூடும். அதே போல சுறுக்கெழுத்தும். என் ஆசிரியர் என்னை தன் பள்ளியின் சூப்பர் ஸ்டாராக அறிவித்து கொண்டாடத் தொடங்கிவிட்டார். அரசுத் தேர்வு பயிற்சிக்காக என்னை வெளி பள்ளிகளுக்கு தனி பயிற்சிக்காக அனுப்பி வைப்பார். வெவ்வேறு குரல்களுக்கும் ஏற்ற இறக்கங்களுக்கும் தனி கவனம் எடுப்பார். லோயர், ஹையர் என்று இரண்டிலும் முதல் வகுப்பு. 25 வருடங்களாக தமிழ்நாட்டில் யாரும் தேர்வாகவே முடியவில்லை என்று சொல்லப்பட்ட (உண்மையா என்று தெரியவில்லை) லண்டன் சேம்பர் ஆப் காமர்ஸ் தேர்வில் சுறுக்கெழுத்தில் முதலிடம் என்று கலக்கினேன். பல குழுக்கள் நடத்திய தேர்வுகள் எதிலும் சோடை போகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி முதுகலைப்பட்டம் முடித்தவுடன் விளையாட்டாக கோவை ஸ்டேன்ஸ் காபி கம்பெனிக்கு விண்ணப்பித்தேன். சுலபமாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். என் தந்தைக்கு ஒரே மகிழ்ச்சி . ஸ்டேன்ஸ் முதலாளி ஒரு காலத்தில் ஸ்டெனோவாக இருந்தவராம். காலையில் டிக்டேஷன்.  இரண்டு கடிதங்களை டைப் செய்தேன். மதியம் சாப்பிட்டு வருவதாக சொல்லி வீட்டுக்கு வந்தேன். வேலைக்கு நான் போகமாட்டேன் என்று என் தந்தையிடம் சொன்னேன். காரணம் கேட்டார். யாரோ ஒருவர் டிக்டேட் செய்ய நான் எழுதுவது எனக்கு பிடிக்கவில்லை என்றேன். ஐஏஎஸ் தேர்வுக்கும் தயாராகிக்கொண்டிருந்ததால் என் தந்தை சரியென்று சொல்லிவிட்டார்.  என் வாழ்க்கையில் நான் வேலைக்கு போன சரித்திர பிரசித்தி பெற்ற அரை நாள் அன்றுதான். ஒரு முறை UPSC ஸ்டெனோகிராபர்ஸ் தேர்வில் அயல்நாட்டு சரவீசுக்கு எழுத்துத்தேர்வில் ஜெயித்து..ஸ்டெனோகிராபி தேர்வுக்கு சென்னைக்கு அழைத்திருந்தனர். நியூ செஞ்சுரி புக் ஹவுசில் இருந்து ஒரு போர்ட்டபிள் எந்திரத்தை இரவல் வாங்கிக்கொண்டு சென்னை சென்றேன். முதலில் சுறுக்கெழுத்து தேர்வு முடிந்தது. அடுத்து அதை தட்டச்சு செய்யவேண்டும். என்னுடைய அசுர வேகம் தாளாமல் தட்டச்சு எந்திரத்திலிருந்து ரிப்பன் தெறித்து வெளியே வந்தது. ஒன்றும் புரியாமல் கொஞ்ச நேரம் விழித்து விட்டு எல்லாவற்றையும் அள்ளி பெட்டியில் திணித்து விட்டு வெளியேறி..எமரால்டு தியேட்டரில் சஞ்சீவ்குமார் நடித்த அர்ஜøன் பண்டிட் பார்க்க போய்விட்டேன்…&lt;br /&gt;&lt;br /&gt;என்றுமே ஸ்டெனோ ஆக விரும்பாமல் வெற்றியும் அடைந்து விட்டேன். இப்போதும் எங்கள் இன்ஸ்டிடியூட் இயங்கிக்கொண்டு இருக்கிறது. அந்த பக்கம் போனால் எட்டிப்பார்ப்பேன். அதே வயலட் கலர் இங்க் பேனா, ஒரு பேட், அதே மேஜை, அதே பிட்மேன் புத்தகம், வயதே ஆகாத என் ஆசிரியர் பி.வி.பால் அதே உற்சாகத்துடன் வரவேற்பார். பல சமயங்களில் ஒரு மாணவர் கூட இருப்பதில்லை. சில சமயம் யாராவது ஒரு குட்டிப்பெண் டைப் அடித்துக்கொண்டிருப்பார். உடனே அவளை வரவழைப்பார். .'அப்புறம் அடிக்கலாம்மா.. இங்கே வா..இது யார் தெரியுதா'. என்று ஆரம்பித்து என் சாதனைகளை எடுத்துரைப்பார்..  நெளிந்து கொண்டு கேட்பேன், அந்த பெண்ணின் நிலையும் அதுதான். . அதெல்லாம் ஒரு காலம் என்று மீண்டும் தொடர்வார். 'இவரோட தம்பிங்க கல்யாணசுந்தரம், மணிகண்டன் எல்லோரும் என் சிஷ்யங்க' என்ற ரீதியில் போகும்..  'சார், இன்னும் ஏன் சார் இதை நடத்திட்டு இருக்கீங்க, ஒரு கம்ப்யூட்டர் சென்டர் ஆரம்பிக்கலாமில்ல' என்ற கேட்டால் பதில் வராது. காலி சேர்களுடன் இருக்கும் தட்டச்சு அறையை ஒரு முறை பார்த்துவிட்டு சத்தமாக சிரிப்பார், எனக்கு நேரம் தவறாமையை போதித்த என் குருநாதர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறையும் அங்கிருந்து வேதனையோடுதான் வெளியேறுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-6978852043036032375?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/6978852043036032375/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=6978852043036032375' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/6978852043036032375'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/6978852043036032375'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2010/02/blog-post_27.html' title='டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-5694972165753356894</id><published>2010-02-05T03:21:00.000-08:00</published><updated>2010-02-05T03:24:32.598-08:00</updated><title type='text'>எப்பவும் நான் ராஜா!!</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_bAkfWRFUpXM/S2v_5J6Dh1I/AAAAAAAAAWM/gY9i5Jo5FHE/s1600-h/ilaiyaraja.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 226px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/_bAkfWRFUpXM/S2v_5J6Dh1I/AAAAAAAAAWM/gY9i5Jo5FHE/s320/ilaiyaraja.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5434718732729681746" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;விடிந்தால் சென்னைக்கு கல்லூரியில்  சேர செல்லவேண்டும்...மாலையில் சிறை அரங்கத்தில் அன்னக்கிளி படத்தின் 58 வது நாள் விழா. சிவகுமார், இளையராஜா என்று பெரிய ஆட்கள் வருகிறார்கள்ஆவலோடு விழாவிற்கு சென்றேன்.  விழாவுக்கு வந்த கூட்டம் முழுக்க இளையராஜாவுக்கு வந்த கூட்டம். அவருடைய  இசை நிகழ்ச்சியும் உண்டு...ஒரு திரைப்படம் வெளியான இந்த குறைந்த நாட்களில் பெரிய ஆள் ஆன அந்த உருவத்தில் சிறிய மனிதனை பார்க்கத்தான் கூட்டம்!&lt;br /&gt;டப்பா படங்களையே வெளியிட்டு வந்த அத்தாணி பாபு இந்த படத்தை  வாங்கியிருந்தார். ஸ்டில்களுடன் அந்த படத்தின் பாடல்கள் அடங்கிய ஈபி ரெகார்ட் கவர் ஒன்றையும் கொடுத்தார். வண்ணத்தில் ஒரு கருப்பு மனிதனின் படம்..இசை அமைப்பாளர் என்று வெளியாகியிருந்தது. ஒரு புதிய சகாப்தத்தை படைக்கபோகிறவர் என்ற உணர்வு அப்போது ஏற்படவில்லை. படம் இருதயா தியேட்டரில் வெளியாகி டப்பாவுக்குள் போகும் நிலையில் பாடல்களால் சூடு பிடித்து கிடு கிடு என்று பற்றத்தொடங்கியது...எங்கு பார்த்தாலும் மச்சானை பார்த்தீங்களாதான்!!! படம் ஹிட்..வெற்றிவிழா என்று ஒரே கலக்கல்தான்...மேடையில் பேனர் வரைந்ததற்காக எங்கள் நிறுவனத்திற்கு ஒரு (கேடையம் எதுவும் ஸ்டாக் இல்லாததால்) வாட்ச் பரிசு...இளையராஜா கையால்தான் வாங்குவேன் என்று முதலிலேயே அத்தாணி பாபுவிடம் விண்ணப்பம்..வெள்ளை சட்டையை வெள்ளை பேண்ட்டில் இன் செய்திருந்த அந்த குட்டையான மாமனிதனிடம்..அப்போது அவரை விட குட்டியாயிருந்த இந்த பொடியன் எங்கப்பா சார்பில் இதை வாங்கினான்!  மறக்க முடியாத கணங்கள்!!&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம்..இசையறிவு அப்படி என்னதான் இருந்தது...காலையில் பாடும் ராகம் என்னவோ...என்று தம்பி கேட்டவுடன்...நீளமாக ஆலாபனை செய்து 'பூபாளம்' என்று ராவணன் சொல்லி கேட்டது மட்டும்தான்...எல்லோரையும் போலவே திரைப்பாடல்கள் மட்டுமே இசை ரசனையை கொடுத்தன. டேப் ரிக்கார்டர் அப்போதுதான் பரவிக்கொண்டிருந்தது...மேடைகளில்   வணக்கம் பலமுறை சொன்னேன்...என்று தமிழ்ப்பாடலில் சம்பிரதாயமாக ஆரம்பித்து பின்னர் ஷர்மிளியும், யாதோன் கி பாராத்தும், பாபியும் மட்டுமே  கேட்கக்கிடைத்த காலம்...! எங்கும் யாவரும் இந்தி பாடல்களையே கேட்டு மகிழ்ந்திருந்தபோது...புறப்பட்டதுதான் ராஜாவின் பயணம்! ஏற்கனவே ஜி.கே.வெங்கடேஷின் பாடல்களை  புதிய பாணியில் 'பொண்ணுக்கு தங்க மனசு' போன்ற படங்களில் கேட்டபோது...ஏற்பட்ட சந்தேகம் அவருடைய உதவியாளராக அறிமுகப்படுத்தப்பட்ட ராஜாவின் பாடல்களை கேட்டபோது தெளிந்தது...பட்டி தொட்டியெல்லாம் மேடையில் கம்யூனிச கானங்களை முழங்கிய பாவலரின் தம்பி என்ற ஹோதா...அதற்க்கு முன்னரே பத்மா சுப்பிரமணியம் குடும்பத்து பெண்கள் வெளியிட்ட தமிழக   நாட்டு பாடல்கள் என்ற கேசட்டின் பாடல்கள் அன்னக்கிளியின் மூலத்தை பறைசாற்றின. அந்த கேசட்டும் கவரும் இன்னும் என்னிடம் ராஜாவின்  பெயருடன் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதும் எம்.எஸ்.வி., கே.வி.எம்., போன்ற இசை அமைப்பாளர்கள் புகழின் உச்சியில் இருந்தாலும்..புதுமுக நடிகர்கள், புதுமுக இயக்குனர்கள் , புதிய பாணி திரைப்படங்கள் என்று கிளம்பி வந்த காலத்தில் உறுதுணையாய் இருந்தது ராஜாவின் இசை. பாமர ரசிகர்கள் கூட பின்னணி இசையின் அனுபவத்தை உணரத்தொடங்கிய காலம். ரீரிக்கார்டிங் சூப்பர் மா என்று யாரை பார்த்தாலும் பேசிக்கொண்டிருந்தது ஒரு ஆச்சரியமான திருப்பம்! பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்னம் என்று புறப்பட்ட பட்டாளம் இசை இளையராஜா என்ற டைட்டில் கார்டுடந்தான் ஆரம்பித்தனர்..சலீல் சவுத்ரியுடன் ஆரம்பித்த பாலு மகேந்திராவும் இந்த வரிசையில் சேர்ந்தவர்!! ஒரு இசை அமைப்பாளருக்கு கட் அவுட் வைக்கத் தொடங்கியது இவருக்குத்தான். பூஜை, இன்று முதல் விளம்பரங்கள் எல்லாமே நடிகர்களின் படங்களுக்கு ஈடாக இவருடைய போட்டோ, மற்றும் பட்டங்களுடன் வெளியிடத் தொடங்கினர்! இளையராஜாவும் ஒரு சாமியார் தோற்றத்தில் தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார்..கடும் பணிகளுக்கிடையே ஏராளமான படங்களுக்கு பாடல்களையும் பின்னணி இசையையும் தந்தார். எங்கள் கடையில் பேனர் வரையும்போது அவருடைய பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவோம்..இதனால் என் சக சிவாஜி / எம். எஸ்.வி. ரசிகர்களின் கோபத்துக்கு  ஆளானேன். தியாகம், தீபம் போன்ற படங்கள் வந்தபோது முன்னவர்கள் சமாதானம் ஆனார்கள்.!&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி, கமல், மைக் மோகன் போன்றவர்களின் படங்களில் இளையராஜா கட்டாயம் ஆனார். ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், ராஜாவின் தம்பி கங்கை அமரன்  போன்ற அடுத்த தலைமுறையினரின் படங்கள் பாடல்களுக்காகவே ஓடின. பாலசந்தர் போன்ற இயக்குனர்கள் கூட ராஜாவை அணுக நேர்ந்தது அவர்களுக்கே கஷ்டமாக இருந்திருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலமாக இளையராஜா அதிருப்தியாளர்களுக்கு ஒரு புதிய வழி பிறந்தது...அது ரகுமானின் வரவு. பாலசந்தரின் சொந்தப்படமான ரோஜாவுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மலையாள இசை அமைப்பாளரான எ.கே.சேகரின் மகனும் விளம்பர ஜிங்கிள்ஸ் இசை அமைப்பாளருமான இந்த இளைஞர் இசை மற்றும் தொழில்நுட்ப கலவைகளை சிறந்த முறையில் உருவாக்கி  பெரும் புகழ் பெற ஆரம்பித்தார்...மணிரத்னம், பாலசந்தர், பாரதிராஜா போன்றவர்கள் அப்படியே முகாம் மாறினர். ராஜாவுக்கு அப்படியே மாற்றாக தோற்றம் தர ஆரம்பித்தார் ரகுமான். இமேஜ் பில்டிங் , மக்கள் தொடர்பு, எல்லாவற்றிலும் ரகுமான் முன்னிலைபடுத்தப்பட்டார். இவர் பரதேசி கோலம் என்றால் அவர் கார்ப்பரேட் ஸ்டைல்..உடை, சிகையலங்காரம் அனைத்தும் நிபுணர்களாலும் விளம்பர எஜெண்டுகளாலும் முடிவெடுக்கப்பட்டு அவருடைய பயணம் திட்டமிட்டு அமைக்கப்பட்டு இன்று ஆஸ்கார், கிராம்மி வரை சென்று விருதுகளை அள்ளி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இளையராஜா, ஒரு முசுடு, கஞ்சன், அல்பம் என்பது போல் ஒரு திட்டமிட்ட சித்தரிப்பு தமிழ் ஊடகங்களில் நிலவி வருகிறது..பலரால் ஒரு கருப்பு தலித் பேர்வழி இவ்வளவு உயரங்களை அடைந்ததை ஜீரணிக்க முடியவில்லை என்றுதான் நான் கருதுகிறேன். அவருடைய இசையை பற்றி ஒரு வரி விமர்சிக்க அருகதை இல்லாதவர்கள் அவருடைய பிற தன்மைகளை கடுமையாக சாடுகிறார்கள். சிலருக்கு அவரை பிராம்மணவாதியாக சித்தரிப்பதில் ஆனந்தம்.  செம்மங்குடியின் அறையில் உள்ள ஒரே ஒரு புகைப்படம் இளையராஜாவினுடையது என்று ஒரு புலனாய்வாளர் சித்தரிக்கிறார்..ஆயிரக்கணக்கான பாடல்களில் 'கனவு காணும் வாழ்க்கை யாவும்' போன்ற ஒன்றிரெண்டை கண்டுபிடித்து, அவரிடமோ பாலு மகேந்திராவிடமோ கேட்காமல் இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் காப்பியடிக்கப்பட்டவை என்று தீர்ப்பளிக்கிரார்கள்  பலர்.  ஆதாரமில்லாமல் அவர் பேசியதாக எதையோ சொல்லி கடுமையாக சாடுகிறார்கள் சிலர்..ஒட்டுண்ணி எழுத்தாளர்களோ பேட்டி காண வந்த நிருபருக்கு பச்சை தண்ணி கொடுக்க மறுத்த கஞ்சன் என்று புதுக்கதை புனைகிறார்கள். எத்தனை எத்தனை தாக்குதல்கள்.  என் அபிமான கட்டுரையாளரும் நண்பருமான ஷாஜி கூட அவருடைய குணநலன்களை கடுமையாக விமர்சித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தது ஒரு அதிர்ச்சி..நியாயமான காரணங்களை அவர் கூறினாலும்...மனதுக்கு கஷ்டமாக இருந்தது...என்ன செய்வது...என் மூளைக்குள் எங்கோ ஒரு இளையராஜா ரசிகன் பதுங்கியிருக்கிறானே!.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஆளுக்கு தகுந்த அளவுகோல்களை ஊடகங்கள் வைத்திருக்கின்றனவோ என்பதுதான். பி.ஆர்.வேலைகளில் படு வீக்கான ராஜாவை எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அடிப்பவர்கள் பிறரிடம் தாள் பணிந்து நிற்பது காமெடியாக இருக்கிறது. இந்திய திரைப்பட பாடல்கள் ஒப்பீட்டில் ஒரு சாதாரண பாடலான 'ஜெய்   ஹோ'  இத்தனை விருதுகளை குவிக்கும் அரசியலும் பின்புலமும் , எந்த புலனாய்வு எழுத்தாளர்களாலும் விவாதிக்கப்படுவதில்லை...தேசிய பெருமிதம் தடுக்கும் போலிருக்கிறது. ஒருவருடைய மத நம்பிக்கை மற்றும் செயல்களும் விவாதிக்கப்படும்போது, இன்னொருவரை சவுகரியமாக மறக்கக்கூடிய வசதிகள் இங்கிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சரி எங்கேயோ  ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன். 'அதர்மம்' பட பூஜை ஏவிஎம்மில். என் தம்பியின் முதல் படம் என்பதால் போயிருந்தேன். கடும் மழை.. எங்கும் சேறும் சகதியும்...வெள்ளை வெளேர் செருப்பை கழற்றி வைத்துவிட்டு இளையராஜா உள்ளே வந்து வணங்குகிறார். வெளியே வரும்போது நெரிசலில் ஒரு தள்ளு முள்ளு. செருப்பை மாட்ட குனிகிறார். பதட்டப்பட்ட என் நண்பர் ஒருவர் பச்சக் என்று தன் சேற்று காலை செருப்பின் மீது வைக்க..செருப்பு ஒரே கண்றாவியாகிவிட்டது...ராஜாவின் இமேஜ் குறித்து ஒரு வித எண்ணம் கொண்டிருந்த நண்பர் நடுங்கி விட்டார்...வாய் குழற எதோ சொல்ல வந்த அவரை ராஜா சமாதானப்படுத்தி, குனிந்து தேங்கி நின்ற நீரில் செருப்பை அலசி அணிந்து கொண்டு வெளியேறினார். &lt;br /&gt;&lt;br /&gt;அவரை கடைசியாக நேரில் நான் பார்த்தது அப்போதுதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-5694972165753356894?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/5694972165753356894/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=5694972165753356894' title='27 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/5694972165753356894'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/5694972165753356894'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2010/02/blog-post.html' title='எப்பவும் நான் ராஜா!!'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_bAkfWRFUpXM/S2v_5J6Dh1I/AAAAAAAAAWM/gY9i5Jo5FHE/s72-c/ilaiyaraja.jpg' height='72' width='72'/><thr:total>27</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-3863180408536096974</id><published>2009-08-24T06:18:00.000-07:00</published><updated>2009-08-24T06:21:50.324-07:00</updated><title type='text'>சுற்றுலா போகலாம் வாங்க!</title><content type='html'>பள்ளி நாட்களில் கல்விச்சுற்றுலா என்பது மறக்க முடியாதது. வாழ்க்கையில் பார்க்கமுடியாத பல விஷயங்களை பள்ளியில் படிக்கும்போது சர்வ சாதாரணமாக பார்த்திருக்கிறோம் என்பது சாதாரண விஷயமா? நம்மில் எத்தனை பேர் சட்டை பொத்தான் தயாரிக்கும் தொழிற்சாலைக்குள் போயிருக்கிறீர்கள்? HMT வாட்ச் உருவாகுவதை பார்த்திருக்கிறீர்களா? அட மைசூர் சாண்டல்  சோப் தொழிற்ஸாலைக்குள்ளாவது போயிருக்கிறீர்களா? இதையெல்லாம் நான் பள்ளி நாட்களிலேயே சாதித்துவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றுலா  குறித்து நோட்டீஸ் போர்டில் பார்த்தவுடனேயே பரபரப்பு தொற்றிக்கொள்ளும்..பணத்தை கட்டி முன்பதிவு செய்யவேண்டும். ஒரு வேளை இடம் கிடைக்காவிட்டால்...? புறப்படும் தினத்தன்று அதிகாலையிலேயே பெட்டியுடன் பள்ளிக்கு ஓடிச்சென்று, டிரைவர் இருக்கைக்கு மிக அருகில், முன்சீட்டை பிடிக்க வேண்டும்..அப்போதுதான் சாலைக்காட்சிகள் நன்றாக காணக்கிட்டலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி சுற்றுலா  உண்மையிலேயே ஒரு அற்புதமான அனுபவம். பெற்றோர்களை பிரிந்து இருக்கும் நான்கு நாட்கள். ஆசிரியர்களின் அரவணைப்பு. வகுப்பு தோழர்களுடன் உல்லாசம். ஜூனியர் சீனியர் மாணவர்களுடன் நட்பு..ஓட்டல் சாப்பாடுகள், எல்லாவற்றுக்கும் மேலாக புதுப்புது  இடங்கள். சில சிரமங்களும் இருந்தன. குளியல், நம்பர் டூ போதல் போன்ற விஷயங்களுக்கு அந்த சிறு வயது, நம்மை சரியான நேரத்திற்கும் கூட்டத்துடன் அனுசரிக்க கற்று கொடுக்காததால் தடுமாறச்செய்யும்.  &lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி சுற்றுலா நினைவுகள் சாகும் வரை கொஞ்சம் கூட மங்காமல் நம்மை தொடர்ந்து வருவது ஒரு அற்புதம். ஒரு முறை  நான்கு நாட்களுக்கு செலவுக்கு என் தந்தை கொடுத்த இருபது ரூபாயில் பத்தை தொலைத்துவிட்டேன். அறுபதுகளின் இறுதி ஆண்டுகள். மூன்றாவது நாள், சாப்பிட காசு இல்லை. காரைக்காலில் ஒரு ஓட்டலில் சக மாணவர்களும் ஆசிரியர்களும் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். நான் வாசலில் பிச்சைக்காரனை போல நின்று கொண்டிருக்கிறேன். கையை துடைத்துக்கொண்டு வெளியே வந்த ஆசிரியர், எங்களால் புளியோதரை, நடையன் என்றெல்லாம் அழைக்கப்பட்டவரும், கையில் விரல்களால் ஊசியை போல வலிக்கும்படி கிள்ளக்கூடியவருமான  அவர் என்னிடம் ஏண்டா வெளியில் நிற்கிறாய் என்று உறுமுகிறார். பசியும் ஆற்றாமையும் அழுகையாய் வெடிக்கிறது. பணம் தொலைஞ்சு போச்சு சார் என்று கதறுகிறேன். கொடுங்கோலன் என்னை அன்புடன் உள்ளே அழைத்து சென்று நான் சாப்பிட்டு முடிக்கும் வரை உடன் இருந்து பில்லுக்கும் பணம் கொடுத்து   விட்டு, என்னிடமும் ஒரு பத்து ரூபாய் தாளை திணிக்கிறார்.  ஊருக்கு திரும்பியவுடன், பெட்டியை முழுவதும் காலி செய்து பார்க்கும்போது ஒழுகிய தேங்காய் எண்ணையில் ஊறிப்போய் கிடக்கிறது அந்த தொலைந்து போன பத்து ரூபாய்!&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வயதில் பார்த்த இடங்கள்தான் எத்தனை! திருச்சி மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், கல்லணை, தஞ்சை பெரிய கோவில், காரைக்கால், வேளாங்கண்ணி, நாகூர், சென்னையில்   மூர் மார்கெட், ரயில் நிலையத்துக்கு அருகே இருந்த மிருகக்காட்சி சாலை, மவுண்ட் ரோட், அங்கேயிருந்த பிரம்மாண்டமான சினிமா பேனர்கள் , என் அபிமான சிவாஜியின் சாந்தி தியேட்டர், மெரீனா பீச், பிற்பாடு நான் படிக்கப்போகும் மாநிலக்கல்லூரி, பெங்களூர், மைசூர், பிருந்தாவனம், HMT வாட்ச்  பாக்டரி, சந்தன சோப் தொழிற்சாலை, மாண்டியா சர்க்கரை ஆலை, மதுரை கோவில், அழகர் கோவில், திருப்பரங்குன்றம், நாயக்கர் மஹால்.....அடடே பதினைந்து வயதுக்குள் எத்தனை இடங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;சரி, உங்களில் எத்தனை பேர் சினிரமா படங்கள் பார்த்திருக்கிறீர்கள்? மூன்று ப்ரோஜெக்டர்கள் வழியாக பிரம்மாண்டமான திரையில் ஒரே உருவமாக , அதாவது மூன்று பாகங்களின் ஒரே உருவமாக காட்டப்படுவதுதான் சினிரமா. இதன் சிறப்பம்சம் துல்லியம் மற்றும் பிரம்மாண்டம். தென்னாட்டில் இரண்டே தியேட்டர்களில் மட்டுமே திரையிட முடியும்..அவை பெங்களூரில் உள்ள கபாலியும் சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் பைலட்டும் தான். நான் ஒன்பதாவது படிக்கும்போது பெங்களூர் சுற்றுலாவில் ஒரு சினிரமா படத்தின் போஸ்டர்களை பார்த்தேன். 'The Seven wonders of the World' என்பது படத்தின் பெயர். அப்போதே நான் சினிமாவை ஒரு கலை என்று உணர்ந்த ரசிகன். எப்படியாவது அந்த படத்தை பார்க்காவிட்டால் மண்டை உடைந்துவிடும் என்ற நிலை. பகல் முழுவதும் ஆசிரியர்களை நச்சரித்து..கடைசியில் வெற்றி எனக்கு. இரவுக்காட்சியில் கபாலியின் குளிர்ந்த திரையரங்கில் பிரம்மாண்டமான் திரையில் அந்த படத்தை வாயை பிளந்து அத்தனை மாணவர்களும் பார்த்தோம். அதற்கு பிறகு இந்தியாவில் சினிரமா படங்கள் வரவேயில்லை, அந்த வகைப்படங்களும் அழிந்து போயின!&lt;br /&gt;&lt;br /&gt;முதன் முதலாக திரைப்பட ஷூட்டிங்கை பார்த்ததும் பள்ளி சுற்றுலாவில்தான். மகாபலிபுரத்தில் கமலா மூவீசின் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு. கே.பாலசந்தர் இயக்கிக்கொண்டிருக்கிறார். தினத்தந்தி சினிமா செய்திகளை படித்தே தமிழறிஞரான நான், அதன் நாயகன் சிவாஜியை தேடுகிறேன்...என்ன ஏமாற்றம், ஒரு பாடலுக்கு ஆடிக்கொண்டிருந்தது சிவகுமாரும் வெண்ணிற ஆடை நிர்மலாவும். எல்லா பசங்களும் ஆட்டோகிராப் வாங்க துடித்துக்கொண்டிருக்கிறார்கள். தயாரிப்பாளர் எம்.ஆர்.சந்தானம் , வாங்கப்பா, நான் ஆட்டோகிராப் போடுகிறேன் என்று கிண்டல் செய்துகொண்டிருக்கிறார்....இந்த படம் வரவேயில்லை. வா ராஜா வாவின் ஷூட்டிங் இன்னொருபுறம். இதை இயக்கிக்கொண்டிருந்தவரோ அருட்செல்வர் ஏபிஎன்.  குழந்தை பருவத்தில் இதை விட சந்தோஷங்கள் என்ன வேண்டும்!&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இத்தகைய கல்வி சுற்றுலாக்கள் உள்ளனவா? பெரும்பாலும் இல்லை என்பதே அந்த அதிர்ச்சி தகவல்கள். என் பள்ளி பருவத்தில் நான் பார்த்த இந்த இடங்களை என் குழந்தைகள் பார்த்ததில்லை! நமது பாரம்பரிய பெருமைகள் பள்ளி நாட்களில் குழந்தைகளுக்கு போய் சேர்வதில்லை. இப்போதெல்லாம் கல்வி சுற்றுலா என்பது பல நூறுகள் செலவழித்து, கேளிக்கை பூங்காக்களுக்கு போய் சுகாதாரமற்ற நீர் விளையாட்டுக்களில் ஆட்டம் போடுவதுதான். கொச்சின், பெங்களூர் வரை தாவளம் போட்டிருக்கும் இத்தகைய கேளிக்கை மையங்களின் முகவர்கள் பள்ளி முதல்வர்களை சந்திக்கின்றனர். பெரும் பரிசுகள் கை மாறுகின்றன . முதல்வர்களின் குடும்பத்தினருக்கு வேறு தேதிகளில் அங்கு பெரும் உபசாரங்கள் காத்திருக்கின்றன. ஒரு பள்ளியில் ஆயிரம் மாணவர்கள் என்றால், அத்தனை பெரும் வெவ்வேறு தேதிகளில் ஒரே இடத்துக்கு பயணித்து, ஊசிப்போன பிரைட் ரைசையும் தின்று , உடம்பையும் கெடுத்துக்கொண்டு திரும்பி வருகிறார்கள். பயனடைவது இத்தகைய சுற்றுலா தளங்களை கட்டி சம்பாதிப்பவர்களும், இந்த பள்ளி முதல்வர்களும். இழப்பவர்கள் அற்புதமான அனுபவங்களையும் ,பண்பாட்டு செல்வங்களையும் மறுக்கப்பட்ட பாவம் மாணவர்கள்தாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-3863180408536096974?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/3863180408536096974/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=3863180408536096974' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/3863180408536096974'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/3863180408536096974'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2009/08/blog-post.html' title='சுற்றுலா போகலாம் வாங்க!'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-2619063925984116391</id><published>2009-07-28T01:12:00.000-07:00</published><updated>2009-07-28T05:03:07.584-07:00</updated><title type='text'>இடியட் பாக்ஸ்</title><content type='html'>அறிவியல் வளர்ந்தாலும் வளர்ந்தது, மூட நம்பிக்கையையும் உரம் போட்டு வளர்க்கின்றனர் சில அறிவியலாளர்கள்.  தமிழ் டிவி சேனல்களை சொல்கிறேன். எப்பொழுது திரும்பினாலும் திரைப்படம் மற்றும் சீரியல்கள் போக, ஒன்று ரிக்கார்ட் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கின்றனர் அல்லது குரல் வளப்போட்டி நடந்துகொண்டிருக்கின்றது. நீதிபதிகளாக நடிகைகளும்  பாடகர்களும் தங்கள் கருத்துக்களை அள்ளி விட்டுக்கொண்டிருக்கின்றனர். கெமிஸ்ட்ரி என்னும் அறிவியல் சொல் அடிக்கடி இங்கு இடம் பெறுகிறது. மற்றபடி பார்த்தால், ஜோதிடர்களும் வைத்தியர்களும் தூள் கிளப்பிக்கொண்டிருக்கின்றனர். பெரிய சேனல்கள் போக, லோக்கல் சேனல்களும் இவர்களை நம்பியே வாழ்கின்றன. எனக்கு இத்தகைய நிகழ்ச்சிகள் மிகவும் பிடிக்கும். கூசாமல் அள்ளி விடும் பொய்கள்தான் எத்தனை இனிமையாக இருக்கின்றன. இவர்கள் பெரும்பாலும் பெயருக்கு முன்னாள் Er.  என்று வேறு போட்டுக்கொள்வது விசேஷம். பொறியாளர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டமே வராது போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு என்ஜினீயர் ஜோதிடர் கீச்சுக்குரலில் கத்தும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. மழுமழு என்று ஷேவ் செய்த முகம். வழக்கம் போல ஒரு அழகான இளம்பெண். பிரச்சினைகளை முகத்தில் தேக்கிக்கொண்டு கஸ்டமர். மனித உரிமைகள் குறித்த ஒரு மாத இதழ் நடத்துகின்றாராம்.ஒண்ணும் போணியாவதில்லையாம். கீச்சுக்குரல் அலறுகிறது -'நீங்கள் வார இதழின் இடது மேல் மூலையில் ஒரு சரஸ்வதி படம் போடணும். வீணை வாசிக்கிற சரஸ்வதி. ஒரு நீளமான ஓவல் ,புளூ கலரில் இருக்கவேண்டும் , அதுக்குள்ளே இந்த சரஸ்வதி இருக்கவேண்டும். இதை மட்டும் போடுங்க, எங்கேயோ போய் விடுவீங்க...' கஸ்டமர் பாதி தெளிந்துவிடுகிறார். 'சரிங்க, ஒரு அமவுண்ட் சென்னையிலிருந்து வரவேண்டும்...அதுக்கு...' என்று ஒரு கொக்கியை போடுகிறார். 'அட, எல்லாமே சரியாப்போயிடும் என்று சொல்றேன்..., அந்த பணமும் வந்து விடும்...'இதை விட என்ன வேண்டும்? இவர் அடிக்கடி காம்பியர் பெண்ணிடம் ஜோக்கும் அடிப்பார். அவர்களும் லிப்ஸ்டிக் கலையாமல் சிரிப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தம்பதி இதில் புகழ் பெற்றவர்கள். கணவர் யூல் பிரின்னர் போல் மொட்டை அடித்துக்கொண்டு கோட் அணிந்து கொண்டு எனர்ஜி மருத்துவம் செய்வார். ஒரு அலுமிநியபெட்டியில் பழைய ஜேம்ஸ் பாண்டு காலத்திய உபகரணங்களை வைத்துக்கொண்டு எனர்ஜி ட்ரீட்மென்ட் கொடுப்பார். ஹார்ட் அட்டாக்கால் துடிக்கும் பூவிலங்கு மோகன் அப்படியே ரிவர்சில் குணமடைந்து சிரிக்கும் அந்த விளம்பரம் நினைவிருக்கிறதா?&lt;br /&gt;&lt;br /&gt;இவர் மனைவி ஒரு பெயர் மாற்ற நிபுணர். பீல்ட் அவுட் ஆன ஒரு நடிகை இவர் சார்பாக கஸ்டமர்களிடம் கேள்விகள் கேட்பார். இவர் கரும்பலகையில் ஒரு வினாடியில் கேள்வி கேட்டவரின் தலைவிதியையே மாற்றிவிட்டு புன்னகை செய்வார். எல்லாமே எவ்வளவு சுலபம் பார்த்தீர்களா...எனர்ஜி ட்ரீட்மென்ட் தோல்வியடைந்தால் கூட அதே கூரைக்குள் பெயரில் ஒரு ஸ்பெல்லிங்கை மாற்றி தப்பித்துவிடலாம் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெயர் மாற்றம் செய்வது பெரிய வேலைதான். இதில் முன்னோடியான 'சோழ' மன்னர் ஒருவரின் ஆர்ப்பாட்டமான நிகழ்ச்சி ஒரு புறம் என்றால், ஆன்மீக வெளியில் நனைந்தது போல் அமைதியாக தோற்றமளிக்கும்  'பார்மெட் நியூமெராலாஜியின்' தந்தை ஒருபுறம். இசைஞானியே கொஞ்சம் சதை போட்டு பெயர் மாற்ற வந்துவிட்டாரோ என்று யாரையும் ஒரு நிமிடம் தடுமாறச்செய்யும் தோற்றம். டைட்டில் காட்சியிலேயே திருவண்ணாமலை கிரிவலம் வருகிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். &lt;br /&gt;&lt;br /&gt;ராசிக்கல் நிபுணர்கள் ஒரு தனி ஜாதி. பெயர்களில் இருந்து வரும் அதிர்வுகள் ஒரு வகை என்றால், இவர்கள் தரும் குட்டி கற்களில் இருந்து வரும் வைப்ரேஷன்கள் ஆளையே புரட்டிப்போட்டுவிடும். படிக்காதவன் படிப்பான். அடங்காப்பிடாரர்கள் சாதுவாகிவிட, உங்கள் வியாபாரம் ஓகோவென்று செழித்தோங்கும். மேலதிகாரிகள் சீட்டிலிருந்து எழுந்து உங்களுக்கு சல்யூட் அடிக்கலாம், எதிரிகள் உங்கள் காலடியில் குழைந்து கிடக்கலாம். ஒரே ஜாலிதான் இந்த மோதிரங்களை அணிந்துகொண்டால். ஒரு காலத்தில் பூசி மெழுகிய தோற்றத்தில் நகைக்கடை அதிபராகவே பல ஜென்மங்களில் பிறந்திருக்கக்கூடிய ஒரு என்ஜினீயர் இதில் கலக்கிக்கொண்டிருந்தார். டிவி பார்த்து எங்கள் உறவினர் ஒருவர் இவர் கடை வாசலில் நின்று அடம் பிடித்து தன இரண்டு மகன்களுக்கும் ராசிக்கல் மோதிரம் வாங்கிச்சென்றார். ரூபாய் ஐம்பதாயிரம் அவுட். மெடிக்கல் சீட்டுக்காகத்தான் இந்த விட்டலாச்சாரியா வேலை. எந்த சீட்டும் கிடைக்கவில்லை என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்கு தெரிந்திருக்கும் . இப்போதும் சில மார்வாடிகளும்  சில பட்டுப்புடவை பெண்மணிகளும் இத்தகைய நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வைத்தியர்களும் ஆன்மீகவாதிகளும் இன்னொரு ரகம். கங்கைக்கரையில் அமர்ந்து அருளுரை வழங்கும் சங்கரரின் கார்பன் காப்பிகளும், சென்னை நகரில் வாழும் சில ஒயிட் &amp; ஒயிட் சாமிகளும் புகுந்து விளையாடுகிறார்கள்.கிறிஸ்துவ பேச்சாளர்கள் பாடவும் செய்கிறார்கள். பூங்காக்களில், ஏற்கனவே பதிவு செய்த பாடல்களுக்கு வாயசைத்து , ஆடவும் செய்கிறார்கள். கண்கொள்ளா காட்சி. ஒரு பெரிய குடும்பத்தின் கடைக்குட்டி பாப்பா கூட கண்ணீர் மல்க 'பாவிகளுக்காக' இறைவனிடம் மன்றாடி அழுகின்றது. தினத்தந்தியில் ஒரு காலத்தில் முழுப்பக்க விளம்பரங்கள் தந்து வாலிப வயோதிக அன்பர்களுக்கு கடாக்ஷம் வழங்கியவர்கள் இப்போது தொலைக்காட்சிகளில் ஆணித்தரமாக ஆதாரங்களை புட்டு புட்டு வைக்கின்றனர்.  சில நம்பள்கி நிம்பள்கி  வைத்தியர்களும் சிறுநீரகம் முதல் புற்று நோய் வரை எதையும் விட்டு வைக்க தயாராகயில்லை. ஒரு கீரையையே பிராண்டாக்கி பிரம்மாண்ட மாளிகையும், ஒட்டகங்களும், யானைகளும், பட்டாடைகளும், கிரீடங்களுமாக ஒரு வைத்தியர் ராஜபோகமாக காட்சியளிக்கிறார். சென்ற வாரம் ஒரு ராஜவைத்தியர் மான்கறி, புலிக்கறி  வைத்தியம் செய்வதாக பல லட்சங்களை கறந்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;லோக்கல் சேனல்கள்தான் சூப்பர். ஒரு சாமியார் வருகிறார். கூட அழகிய இளம்பெண்ணிற்க்கு பதிலாக ஒரு ரிட்டயர்டு ஆசிரியர். அவர் இவரிடம் கேள்விகளை கேட்பார். இடை இடையே  தொலைபேசி அழைப்புக்கள். &lt;br /&gt;'சாமி, எனக்கு மூணு நாளா மூச்சுபிடிப்பு...'&lt;br /&gt;'நாளைக்கு ஒரு நாள்...வீதியிலே....லாட்ஜிலே....நம்பர் ரூமிலே இருப்பேன். எழுவத்தி அஞ்சு ரூபா கொண்டு வாங்க. ஒரு பொடி தர்றேன்..சரியாப்போகும்' என்று சீப்பாக விஷயத்தை முடித்துக்கொண்டு தொடர்வார்.&lt;br /&gt;'உங்க பின்னாலே பச்சை ஷர்ட் போட்டுட்டு நிக்கிறானே பையன், நேத்து ஸ்கூலில் ஒரு ஜாமெட்ரி பாக்சை தொலைத்தானே, கிடைச்சுதா' என்று தன்  ஞானத்ருஷ்டி  பிட்டை தூக்கி நம் மேல் போடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஒரு மந்திரவாதி இங்கு தொலைக்காட்சிகளில் தோன்றுவார். உடனே தெலுங்கு ப்பட மந்திரவாதியை கற்பனை செய்யாதீர்கள் . இவர் ஏதோ வங்கி உத்தியோகஸ்தர் போல தோன்றுவார். சகட்டு மேனிக்கு போன் செய்பவர்களை திட்டுவார். எல்லோரும் இவரை கிண்டல் செய்வதாக எண்ணம்..ரசமணி, மாந்திரீகம், வர்மம், என்றெல்லாம் அடுக்கிக்கொண்டே , இவற்றை வைத்து உங்கள் சகல பிரச்சினைகளையும் அடுத்த நாள் மதியத்திற்குள் தீர்த்து வைத்துவிடுவார். பாரத்தை தூக்கி என் மேல் போடுங்கள் என்று இந்த காலத்தில் யார் சொல்வார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;வாஸ்து நிபுணர்கள், அக்குபங்சர் நிபுணர்களும் தங்கள் பங்குக்கு உங்களுக்கு உதவ காத்துக்கிடக்கின்றனர். சில உள்ளூர் சேனல்களின் சிக்கன நடவடிக்கையால் தொடர்ந்து இரண்டு மூன்று நிபுணர்களுக்கு ஒரே இளம் பெண் காம்பியராக பணி புரிய நேரும்போதுதான் அடப்பாவமே என்று தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வைத்தியர் அடிக்கடி இப்படி நேரலையில் தோன்றுவார். கண், மற்றும் பல் தவிர எதையும் பார்க்கமாட்டார். ஒரு ரிஷியின் பெயரை தனக்கு முன்னாள் சேர்த்துக்கொண்டவர். ஒரு நாள் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..கடும் பல்வலியுடன் ஒரு நேயர் அழைக்கிறார். இவர் சொல்கிறார்,&lt;br /&gt;'அய்யா, இன்று நான் நடத்துவது வேறு நிகழ்ச்சி, இன்று வைத்தியம் பார்ப்பதில்லை, நாளை இதே நேரத்தில் அழையுங்கள், பதிலளிக்கிறேன்.'&lt;br /&gt;ஆம், முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சி. லிங்க் வணிகம். ஆயிரம் ரூபாய் போட்டால் அடுத்த வருடம் நாற்பத்தி ஏழே முக்கால் கோடியும், சில லட்சங்களும் அள்ளித்தரக்கூடிய அற்புத நிகழ்ச்சி. சில பத்திரங்களையும் நமக்கு காட்டுகிறார். சட்டப்படி நடக்கிறதாம்...&lt;br /&gt;ஒரு நாள் அகத்தியர், அடுத்த நாள் சுக்ராச்சாரியார்....டபுள் ஆக்ட்!&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் பல ஆசாமிகள் இருக்கிறார்கள்...ஆனாலும் இவர்களை நான் கிண்டல் செய்ய மாட்டேன். யார் கண்டது, அடுத்த வருடம் நானே அங்கு அமர்ந்து வாஸ்து வியாபாரமோ மந்திரக்கல் விற்பனையோ நடத்தலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-2619063925984116391?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/2619063925984116391/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=2619063925984116391' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/2619063925984116391'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/2619063925984116391'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2009/07/blog-post.html' title='இடியட் பாக்ஸ்'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-7681881662820053708</id><published>2009-05-05T07:54:00.000-07:00</published><updated>2009-05-05T07:57:25.683-07:00</updated><title type='text'>கோவை கபே</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SgBToAvMAvI/AAAAAAAAAOA/zxJh4XAooAU/s1600-h/javvu+mittai.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 190px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SgBToAvMAvI/AAAAAAAAAOA/zxJh4XAooAU/s320/javvu+mittai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5332353905664459506" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தேன் மிட்டாய்தான் நான் ரசித்து உண்ட முதல் இனிப்பு என்று நினைக்கிறேன். கெட்டியாக இருப்பது போன்ற பாவனையுடன் உள்ள தோலைக்கடித்தால் உள்ளே ஜிவ்வென்று பாயும் இனிப்புப்பாகு. இப்போதும் எங்காவது கிடைக்கலாம். ஆனால் அதே  ருசி இருக்காது என்று அதன் மீதே சத்தியம் செய்வேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பள்ளியின் வாசலிலும் இரண்டொரு கிழவிகள் சாக்கை விரித்து, அதன் மீது இலந்தைபழம், இலந்தைவடை என்று அழைக்கப்படும் இடித்து குழைந்த இலங்தையையும் கமர்கட் போன்ற பல்வேறு மிட்டாய்களையும் விற்பார்கள். மாங்காய் பத்தை , பேரிக்காய், ப்ளம்ஸ், சீசனுக்கு தகுந்தாற்போல்  கிடைக்கும். நெல்லிக்காய், சில சமயங்களில் சாயமும் சேர்த்து கிடைக்கும். முனிசிபல் பள்ளியாயிருந்தாலும் கான்வென்டாக இருந்தாலும் இது ஒரு பொதுவான காட்சி. நான் கான்வெண்டிலிருந்து கிக்கானி பள்ளிக்கு இடம் பெயர்ந்தபோது புதுப்புது காட்சிகள். கோன் ஐஸ்க்ரீமையே அப்போதுதான் பார்க்கிறேன். அதுவரை கோன் என்பது அட்டையினால் தயாரிக்கப்பட்டது என்றே நினைத்திருந்தேன். எங்கும் கிடைக்காது என்று சொல்லப்பட்ட கணக்கு புத்தகம் வாங்க என் தந்தை தந்த காசு முழுவதும், ஸ்கூல் பின் கதவு அருகில் மதிய இடைவேளையில் கோன் ஐஸாக கரைந்தது. சின்ன வயதில் எங்கள் ஊருக்கு சென்றபோது, பக்கத்து வீட்டில்  வசித்து வந்த கோவில் பணியாளர்கள் வாங்கி வந்த உண்ட கட்டியை சாப்பிடவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து சாப்பிட்டிருக்கிறேன். கோவில் மடப்பள்ளியில் சமைக்கப்பட்ட இந்த சோறுதான் கோவிலின் கடைநிலை ஊழியர்களான துப்புரவாளர்கள் , வாத்தியம் இசைப்பவர்கள் முதல் அர்ச்சகர்கள் வரை உணவாக திகழும். சில அறிவிலிகள் பிராமணர்களை 'உண்ட கட்டி' என்று அழைக்கும்போது சிரித்துக்கொள்வேன். எந்த கோவிலுக்கு போனாலும் முதலில் பிரசாதக்கடைக்குத்தான் விஜயம். திருப்பதிக்கு போகாவிட்டாலும் சென்று வந்த யாரிடமும் சிறிதும் வெட்கமில்லாமல் லட்டு பிரசாதத்தை கேட்டு வாங்கி தின்பது இன்றும் என் வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி இருந்த இடத்தின் அருகே காமராஜபுரம் என்று ஒரு குடியிருப்பு. பெரும்பாலும் நகரசுத்தி தொழிலாளர்கள் வாழும் பகுதி. பிளாட்பாரத்தில் பெரிய தட்டுக்களில் வேக வைத்த மரவள்ளிக்கிழங்கு பாளம் பாளமாக கடும் மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும். எங்கள் வீட்டிலும் மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் இந்த நிறத்தில் அல்ல. மிளகாயும் உப்பும் கலந்து அரைத்த துவையலை, அல்லது மிளகாய்ப்பொடி எண்ணையை  தொட்டு வெள்ளை  நிறத்தில் தொண்டைக்குள் வெண்ணையை போல் வழுக்கிச்செல்லும். பள்ளியின்  வாசலில் எப்போதும் பதநீர் வாரியத்தின் மூன்று சக்கர வண்டி நிற்கும். சில்லென்ற பதநீர் அற்புதமாக இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு வாசல் தேடி வரும் வியாபாரிகள்தான் எத்தனை வகை. ஒரு சதுர கண்ணாடி டப்பாவில் ரோஸ் கலர் பஞ்சு மிட்டாய்களை அடுக்கிக்கொண்டு மணியடித்து விற்கும் வியாபாரிகள், பப்ஸ், பப்ஸ் வேஜிடேபில் பப்ஸ் என்று கூவி வருபவர்கள், வடை போண்டா, முறுக்கு வியாபாரிகள், சின்ன சின்ன கலர் உருண்டைகளை தட்டில் வைத்து, லாடு, லாடு, ரவா லாடு என்று அலறுபவர்கள், ஒரு நீள மூங்கில் கழியில் ஜவ்வு மிட்டாயை சுற்றிக்கொண்டு அதன் உச்சியில் கையில் ஜால்ராவை தட்டும் பெண் பொம்மையுடன் வரும் ஜவ்வு மிட்டாய் வியாபாரிகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அதுவும் இந்த ஜவ்வு மிட்டாய் வியாபாரிகள் , குழந்தைகள் கைகளில் கடிகாரம், காதுகளில் ஜிமிக்கி என்று அந்த மிட்டாயினாலேயே செய்து கொடுத்துவிடுவார்கள். வண்டியில் சோன் பப்டி வியாபாரம் செய்யும் சிலர், கூடவே ஜவ்வு மிட்டாயையும் கலந்து ஒரு இனிப்பு செய்து கொடுப்பார்கள், அடடா! அமிர்தம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஐஸ் என்றாலே குச்சி ஐஸ்தான். தகரப்பெட்டி போன்ற வண்டியிலும், சைக்கிள் கேரியரிலும் இதன் விற்பனை அமோகமாக இருக்கும். சேமியா ஐஸ், பால் ஐஸ், திராட்சை ஐஸ் என்று பல ருசிகள். பின்னர்தான் ஐஸ்க்ரீம் குச்சி வடிவத்திலும் வந்தன. சாலையில் நிறைய சர்பத் வண்டிகளை பார்க்கலாம். கலர் கலரான திரவங்களை கலந்து சர்பத்கள் கிடைக்கும்.  மரம் இழைக்கும் உளியைக்கொண்டு ஐஸ் கட்டிகளை இழைத்து குச்சியில் சுற்றி கலர் திரவங்களை தெளித்து கொடுத்தால் பசங்க உறி உறி என்று  உறிவார்கள்.  அதே ஐஸ் துண்டுகளில் மோரீஸ் வாழைபழங்களை அரிந்து போட்டு பழம் போட்ட ஐஸ் என்று ஒரு அலுமினிய கரண்டியையும் போட்டு தருவார்கள். கோவை ஸ்வாமி தியேட்டர் வாசலில்தான் இது பிரசித்தி பெற்றது. இன்று அந்த தியேட்டர் இருந்த இடத்தில் ரத்னா ரெசிடென்சி என்ற ஸ்டார்  ஓட்டலும் , வலையப்பட்டி  என்ற உயர்தர உணவு விடுதியும்  இருக்கின்றன.  சர்பத் வண்டிகளின் வடிவம் சிறிது சிறிதாக மாறத்தொடங்கியது. ஒரு பெரிய எவர்சில்வர் அண்டாவில் ஆரஞ்சு சாறு , வண்ணங்கள், ஐஸ் கட்டிகளை கலக்கி வைத்திருப்பார்கள். சர்பத் கேட்பவர்களுக்கு பெரிய டம்ப்ளர்களில் ஊற்றி தருவார்கள். ரோஸ் மில்க் கேட்பவர்களுக்கு  அலுமினிய கேன்களில் இருந்து பாலை ஊற்றி, ரோஸ் எசென்சையும் கலந்தால், ரெடி. இந்த வண்டிகளில் சினிமா நடிகர் நடிகைகளின் உருவங்களை பெரிதாக வரைந்து வைத்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தியேட்டர் கான்டீன்கள் ஒரு தனி உலகம். இன்றும் சென்ட்ரல் தியேட்டர் கீரைவடையையும் காப்பியையும் பற்றி பேசாத பெருசுகள் அபூர்வம். அவ்வளவு ருசி, பின்னே இங்கு இருந்து தானே அன்னபூர்ணா ஓட்டல்கள் கிளை விரித்ததே. நான் பள்ளி மாணவனாக இருக்கும்போது, பக்கத்தில் இருந்த சென்ட்ரல் தியேட்டரில் , ஜாபர் என்ற புகழ் பெற்ற ஐஸ்க்ரீம் கடை இருந்தது. ஆங்கில படங்கள் மட்டும் திரையிட்ட ரெயின்போ தியேட்டர் காப்பியும் பப்சும் விலை குறைந்தவை, பேராசை அற்றவர்கள் ! ட்ரிங்  என்று சோடா கலர் பாட்டில்கள் மீது ஒப்பனர் எழுப்பும் சத்தமும், அஸ்கா பர்பி, தேங்கா பிஸ்கட், தட்ட முறுக்கேய், என்ற ஒலிகளும் தியேட்டர்களுக்கே உரியவை. இதில் தேங்காய் பிஸ்கட் என்பது தேங்காய்க்கே சம்பந்தமில்லாத மைதா, கரும்புச்சர்க்கரை கலவையில் செய்யப்படும் தட்டையான பிஸ்கட். இந்திய சீட்டாவை போல் அழிந்து போன இனங்களில் இதுவும் ஒன்று. ஸ்ரீபதி தியேட்டர் முட்டை போண்டா இன்னொரு புகழ் பெற்ற ஐட்டம். இதன் தயாரிப்பாளரான முத்து, ஸ்ரீபதி முத்து என்றே புகழ் பெற்றார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;வீதிகளில் இனிப்பு கார வண்டிகள் அதிகமாக காணப்படும். இப்போதைய கார்ப்பரேஷன் கட்டிடத்திற்கு அருகில் பழைய மார்க்கெட் இருந்தது. உள்ளே மீன், பழைய புத்தகங்கள் மார்க்கெட் இருந்தது. வெளியில் சில மலையாள முஸ்லீம்கள் பாலக்காடு அல்வாவை கண்ணாடி வண்டிகளில் வைத்து விற்பார்கள். பெரும் பாளமாக கருஞ்சிவப்பு நிறத்தில் அல்வா கெட்டியாக இருக்கும். சில சிறு வண்ண வித்தியாசத்துடன் தேங்காய் எண்ணை மணம் வீசும் வேறு அல்வாக்களும் பக்கத்தில் இருக்கும். நேந்திரங்காய் சிப்ஸ் அப்போது அங்கு மட்டும்தான் கிடைக்கும். இன்று ஐந்து முக்கில் மட்டும் ஒவ்வொரு முக்கு மூலையிலும் ஒரு கடை, பிரம்மாண்ட அடுப்பில் சிப்ஸ்களை வறுத்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பாய் இரவு நேரத்தில் தன் வண்டியில் அல்வாவும், தேங்காய் பர்பியும் மட்டும் விற்றுக்கொண்டு வருவார். அவர் எப்படா வருவார் என்று ஒரு கோஷ்டியே காத்துக்கொண்டிருக்கும். இஸ்லாமியர் தெருக்களில் காலை நேரத்திலேயே சிலர் வண்டிகளில் வைத்து பாயசம் விற்றுக்கொண்டு வருவார்கள். இந்த வீதிக்கு குடி வந்த புதிதில், ஏக்கத்துடன் இந்த பாயசம் குடிப்பவர்களை பார்த்துக்கொண்டிருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தமிழ்நாட்டின் பொது உணவாக கருதப்படும் பரோட்டா, அப்போது சில இஸ்லாமியர் கடைகளில் மட்டும் கிடைக்கும். சில மத்திய தர வர்க்கத்தினர் அதை சாப்பிடுவதையே கேவலமாக நினைப்பார்கள். எங்கள் வீட்டருகே இருந்த மொம்மது டீ கடையில், சில நாட்களில் காலை டிபன்  தயாராகவில்லை என்றால் என் தந்தை பரோட்டா சால்னாவை வாங்கி , மதிய உணவுக்கும் கட்டி கொடுத்துவிடுவார்.  அந்த கோதுமை பரோட்டாவின் பழுப்பு நிறமும் மொறுமொறுப்பும் மீண்டும் வரமுடியாதவை. எங்கள் பள்ளி, குஜராத்தியரும் பிராமணர்களும் அதிகமாக பயின்ற இடம். மதிய வேளைகளில் நான் பரோட்டாவுடன் இருந்தால் அது அவர்களுக்கெல்லாம் ஒரு அதிசயம். சிலருக்கு பொறாமையும் கூட. &lt;br /&gt;&lt;br /&gt; பலகார வண்டிகள் என்றால் உடனே நினைவுக்கு வருவது, ராஜ வீதி, பெரிய கடை வீதி மற்றும் வைசியாள் வீதி. இன்று வண்டிகள் குறைந்தாலும் இங்கு சாப்பிடுபவர்கள் குறையவேயில்லை. கோமுட்டி செட்டியார்கள் இதில் கில்லாடிகள். டைம் டேபிள் வைத்து சாப்பிடுவார்கள். தயிர் வடை, பப்பு ரோட்டா, கரம் மற்றும் கரம் பொரிகள், கச கசா அல்வா, பலாப்பழ அல்வா, புலுசு அடை, ஜவ்வரிசி போண்டா, பணியாரம், இந்த கால பர்கருக்கு தாத்தாவான அந்த காலத்து மசாலா பன், தட்ட முறுக்கு  சாண்ட்விச் ,பூசணி விதை பர்பி, கோதி  அல்வா, தட்டை முறுக்கு,  பால்கோவா , சீம்பால், என்று செம கட்டு கட்டுவார்கள். இரவு நேரங்களில் தேங்காய் பருத்தி பால் என்று ஒரு பானத்தை வண்டியில் வைத்து விற்று வருவார்கள். எங்க ஊர் வெந்தயக்காடி ருசியில் இருக்கும். ஒரு பெரிய பயில்வானின் படத்தை வரைந்து சகல மாலை மரியாதைகளுடன், பீம புஷ்டி  அல்வாவை சில மதுரை பார்ட்டிகள் வண்டியில் வைத்து விற்று வருவார்கள். ஒரு அரை கிலோ சாப்பிட்டால் பயில்வான் ஆகி விடலாம் அல்லது பேதியில் போய்விடலாம். சுண்டல் வண்டிகளும், வேக வைத்த, மற்றும் வறுத்த கடலை வண்டிகளும் பிரசித்தம். தினம் ஒரு ஐட்டத்தை தன் பெட்டியில் 'இன்றைய ஸ்பெஷல்' என்று சைக்கிளில் விற்கும் ஒருவரை இந்த பகுதியில் பார்த்திருக்கிறேன்.பாணி பூரியை பிரபலமாக்கியது கூட இங்கிருந்த கந்தசாமி கடைதான். இன்று பரோட்டாவை போல் அதுவும் ஒரு தேசிய பலகாரம். எங்கெங்கு நோக்கினும் ஆண்களும் பெண்களும் பேல்பூரியையும் கட்லேட்டையும் பானிபூரியையும் சரமாரியாக விழுங்கிக்கொண்டிருக்கிறார்கள். கோவையை போல் வேறு எங்கும் இப்படி இருப்பதாக தெரியவில்லை. ஒரு முறை கடலூரில் என் நண்பர்களை சந்தித்தபோது தெரிந்த விவரம், அவர்கள் ஒவ்வொரு முறையும் பொருட்காட்சியை எதிர்பார்த்து இருப்பார்களாம். அப்போதுதான் பாணி பூரியை சாப்பிட முடியுமாம். அடப்பாவமே, எங்க ஊருக்கு வாங்கையா, டீக்கடையை கூட பல லட்சத்துக்கு இன்டீரியர் டெகரேட் செய்து வைத்திருப்பார்கள் என்பேன். வெளியூர் போனால் அங்குள்ள சிறப்பு ஐட்டங்கள் என்ன என்று தேடுவதுண்டு. நாஞ்சில் நாடன் மணிவிழாவுக்கு எங்கள் ஊரான நாகர்கோவிலுக்கு போயிருந்தபோது, நண்பர்களுக்கு முந்திரிக்கொத்தும் , வெள்ளை நிற சிலேப்பியும், மட்டிப்பழமும் , நொங்கு சர்பத்தும் அறிமுகப்படுத்தினேன். திருநெல்வேலி அல்வா இல்லாமலா? சென்னையில் படித்த காலங்களில் ரத்னா கபேயின் இட்லி சாம்பாரிலும் ரசமலாயிலும் , எங்கும் கிடைத்த லஸ்ஸியிலும் மூழ்கிக்கிடந்தேன். கேரளா போனால் கறிமீன் எங்கே கிடைக்கும் என்று அலைவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மலையாளிகள் அதிகமாக இருப்பதால், பழ பஜ்ஜி, அவல் பொறி, குழாய்புட்டு, ஆப்பம் போன்ற வகைகள் அவர்களுடைய டீக்கடைகளிலும் சின்ன ஓட்டல்களிலும் கிடைத்தன. இப்போது அப்படிப்பட்ட ஓட்டல்கள் இருக்கின்றனவா என்றே தெரியவில்லை. இப்போது மைசூர் பாகில்  கின்னஸ் ரிக்கார்ட் ஏற்படுத்தியிருக்கும் கிருஷ்ணா ஸ்வீட்சில் அப்போது சுடச்சுட கிடைக்கும் கிச்சடியும், காராபூந்தி போட்ட தயிர்வடையும் பயங்கர புகழ் பெற்றவை. சென்ட்ரல் பிரியாணியும், ஈரானி ஓட்டலும், பழைய பெங்களூர் பிரியாணி ஓட்டலும், விச்வனாதைய்யர் மிட்டாய் கடையும் மித்ர சமாஜும் பழைய நினைவுகள் மட்டுமே. எங்கள் வீதியில்  கிடைக்கும் கறிவடையும் , மட்டன் பப்சும் ரம்ஜான் ஸ்பெஷல் என்று வருடம் ஒரு மாதத்திற்கு மட்டுமே கிடைக்கிறது.&lt;br /&gt; கிருஷ்ண விலாசின் பாதாம் அல்வாவும், லக்கி கபேயின் சமோசாவும் டீயும், அதன் புகழ் பெற்ற சப்ளையர் கன்னத்தில் ஸ்பைடர்மேன் போல் விழாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் பென்சிலும்  நீங்காத நினைவுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய தின்பண்டங்கள் அதே இடங்களில் இன்றும் கிடைக்கின்றனவா?&lt;br /&gt;பாம்பே ஆனந்த பவனில் இன்னும் அதே சோன் பப்டி கிடைக்கிறது. &lt;br /&gt;அங்கண்ணன் கடையில் இன்னும் பிரியாணி கிடைக்கிறது.&lt;br /&gt;ஆதித்தன் கடையில் கச கசா அல்வாவும், ஒய் எம் சி எ பக்கத்தில் வாழைப்பழ பஜ்ஜியும் , முரளி ரெஸ்டாரன்ட்டில் சப்பாத்தி   சிக்கனும் , ரங்கே கவுடர் வீதி பெரியவர் கடையிலும் ஐந்து முக்கு காவேரி ஐசிலும் அதே ருசியுடன் சோடா சர்பத் கிடைக்கிறது. ரயில் நிலையத்திற்கு எதிரில், சற்று இடம் மாறிய நிலையில் இன்னும் தேவி ஓட்டலில் மங்களூர் பாணி பரோட்டாவும், சிக்கன் கறியும் கிடைக்கிறது. ஸ்டேன்ஸ் பள்ளி அருகில் இருந்த சாலையில் பிளாட்பார டீக்கடையாயிருந்த பர்மா பாய் கடை, இன்று பல கிளைகளுடன் விரிந்து நிற்கிறது. சுப்பு மெஸ் அதே பொலிவுடன் நடைபெறுகிறது. எழுவதுக்கும் அதிகமான ஆண்டுகளை கடந்தும் ராயல் இந்து ரெஸ்டாரன்ட்  அப்படியே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு  புறம் பீட்சா பர்கர் கடைகளும், அதி நவீன அலங்கார ஓட்டல்களும் , ஐஸ்க்ரீம் பார்லர்களும் தினமும் இந்த வளரும் நகரத்தில் தோன்றிக்கொண்டேதான் இருக்கின்றன. ஆட்கள் சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-7681881662820053708?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/7681881662820053708/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=7681881662820053708' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/7681881662820053708'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/7681881662820053708'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2009/05/blog-post_05.html' title='கோவை கபே'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SgBToAvMAvI/AAAAAAAAAOA/zxJh4XAooAU/s72-c/javvu+mittai.jpg' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-4630323995514073648</id><published>2009-05-04T06:54:00.000-07:00</published><updated>2009-05-04T06:57:36.130-07:00</updated><title type='text'>சைக்கிள் நாட்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_bAkfWRFUpXM/Sf70Nnapd4I/AAAAAAAAAN4/7sj5Q0smQMM/s1600-h/cycle.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 299px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/_bAkfWRFUpXM/Sf70Nnapd4I/AAAAAAAAAN4/7sj5Q0smQMM/s320/cycle.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5331967523609474946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அவ்வப்போது மனிதனின் கண்டுபிடிப்புக்களை குறித்து ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிள் என்றும் என் பிரியத்திற்குரிய விஷயம். இரண்டு சக்கரங்கள், ஒரு பெடல், ஒரு பிரேமை வைத்து என்னமாய் கண்டுபிடித்திருக்கிறான் பாருங்கள். வேஷ்டி கட்டியவன், காலை முன்னால் தூக்கி அமர்கிறான், பேன்ட் போட்டவன் காலை அலேக்காக தூக்கி பின்னால் போடுகிறான். சைக்கிள் ஓட்ட பழகுவதற்கு முன்பே  ஒரு குட்டி சைக்கிள் விபத்தில் சிக்கியவன் நான். ஐந்தாம் வகுப்பு விடுமுறையில் பூதப்பாண்டியில் இருந்து திட்டுவிளை செல்லும் பாதையில் என் சித்தப்பாவுக்கு பின்னால் அமர்ந்திருந்தவன், காலை சக்கரத்துக்குள் விட்டுவிட்டேன். இன்றும் அந்த பெரும் காயத்தின் தழும்பு என் காலில் உள்ளது.&lt;br /&gt;பிறகுதான் சைக்கிள் விட கற்றுக் கொண்டேன். அது ஒரு நீண்ட நாள் பயிற்சியாக நீண்டது. பல ஆசிரியர்கள், பல உத்திகள் . இருவது இன்ச் வாடகை சைக்கிள் எடுக்கவேண்டியது, அதை குருநாதர்கள் கையில் ஒப்படைக்கவேன்டியது, அவர்கள் அனுபவித்தது போகத்தான் சிஷ்யனான எனக்கு. நகரின் மத்தியில் நெரிசலான இடத்தில் வாழும் எங்களுக்கு பக்கத்து யூனியன் பள்ளி மைதானமும் சிட்டி முனிசிபல் பள்ளி மைதானமும்தான் பயிற்சி களங்கள்.  எப்போதும் கால்பந்து விளையாடும் மைதானங்கள் அவை. அப்போது கிரிக்கெட் பைத்தியம் அவ்வளவாக இல்லாத காலம். பசங்கள் கால்பந்து விளையாடாத நேரமாக பார்த்து போகவேண்டும். பின்னால் ஒருவர் சீட்டை பிடித்துக்கொண்டே ஓடிவரும்போது பேலன்சுடன் ஓட்ட இயலும். அவர் விட்டு விட்டார் என்று தெரிந்தால் அவ்வளவுதான் .விழுந்துவிடுவேன். ஆனாலும் பேலன்ஸ் கை வந்தபோது கிடைத்த சந்தோசம் இருக்கிறதே, அதை வர்ணிக்க இயலாது.காலை வேளையில், இளஞ்சூரிய  வெயிலில் அகண்ட மைதானத்தில் சைக்கிள் காற்றை கிழித்து பறக்கும் சுகம், விமானப் பயணத்திலும்  கிடைக்குமா? சந்தேகம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறகு அட்வான்ஸ் பயிற்சிகள். குருநாதர் இரண்டு கற்களை ஒரு அரையடி வித்தியாசத்தில் வைத்துவிடுவார். அந்த இடைவெளியில் லாவகமாக செலுத்தவேண்டும். ஒரு சர்க்கஸ் வீரனுக்குரிய பெருமை அதை செய்தால் கிடைக்கலாம். மேலும் டபுள்ஸ், ட்ரிபிள்ஸ், கைகளை விட்டு ஓட்டுதல் போன்ற போஸ்ட் டிப்ளமா பயிற்சிகளையும் கடந்த பின் சாலையில் வெள்ளோட்டம். பல தர வாகனங்களுக்கு இடையில் சைக்கிளை பெருமையுடன் ஓட்டும்போது அடடா என்ன சுகம். &lt;br /&gt;&lt;br /&gt;என் முதல் சைக்கிள் ஒன்பதாவது வகுப்பு படிக்கும்போதுதான் கிடைத்தது.செகண்ட் ஹேண்ட் இருவது இன்ச் சைக்கிள். அதை பள்ளிக்கு ஓட்டிச்சென்ற முதல் நாள் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நண்பர்களிடம் அதை காட்டி காட்டி பெருமையில் பூரித்துக்கொண்டு இருந்தேன். அவர்களிடம் பெரும்பாலும் இருந்தது அப்போது புகழ் பெற்றிருந்த பி எஸ் ஏ ஸ்போர்ட்ஸ் சைக்கிள்கள் மற்றும் உறுதியான ராலே, ஹெர்குலெஸ், அம்பர் வகையறாக்கள். என்னிடம்  இருந்ததோ ரீபெயிண்ட் செய்த ஒரு டப்பா வண்டி. ஆனாலும் அது ஒரு பொன் குஞ்சு அல்லவா!  முதல் நாள் பள்ளி விடும் மணி அடிக்கிறது. பகல் முழுவதும் சைக்கிள் ஞாபகமாகவே இருந்த எனக்கு அது ஒரு விடுதலை சங்கு. பாய்ந்து சைக்கிள் ஸ்டாண்டிற்கு வருகிறேன். வண்டியை தள்ளிக்கொண்டு ரோட்டுக்கு வருகிறேன். அங்கு என் சக மாணவர்கள் டிராபிக் ஒழுங்கு படுத்திக்கொண்டிருக்கிறார்கள். சாலையில் வந்துகொண்டிருக்கும் வண்டிகளை நிறுத்தி  எங்களுக்கு வழி விடுகிறார்கள். எல்லோரும் என்னையும் என் சைக்கிளையும் பார்ப்பது போல் எனக்கு ஒரு குறுகுறுப்பு. பெடலில் கால் வைக்காமல் தாவி ஒரு டைவ் அடித்து சைக்கிளில் ஏறி பறக்கிறேன். கிக்கானி பள்ளி மாணவர்கள் அனைவரும் என்னை துரத்தி வருவது போன்ற உணர்வு.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி நாட்களில் சைக்கிள் ஒரு பெருமையான விஷயம்தான். கொஞ்ச நாட்களில் இருவது இன்ச் சலித்துப்போய் பெரிய சைக்கிள் வேண்டுமென்று என் தந்தையை நச்சரிக்க தொடங்கிவிட்டேன். மீண்டும் ஒரு செகண்ட் ஹேண்ட் ராலே வண்டி வாங்கித்தரப்பட்டது. அப்போது சைக்கிளை  அலங்கரித்துவைத்துக்கொள்வது ஒரு பெரிய பேஷன். சிலர் ஹேண்டில் பாரில் நீள நீளமான குஞ்சங்களை இணைத்துக்கொள்வர். பிரேமிலும் குஞ்சங்கள் தொங்கும். டைனமோ திருட்டு போகாமல் இருக்க அதற்க்கு ஒரு சங்கிலி, டூம் விளக்கிற்கு கிழவர்கள் மப்ளர் அணிவது போல் ஒரு துண்டு துணி, சக்கரத்து போர்க் கம்பிகளில் பாசி மணிகள், அலங்காரமான சைட் பெட்டிகள் , விதவிதமான எக்ஸ்ட்ரா பிட்டிங்குகள் , க்ரோம் ப்ளேட்டிங் செய்த மட் கார்டுகள்,  என்று சிலர் சைக்கிளை அலங்காரமாக வைத்திருப்பார்கள். எங்களது ஆர்ட்ஸ் கடையில் சைக்கிளில் விதவிதமான படங்களை வரைவதற்காகவே நிறைய வாடிக்கையாளர்கள் வருவதுண்டு. எனக்கும் இந்த பைத்தியம் பிடித்தது. எனது சைக்கிள் சைட் பெட்டியில் விதவிதமான ஓவியங்கள் இடம்பெறும். காமிக்ஸ் பாத்திரங்கள், மண்டை ஓடுகள்  என்று பள்ளியிலும், பின்னர் அரிவாள் சுத்தியல் போன்ற புரட்சி வடிவங்களும் கல்லூரி நாட்களிலும் இடம் பெற்றன. மிச்ச இடங்களில் விதவிதமான ஸ்டிக்கர்கள் வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;டிவி இல்லாத அந்த நாட்களில் நகர்ப்புற மக்களுக்கு சினிமா முக்கிய பொழுதுபோக்கு.தியேட்டர்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். அப்போது கோவையில் ஒவ்வொரு தியேட்டரிலும் சைக்கிள் டிக்கட் என்று  ஒரு  பிரிவு இருக்கும். மிதிவண்டிகளை முதல் நாள் இரவே தியேட்டரில் க்யூவில் நிறுத்திவிடுவார்கள். டிக்கட் கொடுக்கும் நேரத்தில் சைக்கிள்களை வரிசையாக தள்ளிக்கொண்டு செல்வார்கள். ராயல் , ராஜா, சென்ட்ரல், ரெயின்போ போன்ற தியேட்டர்களில் சிவாஜி, எம்ஜியார், ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு கிலோமீட்டர் கணக்கில் இந்த சைக்கிள் வரிசை நீண்டிருக்கும். இப்போது இவை எல்லாம் பழைய  கதை. &lt;br /&gt;&lt;br /&gt;கோவில் திருவிழாக்களை விட்டால் அப்போது இன்னொரு பொழுதுபோக்கு, வீதிகளில் கொஞ்சம் அகலமான இடம் இருந்தால், ஒரு வாரம் விடாமல் சைக்கிள் விடும் சாகசங்கள்தாம். நான் சின்ன பையனாக இருக்கும்போது இத்தகைய சாகசங்களை வாயை பிளந்து கொண்டு பார்த்திருக்கிறேன். பள்ளியை விட்டு வந்தவுடன் பையை தூக்கி எறிந்து விட்டு  ஓடிவிடுவேன். சைக்கிள் வீரர் கால்கள் ஏழு நாட்களுக்கு தரையில் படாது என்பதுதான் சிறப்பு. கையை விட்டுவிட்டு ஓட்டுவார், தலைகீழாக ஓட்டுவார், பானைகளில் நீர் எடுத்து ஓட்டிக்கொண்டே குளிப்பார், உடை மாற்றுவார். எப்போது சிறுநீர் மலம் கழிப்பார் என்பது மட்டும் புரியாத புதிர். மாலை நேரங்களில் சினிமா பாடல்களுக்கு சைக்கிளில் இருந்தபடியே நடனம் ஆடுவார், கூடவே ஒரு கவர்ச்சி கன்னியும், காமெடியனும் இருப்பார்கள். 'ஆடப்பிறந்தவளே ஆடிவா...', 'கண்டவர் கண்ணு படும் செல்லாத்தா,'நான் தென்ன மரத்துல குந்தியிருப்பதை சின்ன பாப்பா' போன்ற சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இவர் எப்போது ஆடுவார் என்று அனைவரும் காத்துக்கொண்டிருப்பார்கள். அப்போதுதான் கலெக்ஷனும் தூள் பறக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளி விட்டு வரும்போது, இதே சாகசங்கள் தொடரும். புரூக் பாண்ட் ரோட்டில் மாணவ மாணவியர் நடந்து சென்று கொண்டிருப்பார்கள். சில ஆசிரியர்களும் மெதுவாக சைக்கிளில் போய்க்கொண்டிருப்பார்கள். அவர்கள் பின்னால் சென்று கண கணவென்று மணியடிப்பதும், ஹேண்டில் பாரில் வயிற்றை ஊன்றி நின்று கொண்டு செல்வதும், தலை வாரிக்கொண்டே சைக்கிள் ஓட்டுவதும் மாணவர்களின் முக்கியமான சாதனைகள். அந்த கால கட்டங்களில், நகராட்சி, மற்றும் பஞ்சாயத்துக்களில் சைக்கிளுக்கு வரி கட்டி ஒரு பாஸை பிரேக்கிலோ அல்லது சீட்டுக்கு அடியிலேயோ இணைத்துக்கொள்ளவேண்டும். அது பெரும்பாலும் ஒரு இரும்புத்தகடு. யாரும் இதை ஒழுங்காக கட்ட மாட்டார்கள். திடீரென்று ஒரு வதந்தி கிளம்பும். 'பெரியாஸ்பத்திரி பக்கத்தில், முனிசிபாலிடிகாரன் பாஸ் புடிக்கிறானாம்' என்று யாராவது கிளப்பி விடுவார்கள், அவ்வளவுதான், சைக்கிள் பார்ட்டிகள் அனைவரும் அந்த இடத்தை தவிர்ப்பதற்காக சந்து பொந்துகளுக்குள் புகுந்து பறப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரியில் என் சைக்கிள் தொலைந்து போன கதையை நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அப்போது சினிமா சொசைட்டி பைத்தியம் பிடித்து ஆட்டியது. ஸ்ரீபதி தியேட்டரில் அரவிந்தனின் 'தம்பு'  பார்த்துவிட்டு அங்கிருந்து நாலைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கணபதி வேலன் தியேட்டருக்கு கே.ஜி.ஜியார்ஜின் ' ஸ்வப்னாடனம்' பார்க்க வெயிலில் சைக்கிள் மிதித்த காலங்கள். தொய்ந்து போன பிலிம் சொசைட்டியை புத்தாக்கம் செய்கிறேன் என்று 'சாருலதா'  படம் போட, ஒவ்வொரு உறுப்பினர் வீட்டுக்கும் சைக்கிளில் சென்று அறிவித்த காலம்...சட்டக்கல்லூரியில் படிக்கும் வரை சைக்கிள்தான். பின் ஏனோ அதை ஓட்டுவது ஏதோ அவமானகரமான செயல் போல் கோவை நகரத்தில் நிகழ ஆரம்பித்தது. பெரும்பாலும் அனைவரும் மொபெட் அல்லது ஸ்கூட்டர் வாங்க ஆரம்பித்தனர். ஆனாலும் பிற நகரங்களில் சைக்கிள் நீண்ட நாட்கள் கழித்துதான் அழிய ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். கடலூர், விருத்தாச்சலம் போன்ற நகரங்களில் வக்கீல்கள் கோட்டும் கவுனும் அணிந்து சைக்கிளில் பறப்பார்கள். சென்னையில் கூட சென்ற நூற்றாண்டின் இறுதியில் மூக்கையா, சூசைராஜ் போன்ற பெரும் ஓவியர்கள் சர்வ சாதாரணமாக சைக்கிளில் பயணிப்பதை பார்த்திருக்கிறேன். என்ன கொடுமை என்றால், என் தந்தையுடன் சைக்கிளில் பயணம் செய்திருக்கிறேன், தனியாகவும், டபுள்சிலும். ஆனால் என் குழந்தைகள் நான் சைக்கிள் ஓட்டுவதை கூட கண்டதில்லை . இப்போதெல்லாம் எங்கள் சாலைகளில் சைக்கிள்களை அபூர்வமாகத்தான் காணமுடிகிறது. தினமும் , மன நலம் குன்றிய ஒருவர் தன் பழைய சைக்கிளில் ஏராளமான குப்பைகளை மூட்டையாக கட்டிக்கொண்டு , காற்றில்லாத சக்கரங்களை உருட்டிக்கொண்டு இலக்கில்லாமல் சென்று கொண்டிருப்பதை மட்டும் தவறாமல் பார்க்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-4630323995514073648?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/4630323995514073648/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=4630323995514073648' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/4630323995514073648'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/4630323995514073648'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2009/05/blog-post.html' title='சைக்கிள் நாட்கள்'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_bAkfWRFUpXM/Sf70Nnapd4I/AAAAAAAAAN4/7sj5Q0smQMM/s72-c/cycle.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-7519175649168849263</id><published>2008-12-14T02:54:00.000-08:00</published><updated>2008-12-14T03:17:49.883-08:00</updated><title type='text'>'என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்'</title><content type='html'>குறும்படங்கள் ஒரு தனி ஜாதி. &lt;br /&gt;யார் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம் என்று ஆன பிறகு, எக்கச்சக்கமான படங்கள் பார்க்க கிடைக்கிறது. அரை வேக்காடு , முழு வேக்காடு என்று தரம் பிரித்து பார்த்துக்கொண்டே இருக்கலாம். &lt;br /&gt;இப்போது பார்த்த படம் 'என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்'. பிரதீபன் இயக்கியது.&lt;br /&gt;தொழில்நுட்ப கலைஞர்கள் பெயர் பட்டியல் படத்தை பார்க்க தூண்டுகிறது.&lt;br /&gt;வெறும் பதினொன்று  நிமிடங்கள் ஓடும் இந்த படம் நேரிடையாக கதை சொன்னாலும் ஒரு abstract தோற்றத்தை கொண்டிருப்பது இதன் சிறப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு பெண்குழந்தைகளும் ஒரு சிறுவனும் பள்ளிக்கு சென்று திரும்புகிறார்கள். நாளை பள்ளிக்கு விடுமுறை என்று இராணுவம் அறிவித்திருக்கிறது என்று அவர்கள் பேசிக்கொள்ளும்போதே, கதை நடப்பது இலங்கையில் என்று புரிந்துகொள்கிறோம். இவர்கள் கைகளில் மாங்கன்றுகள்.சிறந்த முறையில் வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் இருக்கலாம். பாதை இரண்டாகப்பிரிகிறது. ஒருத்தி ஒரு பாதையிலும் மற்றவர்கள் மறு பாதையிலும் பிரிகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாலை ஓரத்தில் ஜீப்பை நிறுத்தி சிறுநீர் கழிக்கிறான் ஒருவன். செல்லும்போது  கூட்டாளியிடம்  தான் ஒரு வயதான பெண்ணிடம் இன்பம் துயித்தது பற்றியும், அவள் கணவன் விளக்கு பிடித்தது பற்றியும் பெருமையாக சொல்லுகிறான். உரையாடல் சிங்கள மொழிக்கு மாறுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;சாலையில் தனித்து செல்லும் சிறுமி அருகில் அந்த ராணுவ ஜீப் நிறுத்தப்படுகிறது.&lt;br /&gt;மாலை வெயிலின் ஒளிச்சூட்டில் ஜீப்பின் நிழலில் நிற்கிறாள் அவள். &lt;br /&gt;&lt;br /&gt;மறுபாதையில் சென்ற சிறுமியையும் தம்பியையும் வழிமறிக்கிறது ஒரு குரல்.&lt;br /&gt;'தங்கச்சி, எங்களுடன் வருகிறேன் என்றாயே, இப்போது வா, &lt;br /&gt;தம்பி, நீ வீட்டுக்கு போ', என்று ஆணையிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு.&lt;br /&gt;&lt;br /&gt;சாலையோரத்தில் குழி தோண்டி ராணுவ ஜீப்பிலிருந்து இறக்கப்பட்ட சிறுமியின் பிணமூட்டையை புதைக்கிறான் சிங்களவன்.&lt;br /&gt;&lt;br /&gt;பகல் &lt;br /&gt;&lt;br /&gt;மணல் மூட்டைகள் மேல் நிறுத்தப்பட்ட எந்திரத்துப்பாக்கி . பக்கத்தில் இந்த பெண். தனிமையில் தரையில் ஒரு வீட்டை குச்சி கொண்டு வரைந்துகொண்டிருக்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வெடிச்சத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மை காட்சியில்  மாங்கன்று  பை கிழிந்து குச்சியும் மண்ணும் தரையில் உதிர்ந்து கிடக்கின்றன-வெவ்வேறு இடங்களில்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவன் தனியாக நடந்து வருகிறான். பாதைகள் அங்குதான் பிரிகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த குட்டி படம் சொல்லும் செய்தி தெளிவானது. சொல்லிய விதம் அருமை. படபடக்கும் புல்வெளிகள், பனைமரங்கள் அடர்ந்த நிலவெளி மற்றும்  பின்னணியில் சேர்க்கப்பட்ட ஒலிக்கலவைகள் மட்டுமே ஒரு பயங்கரத்தின் மவுன சாட்சிகளாக நமக்கு தென்படுகின்றன. அற்புதமான ஒளிப்பதிவு . ஏற்கனவே இலங்கை பின்னணியில் 'மண்' படத்தை ஒளிப்பதிவு செய்த சி.ஜெ.ராஜ்குமார், தமிழகத்தின் சிறந்த கலை இயக்குனர்களில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தி, புகழ் பெற்ற எடிட்டர் சுரேஷ் அர்ஸின் மகன் ராகவா எஸ். அர்ஸ் போன்றோரின் கைவண்ணம் மிகவும் உயர்தரமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மிகக்குறைந்த நேரமே ஓடக்கூடிய ஒரு படத்தை எப்படி சிறந்த முறையில் அளிக்கமுடியும் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பவர்கள் அவசியம் காணவேண்டிய படம் இது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-7519175649168849263?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/7519175649168849263/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=7519175649168849263' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/7519175649168849263'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/7519175649168849263'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2008/12/blog-post_14.html' title='&apos;என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்&apos;'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-730568042598533168</id><published>2008-12-09T07:32:00.000-08:00</published><updated>2008-12-09T07:34:20.862-08:00</updated><title type='text'>ஜோதிடம்</title><content type='html'>ஜோதிடர்களை நான் மிகவும் ரசிப்பேன். மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவர்கள். பிரச்சினைகளுக்கு தீர்வும் சொல்பவர்கள். வீடு வீடாக வந்து கிளி ஜோதிடம் சொல்லும் சில நபர்களை அடிக்கடி சந்திப்பேன். நான் எங்கள் கடையில் வரைவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்கள். பேச்சு கொடுப்பேன். 'எங்க சார், முன்ன மாதிரி வருமானம் இப்ப இல்லை. எங்கேயாவது கிராமத்திலே திருவிழா நடக்கும்போதுதான் வருமானம்.  முன்ன  எல்லாம், பெண்கள் ஜோசியம் பார்ப்பாங்க, ஒரு பொம்பள பாத்தா போட்டிக்கு பக்கத்து வீட்டு பொம்பளையும் பார்ப்பா. இப்ப வாசல்ல நின்னு, கிளி ஜோசியம்ன்னு குரல் கொடுத்தாலே உள்ள இருந்தே வள்ளுன்னு விழறாங்க. எப்ப பாத்தாலும் டிவிலே சீரியல் ஓடுது. நாங்க கூப்பிட்டாலே அவங்களுக்கு எரிச்சல் வருது' என்று ஒருவர் புலம்பினார். அடடா, இந்த சீரியல்கள் யாரையெல்லாம் பாதித்திருக்கிறது !&lt;br /&gt;&lt;br /&gt;ஊமை ஜோதிடர்கள் என்று ஒரு குரூப் வரும். ஜாடையிலும் எழுத்து மூலமும் உங்களுடன் பிறந்தவர்கள் எத்தனை பேர், என்ன தொழில், என்ன பிரச்சினை என்று புட்டு புட்டு வைப்பார்கள். இவர்கள் ஊமைகள் இல்லை என்றாலும் சிறந்த நடிகர்கள். குறைந்த கட்டணம் என்றாலும் பரிகாரம் என்று சொல்லி ஒரு பிட்டை போடுவார்கள். ஒரு குட்டி தேவாங்குடன் வண்ண வண்ண கயிறுகளை விற்றுக்கொண்டு ஒரு பெரியவர் வருவார். இவரை நான் ஓவியமாக கூட தீட்டியிருக்கிறேன். சீரியல்கள் இவர்களை கூட ஒதுக்கித் தள்ளிவிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் கடையில் ஒரு ரெசிடென்ட் ஜோதிடர் இருந்தார். அதாவது எங்கள் ஓவியக்கூடத்தின் ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு கேக் மாஸ்டர். பிரபல  பேக்கரியில் பணிபுரிந்தது போக மீதி நேரத்தை இங்கே ஓட்டுவார். வெற்றிலையில் மை தடவி ஜோதிடம் சொல்வது இவர் ஸ்பெஷாலிடி. இந்த சையது பாயை தேடி ஏகப்பட்ட கஸ்டமர்கள் வருவதுண்டு. எருமையை காணோம், காதல் வசியங்கள் போன்ற தலை போகும் விஷயங்களை கஞ்சா போதையுடன் நிவர்த்தி செய்வதுண்டு. இவரது கஸ்டமர்கள் எனக்கும் நண்பர்களாகிபோயினர். பிளாட்பாரத்தில் அரும்பு மீசை, டை, மற்றும் பெரிய பூத கண்ணாடியுடன் அனாயாசமாக கைரேகை பார்க்கும் டிப் டாப் ஜோதிடரை இவர் வாய் பிளந்து பொறாமையுடன் பார்க்கும் காட்சியையும் கண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சூலூர் ஜோதிடர் இன்னும் பிரபலமாக இருந்தவர். ஒரு முறை பக்கத்து வீட்டில் ரொட்டி அடுப்பு வைத்துக்கொண்டிருந்த நீலகண்ட பிள்ளையின் அடுக்கு டிபன் பாக்ஸ் காணாமல் போய்விட்டது. எங்கள் கடையில் வேலை பார்த்து வந்த மலையாள காக்காவின் மீது இவருக்கு சந்தேகம். என்ன ஆனாலும் சரி, சூலூர் ஜோசியரை பார்த்துவிடுவது என்று சூழுரைத்து சென்றார். அரை டிராயர் பொடியனான   நான் துணைக்கு. சூலூர் ஜோசியர் நாஸ் தியேட்டருக்கு பக்கத்து மாடியில் இருந்தார். ஒரு தலைப்பா, அங்கவஸ்திரம், கோட்டு என்று பழைய படத்து அப்பா போல இருப்பார். நம் பிரச்சினைகளை சொல்லக்கூடாது. அவரே கண்டுபிடிப்பார். அதுதான் இவரிடம்  போவதில் உள்ள த்ரில்.&lt;br /&gt;&lt;br /&gt;பேக்கரி தாத்தாவை உற்று பார்த்தார். ஜன்னலுக்கு வெளியே பார்த்தார். 'புறா வளர்க்கிறது ஒரு கேந்தி இல்லை ?' என்று வினவினார். பயபக்தியுடன் ஆமோதித்தோம்.&lt;br /&gt;திடீரென்று இல்லாத தாடியை உருவுவது போல் பாவனை செய்து கண்ணடித்தார்.&lt;br /&gt;விழித்தோம்.&lt;br /&gt;'துலுக்கன்' என்று உரக்க அறிவித்தார்.&lt;br /&gt;'அவன்தான் உங்க டிபன் பாக்சை திருடியிருக்கிறான்.'&lt;br /&gt;&lt;br /&gt;அன்று ஏற்பட்ட சூலூர் ஜோசியர் பைத்தியம் என்னை பற்றிக்கொண்டது. எத்தனை முறை மற்றவர்களுடன் போயிருப்பேன். என் அப்பாவின் ஜெர்மன் ஜியாமெட்ரி பாக்ஸை திருடியது யார், ரவி பப்ளிசிட்டி வாசலில் கிடந்த மந்திரித்த தகடுகளை போட்ட சதிகாரன் யார்  என்று பலப்பல சரித்திர பிரசித்தி பெற்ற துப்புகளை அவர் அனாயாசமாக துலக்கியபோது பக்கத்தில் இருந்த பொடியன் என்று பெயர் பெற்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்காக நானே அங்கு போவேன் என்று நினைத்ததேயில்லை, என் சைக்கிள் திருட்டு போகும் வரை. வளர்ந்து கல்லூரிக்கு போகும் பருவத்தில், புரட்சிகர சிந்தனைகளுடன் சைக்கிளில் ஏகப்பட்ட சிவப்பு வடிவங்களை தீட்டி அழகுற வைத்திருந்தேன். கல்லூரி வளாகத்திற்குள் எவனோ கம்யூனிச எதிர்ப்பாளன் சைக்கிளை லவட்டிக்கொண்டு போய்விட்டான். காவல் நிலையத்தில்  புகார் கொடுத்துவிட்டு கடைக்கு வந்தேன். என் தந்தையிடம் இதை எப்படி சொல்வது என்ற பயத்தில் தேம்பி அழுதுவிட்டேன். அனைவரும் கலந்தாலோசித்தனர். 'சூலூர் ஜோசியரிடம் போ ' என்று அறிவுறுத்தல்கள்.&lt;br /&gt;ஒரு புரட்சியாளன் ஜோதிடரிடம்  போவதா என்று ஏகப்பட்ட மனக் குழப்பங்களுடன் தனியாக சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பல வருடங்கள் கடந்திருக்கின்றன. அதே மாடி, அதே தூசி படிந்த அறை. ஜோதிடர் மட்டும் மாறியிருக்கிறார். அவர் மகன். அதே பாணி.&lt;br /&gt;&lt;br /&gt;திரு திரு என்று விழித்துக்கொண்டிருந்த என்னை கடுமையாக பார்த்தார். திருடனை போல நான் உணர்ந்தேன்.&lt;br /&gt;'வாகனம்'!&lt;br /&gt;ஒற்றை வார்த்தை. &lt;br /&gt;கண்களில் நீர் கோத்துக்கொண்டது.&lt;br /&gt;'சரி, போ, போ, கிடைக்காது, வேறே வாங்கிக்கோ.'&lt;br /&gt;&lt;br /&gt;அதற்க்கு பிறகு நான் எந்த ஜோதிடரையும் பார்த்ததில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-730568042598533168?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/730568042598533168/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=730568042598533168' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/730568042598533168'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/730568042598533168'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2008/12/blog-post_09.html' title='ஜோதிடம்'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-2553227225782877236</id><published>2008-12-07T00:22:00.000-08:00</published><updated>2008-12-07T01:50:31.032-08:00</updated><title type='text'>திலகங்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STucRUNwerI/AAAAAAAAAKU/mgub48DKIDQ/s1600-h/sivaji.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 253px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STucRUNwerI/AAAAAAAAAKU/mgub48DKIDQ/s320/sivaji.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5276983209692789426" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் வசிப்பது ஒரு பிசியான சாலையில். அக்கம் பக்கம்  கடைகள். பக்கத்து&lt;br /&gt;சந்துகளில்தான் மக்கள் வசிப்பது. நகரின் முக்கியமான சாலை என்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல். இதை தட்டச்சு செய்யும்போது கூட, ஆட்டோவில் இருந்து புஷ்பவனம் குப்புசாமி இறங்கி, பாட்டு புத்தகம் வாங்க எதிர் கடைக்கு போகிறார். ஞாயிறு மட்டும் சாலையில் ஒரு ஆளை பார்க்கமுடியாது. வெடிகுண்டுக்கு முன் எப்போதும் ஊர்வலங்கள், அது இது என்று ஜெ ஜேவென்று இருக்கும். பிறகு போலீஸ் கெடுபிடியினால் அதெல்லாம் இல்லை என்றாகிவிட்டது. தேர்தல் சமயங்கள் விதிவிலக்குகள். பெரிய பெரிய தலைவர்கள் முதல் குண்டு கல்யாணம், ஹாஜா செரீப் வரை கையெடுத்து கும்பிட்டுக்கொண்டு செல்வார்கள். பக்கத்து மைதானங்களில் பொதுக்கூட்டங்கள் நடக்கும். இப்போதெல்லாம் அந்த நேரங்களில் சீரியல்கள் பரபரப்பாக இருப்பதால் பொதுக்கூட்டங்களுக்கு ஆட்கள் வருவதில்லை. கூட்டங்களும் இல்லாமல் போய்விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை சிவாஜி எங்கள் சாலை வழியாக வேனில் பிரச்சாரம் செய்து கொண்டு வருவார் என்று அறிவிக்கப்பட்டது. அன்று ஞாயிறு. சிவாஜி என் உயிர் என்பதால் ஒரே பரபரப்பாக இருந்தேன். மதியம் சாலையில் ஈ காக்கா இல்லை. நடிகர் திலகம் வந்துகொண்டிருக்கிறார் என்று ஒரு மைக் செட் ஆட்டோ கூவிக்கொண்டு பறந்தது.&lt;br /&gt;வாசலுக்கு வந்து காத்திருந்தேன். திறந்த ஜீப்பில் சிவாஜி கும்பிட்டுக்கொண்டே வந்தார். எனக்கு உடலெல்லாம் புல்லரிப்பு. பதைபதைப்புடன் கைகளை தூக்கி ஆட்டுகிறேன். துள்ளி குதிக்கிறேன். (மூன்றாம் பிறை கிளைமாக்ஸ் நினைவில் கொள்க)&lt;br /&gt;சிவாஜி கண்டு கொள்ள வேண்டுமே. யாருமே இல்லாத சாலையில் எதையோ பார்த்து கும்பிட்டுக்கொண்டே போகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சீ என்றாகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வாரம் எம்ஜியார் வருகிறார். அன்று வேலை நாள்தான். எங்கும் ஒரே பரபரப்பு. சாலையெங்கும் மக்கள் காத்திருக்கின்றனர். சந்துகள் சாலையில் சேரும் இடங்களில் பெண்கள் கூட்டம். எம்ஜியாரின் வேன் ஒரு வழியாக வந்தது. சந்து முனை பெண்கள் வரை உற்சாக ஆரவாரம் . அவர் அவர்களை பார்த்து கும்பிட்டார். கடைகளை பார்த்து கையசைத்தார். 'போய்யா, கிழவா' என்று மனதினில் திட்டிக்கொண்டு கடு கடு என்று என் வீட்டு வாசலில் நின்றிருந்த என்னை பார்த்து பெரிதாக சிரித்தார். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஆம். என்னைத்தான் இன்னும் பார்க்கிறார். அசடு வழிந்துகொண்டு இறுக்கமாக கட்டிக்கொண்டிருந்த கைகளை பிரித்து அவரை நோக்கி அசைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அரை நிஜார் பருவத்தை கடந்தபோதுதான், அரசியலில் எம்ஜியாரின் வெற்றியின் ரகசியமும் சிவாஜியின் தோல்விக்கான காரணங்களும் கொஞ்சம் புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் சிவாஜி ரசிகன் என்ற நிலைப்பாட்டிலிருந்து நான் மாறவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuS25pQHEI/AAAAAAAAAIs/H9apqXfdzSk/s1600-h/2208689185_862e871be7_m.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 240px; height: 180px;" src="http://1.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuS25pQHEI/AAAAAAAAAIs/H9apqXfdzSk/s320/2208689185_862e871be7_m.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5276972860279102530" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-2553227225782877236?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/2553227225782877236/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=2553227225782877236' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/2553227225782877236'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/2553227225782877236'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2008/12/blog-post_07.html' title='திலகங்கள்'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STucRUNwerI/AAAAAAAAAKU/mgub48DKIDQ/s72-c/sivaji.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-4971671992116752221</id><published>2008-12-06T00:16:00.001-08:00</published><updated>2008-12-06T00:16:54.946-08:00</updated><title type='text'>கமுகர</title><content type='html'>பயணம் செல்லுபோது எந்த ஊரை கடந்தாலும் அந்த ஊருடன் சம்பந்தப்பட்ட பிரபலமானவரின் பெயர் சட்டென்று மனதில் உரைக்கும். கொத்தமங்கலம் என்ற பெயரை கேட்டவுடன் சுப்பு என்று மனம் சொல்கிறதல்லவா? அதுவும் கேரளா என்றால் கேட்கவே வேண்டாம். அடூர் கோபாலகிருஷ்ணன், மாளா அரவிந்தன், பரவூர் பரதன், கைதப்புரம் தாமோதரன் நம்பூதிரி என்று சடசடவென்று பெயர்கள் மரத்திலிருந்து பழம் போல வீழும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை எங்கள் கடைக்கு ஒரு வாட்ட சாட்டமான மலையாளி வந்தார். ஒரு காகித டீலர் கம்பெனிக்கு போர்டு செய்ய வேண்டும். அவர் கேரளத்திலிருக்கும் அந்த கம்பெனியின் தலைமை நிர்வாகி. விசிட்டிங் கார்டை தந்தார். அதில் அவரது வீட்டு முகவரி கமுகர என்ற ஊரில் இருப்பதாக இருந்தது. உடனே எனக்குள் இருந்த 'ஊரும் பேரும்' ரசிகன் விழித்துக்கொண்டான்.&lt;br /&gt;'கமுகர புருஷோத்தமன்"&lt;br /&gt;சென்ற தலைமுறையின் பிரபல பின்னணி பாடகர். வித்தியாசமான குரல் படைத்தவர். நிறைய பாடல்களை கேட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வாட்ட சாட்ட பேர்வழியிடம் 'கமுகரவில் நானறிந்த ஒரு பிரபலம் இருக்கிறாரே'&lt;br /&gt;என்று ஆரம்பித்தேன்.&lt;br /&gt;'யார் அவர்' என்று அவர் வினவினார்.&lt;br /&gt;'கமுகர புருஷோத்தமன், பிரபல பாடகர், அவர் பாட்டை கேட்டிருக்கிறேன்' என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் முகத்தில் ஆச்சரியம். தமிழ்நாட்டில் ஒரு கடையில் உட்கார்ந்து கொண்டு டைப் அடித்துக்கொண்டிருக்கும் ஒரு தமிழனிடம் இதை எதிர்பார்த்திருக்கமாட்டார் என்று வெற்றி பெருமிதத்துடன் நான் அவர் முகத்தை நோக்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'அவர் எனது தந்தை' என்று அவர் சலனமில்லாமல் சொன்னார். மகிழ்வை மெதுவாக வெளிப்படுத்தினார். சந்தேகத்துடன் 'இப்ப அவர் இருக்கிறாரா' என்று வினவினேன்.&lt;br /&gt;'இல்லை, இருந்தால் இப்படி கோயம்புத்தூரில் ஒருவர் தன்னை விசாரித்தார் என்று தெரிந்து மகிழ்ந்திருப்பார்'.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று முழுவதும் நான் நானாக  இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-4971671992116752221?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/4971671992116752221/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=4971671992116752221' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/4971671992116752221'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/4971671992116752221'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2008/12/blog-post_8765.html' title='கமுகர'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-4519293843296946159</id><published>2008-12-06T00:14:00.001-08:00</published><updated>2008-12-06T00:14:55.380-08:00</updated><title type='text'>உபசாரம்</title><content type='html'>எங்கள் வீட்டுக்கு பின்புறம் தேவேந்திர வீதி. அவர்களுக்கென்றே ஒரு மாரியம்மன் கோவில் இருக்கிறது. மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பூசாரி மாறிவிடுவதுண்டு. அதில் ஒருவர் மிகவும் அடக்கமானவர். வருடாவருடம் கோவிலுக்கு பெயின்ட் அடிக்க என்னிடம் நன்கொடை வாங்குவதுண்டு. அவரிடம் பூசை முறைகளை பற்றி நான் விசாரிப்பதுண்டு. கருவறைக்குள் எல்லோரும் வரலாமா என்றவுடன் கோவித்துக்கொண்டார். ஒரு பயலை உள்ளே விடமாட்டேன், அப்புறம் நான் எதுக்கு அங்கே பூசாரி என்று பொருமினார். (கருவறைக்குள் பார்ப்பனர்கள்தாம் மற்றவரை நுழைய விடாமல் தடுக்கிறார்கள் என்று சொல்பவர்கள் கவனிக்க)&lt;br /&gt;&lt;br /&gt;இவர் ஒரு நகராட்சி ஊழியர். மின்மயானம் அமைந்த பிறகு அங்கே வாட்ச்மேன் டியூட்டி போட்டுவிட்டார்கள். நெற்றியில் பெரிய பட்டை அடித்துக்கொண்டு சிவப்பழமாக மயானத்தில் காட்சி அளிப்பார். மயானத்திற்கு எப்போதாவது ஏதாவது சாவுக்கு நான் போனால், எனக்கு ராஜ உபசாரம் நடக்கும். எனக்கே கூச்சம் வரும் அளவிற்கு உபசரிப்பார். சுடுகாட்டில் என்னடா உபசரிப்பு என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதாவது நானே ஒதுங்கி நின்றாலும் என்னை தர தர என்று இழுத்து ஸ்பெஷல் தரிசனத்திற்கு இரும்பு ஷட்டர் தாண்டி உள்ளே அழைத்து சென்று விடுவார். உற்றார் உறவினரெல்லாம் வெளியே நிற்க, சடலம் பக்கென்று பற்றிக்கொள்ளும் காட்சியை விசேஷமாக என்னை பார்க்கவைக்கிறாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காகவே நான் இப்போதெல்லாம் மயானம் செல்வதை தவிர்த்துவிடுகிறேன்.&lt;br /&gt;திடீரென்று காலையில் ஒருநாள் இவரிடம் சிக்கிக்கொண்டேன். &lt;br /&gt;'என்ன சார், பாக்கவே முடியவில்லை, சுடுகாட்டுக்கும் வர்றதேயில்லை..'&lt;br /&gt;&lt;br /&gt;கடுப்பாகி விட்டது.'&lt;br /&gt;'நிச்சயமா வருவேனுங்க, எங்க செத்தாலும் ஆத்துப்பாலம் சுடுகாடுதான்னு உயிலே எழுதி வெச்சுட்டேன்'&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு என்னவோ போலாகிவிட்டது.&lt;br /&gt;எனக்கும்தான். ஒரு நல்ல மனிதரை புண் படுத்திவிட்டேனோ  என்று.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-4519293843296946159?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/4519293843296946159/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=4519293843296946159' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/4519293843296946159'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/4519293843296946159'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2008/12/blog-post_06.html' title='உபசாரம்'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-3016650602926921851</id><published>2008-12-05T23:58:00.001-08:00</published><updated>2008-12-06T02:48:53.387-08:00</updated><title type='text'>தொலைந்து போனவர்கள்</title><content type='html'>அந்த பையனை அவன் அப்பா என்னிடம் அழைத்துவந்தபோது அவனுக்கு வயது 17. பிளஸ் 2 முடித்திருந்தான். ஓவியக்கல்லூரியில் சேர்ந்து பயில வேண்டும் என்பது ஆசை. அதற்கான பயிற்ச்சிக்களம்தானே எங்கள் கடை. பிரமாதமாக வரைவான். நல்ல பயிற்ச்சி எடுத்த பின் நுழைவுத்தேர்வுக்கு அனுப்பி வைத்தோம். முற்பட்ட வகுப்பில், நெல்லை சைவப்பிள்ளையாய் பிறந்ததினால் சீட் கிடைக்கவில்லை. விடவில்லை, மீண்டும் ஒரு வருடம் பயிற்ச்சி. அடுத்த வருடம் மீண்டும் கஜினி முகம்மது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தந்தை ஒரு புகைப்பட ஆர்வலர், மில்லில் குமாஸ்தா. பையனுக்கும் புகைப்பட ஆர்வம் தொற்றிவிட்டது. எனக்கு ஒரு யோசனை தோன்றியது. ஏன் இவனை திரைப்படக்கல்லூரிக்கு அனுப்பக்கூடாது, என் தம்பி அப்போதுதான் படிப்பை முடிக்கிறான். பையனின் மாமா நடிகர் சிவகுமாருக்கு நண்பர். எப்படியோ திரைப்பட்க்கல்லூரியில் மெரிட்டிலேயே இடம் கிடைத்தது. தங்க பதக்கத்துடன்  வெளிவந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கும்போதே சா.கந்தசாமியின் 'தொலைந்து போனவர்கள்' தொலைக்காட்சி தொடரிலும் சிறுவனாக நடித்து புகழ் பெற்றான். என் தம்பியின் முதல் படமான 'அதர்மத்தில்' துணை ஒளிப்பதிவாளராக சேர்த்துவிட்டேன். இன்னொரு சிஷ்யன் மணிராஜுக்கும் இதுதான் அறிமுகப்படம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட நாட்கள் கழித்து அவன் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டான், கஸ்தூரிமான், திருவிளையாடல், மருதமலை, மலைகோட்டை என்று அவன் பணி புரியும் படங்களின் பெயரை சொன்னான். மிகவும் மகிழ்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வைத்தி தன் சொந்த  சிக்கல்களில் இருந்து மீண்டு, மீண்டும் கலை பயணத்தை தொடர வேண்டும் என்பது என் பேராவல்.&lt;br /&gt;&lt;br /&gt;Nov 07&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-3016650602926921851?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/3016650602926921851/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=3016650602926921851' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/3016650602926921851'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/3016650602926921851'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2008/12/blog-post_6432.html' title='தொலைந்து போனவர்கள்'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-5141009882310142270</id><published>2008-12-05T23:56:00.000-08:00</published><updated>2008-12-06T02:47:00.053-08:00</updated><title type='text'>ஷேர் மார்க்கட்டும் நானும்</title><content type='html'>இலக்கிய நண்பர்கள் எப்போதும் எனக்கு ஏராளம். எண்பதுகளில் கோவையில் ஒரு கோஷ்டிக்கு,புதிதாக தொழில் தொடங்கவேண்டும் என்று ஒரு பேரார்வம் தோன்றியது. கம்யூனிஸ்ட் மற்றும் தி.க அனுதாபிகள்; எல்லோரும் கவிஞர்கள், எழுத்தாளர்கள். முன்னணியில் ஒரு நாலு பேர்- இயக்குனர்கள் . பப்ளிக் லிமிடட் கம்பெனி. பங்குகள் விற்றார்கள். என்னை போல், இஞ்சினீயர் கந்தசாமி போன்றவர்கள் எல்லாம் அப்போது ஆளுக்கு 5,000 போட்டோம். எங்கள் உயிர் நண்பரும் பொலம்பல் பொங்கியண்ணன் என்று அன்பாக அழைக்கப்பட்ட வக்கீல் பாலு  தன் தோட்டத்தையெல்லாம் விற்று பெரும் பங்குகள் வாங்கி இயக்குனரானார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தொழில் என்று சொல்லவேயில்லையே. ஊசி மருந்தை அடைப்பார்கள் அல்லவா , ஒரு சிறிய கண்ணாடி ஆம்பியூல், அதை தயாரிப்பதுதான். தென்னாட்டிலேயே எங்கும் அது தயாரிக்கப்படவில்லை என்று சர்வேய் முடிவுகள் தெரிவித்ததனால் எல்லோரும் உற்சாக்மாக இருந்தனர். அரசு நிறுவனமான டிக்கில் 10 லட்சம் லோன் கிடைத்தது.&lt;br /&gt;கவிஞர்கள் இளையவனும் பாதசாரியும் வேனிலும் தலைமை பொறுப்பு எடுத்துக்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இலக்கிய பெரும் தலைகள் கலந்து கொண்ட அற்புதமான திறப்பு விழா. இயந்திரத்தை இயக்குவதற்க்கென்றே, கல்கத்தாவிலிருந்து ஒரு முதியவரை கொண்டு வந்திருந்தனர். அவர் என் அபிமான இந்தி பாடகர்களில் ஒருவரான மன்னாடேயின் உறவினர் என்றவுடன் எனக்கு அவர் மேல் தனி பாசம் பொங்கி விட்டது. என் இந்தியை கூர் தீட்ட ஒரு ஆளும் வேண்டுமில்லையா! என் நண்பர்கள் நிறைய பேர் பங்குகள் வாங்கினர். இயக்குனர்களும் பெரும் கடன் வான்கியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்டர்களுக்காக அலைந்தனர், திரிந்தனர். ஒன்றும் தேறவில்லை . இயந்திரமும் இயக்க வந்தவரும் வெட்டியாக உறங்கினர் . தொழிற்சாலையில், எப்போதும்  இலக்கிய/ அரசியல் சர்ச்சைகள், வடையும், பீரும், டீயும் சிகரெட்டும் கரைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கடன்கள் அடைக்கபடவில்லை. மூடுவிழா நடந்தது. டிக் வழக்கு தொடர்ந்து இயந்திரத்தை பறிமுதல் செய்தது. பாக்கி தொகைக்காக வழக்கும் நடந்தது. தோழர்கள் உடைந்து சிதறிப்போனார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்காக வழக்கை நடத்தியவர், இளையவனின் உறவினரும் என் வகுப்பு தோழருமான ஒருவர். டிக்கின் சட்ட அதிகாரியும் என் வகுப்பு தோழிதான். காலம் எல்லோரையும் புரட்டி போட்டது. 'பள்ளிக்கூடம்' படத்தில் வருவது போல் இவர்கள் என்ன ஆனார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;பாதசாரியின் திருமணம் முறிந்து, மன நிலை பாதிக்கப்பட்டு, பின்னர் 'காசி' என்ற அற்புதமான சிறுகதையை எழுதினார். இரண்டாவது திருமணம் நடந்து பொறுப்புள்ள கணவனாக இப்போது ஏதோ ஒரு சிறிய பத்திரிகையில் நிருபராக இருக்கிறார். கவிதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேனில் அடிபட்டு உதைபட்டு இப்போது ஒரு அச்சகம் நடத்துகிறார். ஏராளமான கவிஞர்களுக்கு கடனுக்கு புத்தகம் அடித்து கொடுத்துவிட்டு, அவர்கள் இவருக்கு போட்ட நாமத்துடன் உலா வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலு, வக்கீல் தொழிலை விட்டு சட்ட அதிகாரியாக வேலைக்கு போனார். சம்பாதித்த பணத்தில் திடீரென்று எங்காவது நிலம் வாங்குவார். வேலையை ராஜினாமா செய்துவிட்டு விவசாயம் செய்வார். நஷ்டம் ஏற்பட்டவுடன் மீண்டும் வேலைக்கு போவார். இப்போது மாதம் ஒரு லட்சம் சம்பளத்தில் ஒரு பெரிய கம்பெனியில் கூலிக்கு மாரடிப்பதாக சொல்லிக்கொள்வார். கந்தசாமி, இப்போது உள்ளூர் டாட்டா பிராஜெக்ட்ஸின் தலைமை மேலாளர். நான் மட்டும் அப்படியே இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடடா, ஒருவரை விட்டுவிட்டேனே! எம்.எல்.அனுதாபியான இனியவன் குடும்பத்தை விட்டு எங்கோ போய்விட்டார். அலைந்து திரிந்து காஷாயத்துடன் திரும்பி வந்தார். ஜோதிடம், நாடி என்று ஏதோ செய்துவந்தார். திடீரென்று ஒரு நாள் முழு நீள சாமியாராக மாறிவிட்டார் . அவர் மனைவியும் மாதாஜியாக மாற, ஒரே மகன் இளைய பட்டமாக, ஒரு பீடத்தை அமைத்துவிட்டார். பெரும் செல்வந்தர்கள் அவர் பக்தர்கள். ஒரு கோவிலையும் கட்டி, யோகா வகுப்புகளும் நடத்தி ஒரு லெவெலுக்கு வந்துவிட்டார். ஆனால் ஜக்கிக்கு அடித்த அளவிற்க்கு அதிர்ஷ்டம் அடிக்காததால், குடத்திலிட்ட விளக்காக திகழ்கிறார் எங்கள் லோகல் ஜகத்குரு!&lt;br /&gt;&lt;br /&gt;Oct 07&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-5141009882310142270?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/5141009882310142270/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=5141009882310142270' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/5141009882310142270'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/5141009882310142270'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2008/12/blog-post_4098.html' title='ஷேர் மார்க்கட்டும் நானும்'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-7091528375794343696</id><published>2008-12-05T23:54:00.000-08:00</published><updated>2008-12-07T01:38:30.216-08:00</updated><title type='text'>பொன் விலங்கு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuZiq8rzBI/AAAAAAAAAKE/O6LNUWRM0Pg/s1600-h/IMG_5637.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 317px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuZiq8rzBI/AAAAAAAAAKE/O6LNUWRM0Pg/s320/IMG_5637.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5276980209318087698" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;காந்தி ஜெயந்தியை முன்னிட்டு என் மாணவர்களுக்கு ஒரு ஓவியப்போட்டி வைத்திருந்தேன். மிக சிறப்பாக வரைந்திருந்தார்கள். இவர்களை ஊக்குவிக்க ஏதாவது செய்யவேண்டுமே என்று யோசித்தபோது, முதல் மூன்று பரிசு பெற்றவர்களுக்கு வாட்டர் கலர் செட் ஒன்றும், மற்ற 9 ஆறுதல் பரிசு பெற்றவர்களுக்கு பென்சில் செட் ஒன்றும் பரிசாக கொடுக்கலாம் என்ற எண்ணம் வந்தது. அதிகாரிகளிடம் கேட்டேன். காந்தி ஜெயந்தி அன்று விழா இருக்கிறது. அன்று வைத்து கொள்வோம் என்றனர். சொல்ல மறந்துவிட்டேனே. என் மாணவர்கள் அனைவரும் கொலைக்குற்றத்திற்க்காக ஆயுள் தன்டனை பெற்ற சிறைவாசிகள். கைக்காசு போட்டு பரிசுப்பொருட்களை வாங்கிக்கொண்டு போனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறை விழாக்கோலம் பூண்டிருந்தது. ஒர்க் ஷாப்பில்தான்  விழா. எலுமிச்சம்பழத்துடன் 'இல்லவாசிகளின்' வரவேற்பு. திடீரென்று ஒரு பெரும் கூட்டம் வந்தது. முழு சூட் உடையுடன் ஆண்களும் லிப்ஸ்டிக் பெண்களும், லயன்ஸ் , ரோட்டரி குழுவினர். மேடையில் பேனர்கள் கட்டப்பட்டன. புகைப்படக்காரர்களும் வந்தனர். சிறையில் சேவை செய்யும் பணியாளர்களுக்கும், வெளியாட்களுக்கும் 'சிறை செம்மல்'(?) விருதும் பொன்னாடையும் வழங்கும்  வைபவம். யோகா, எய்ட்ஸ் விழிப்புணர்வு, இசை, நடனம் மற்றும் எல்லோரும் இந்த விருதை பெற்று சென்றுவிட்டனர். பொன்னாடைக்காக தினவெடுத்த தோள்களுடன்   காத்திருந்தேன். யாரும் கூப்பிடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;லயன்ஸ்  கிளப்பினர் கொண்டுவந்திருந்த பரிசுகளை பார்த்து மலைத்து என் அவல் மூட்டை ஒளிந்துகொண்டது. பிரம்மான்டமான பிளாஸ்டிக் குப்பை வாளிகள், பக்கெட்டுகள் முன்னே என் கலர் பாக்ஸ் எந்த மூலைக்கு! குறைந்த மின்விசிறிகள் கொண்டது அந்த அரங்கம். கோட்டு போட்ட லயன்ஸ் வியர்வை மழையில் நெளிந்து கொண்டு பிளாஷ் ஒளியில் ஒரு வழியாக 'ஓட்டப்பந்தயம், தாண்டி குதித்தல்' போன்ற விளையாடு போட்டிகளுக்கு பரிசளித்துவிட்டு வியர்வையை துடைத்துவிட்டு வெளியேறிவிட்டனர். ஓவிய போட்டி பற்றி பேச்சு மூச்சே காணோம். பாவம், என்னுடைய மாணவர்கள் வெகுண்டெழுந்து வெல்பேர் ஆபீசரிடம் முறையிட்டவுடந்தான், அவர்களுக்கு நினைவே வந்தது போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிளாஷ் வெளிச்சங்கள் இல்லாத அந்த அரங்கில் இப்போது மேடையில் நானும் அதிகாரிகளும் கீழே இல்லவாசிகள் மட்டுமே. பரிசுகளை வழங்கினேன் . எங்கிருந்தோ அவர்கள்  வரைந்த ஓவியங்கள் மேடைக்கு வந்தன. டி.ஐ.ஜி, சூப்பெரின்டெண்டெண்ட், ஜைலர் அனைவரையும் பென்சிலில் அற்புதமாக வரைந்து அவர்களுக்கே பரிசளித்தனர்.&lt;br /&gt;அதிகாரிகள்  முகத்தில் அப்போதுதான் புன்னகை மலர்கிறது. கைதிகளின் கரகோஷம் , காலையிலிருந்து முதன் முதலாக அரங்கில் கலகலப்பு. பெருமையுடன் (பொன்னாடையில்லமலும்) வெளியெறினேன்.&lt;br /&gt;'சார், சாப்பாடெல்லாம் ரெடி, எங்களோடு சாப்பிடுங்கள்' என்றனர் மாணவர்கள்.&lt;br /&gt;'என்னப்பா ஸ்பெஷல் இண்ணக்கி?'&lt;br /&gt;'தக்காளி சாதம்'&lt;br /&gt;'அட போஙப்பா, ஜெயில்ல சிக்கன் எல்லாம் போட்ராங்கண்ணு சொன்னாங்க ?'&lt;br /&gt;என்று கிண்டலடித்தேன்.&lt;br /&gt;'சார், இண்ணக்கி காந்தி ஜெயந்தி'.&lt;br /&gt;&lt;br /&gt;சாப்பிடாமல் விடைபெற்றேன்.&lt;br /&gt;Sep 07&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-7091528375794343696?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/7091528375794343696/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=7091528375794343696' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/7091528375794343696'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/7091528375794343696'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2008/12/blog-post_2166.html' title='பொன் விலங்கு'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuZiq8rzBI/AAAAAAAAAKE/O6LNUWRM0Pg/s72-c/IMG_5637.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-5760427865769637757</id><published>2008-12-05T23:37:00.001-08:00</published><updated>2008-12-06T02:30:32.022-08:00</updated><title type='text'>புட் போர்டில்</title><content type='html'>புட்போர்டில் வைரமுத்துவுடன்....&lt;br /&gt;&lt;br /&gt;இதுவும் தூள் தலைப்பு!  சாவி  நடத்திக்கொண்டிருந்த 'திசைகள்' இளைஞர் இதழுக்கு மாலன் ஆசிரியர். இப்போதைய   பிரபலங்கள் எல்லாம் அப்போது சின்னப்பசங்களாக, மாணவர்களாக, அதில் எழுதிக்கொண்டிருந்தனர். என் நண்பர் மார்ஷல் (இன்றைய பாண்டிச்சேரி தொலை தொடர்பு பொது மேலாளர்) ஒரு தொடர்கதை எழுதிக்கொண்டிருந்தார்; கதையின் தலைப்பு-'மென்மையாக கொலை செய்'! (அவர் எழுதியதை நிறுத்தியதில் எனக்கு பெரும் பங்கு உண்டு)அதற்க்கு நான் ஓவியம் வரைந்துகொண்டு இருந்தேன். சில சமயம் அமிஞிக்கரையிலுள்ள பத்திரிகை அலுவலகத்திற்க்கு செல்வதுண்டு. அங்கு லே அவுட் ஓவியராக கங்கன் என்ற இலைஞரும் அவருக்கு உதவியாக அரஸ் என்ற இலைஞரும் இருப்பார்கள். கங்கன் என் ஓவியங்களை கடுமையாக விமர்சிப்பார். அரஸ் அமைதியாக இருப்பார். இன்று அரஸ் ஒரு பெரும் புகழ் பெற்ற ஓவியர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் திருவல்லிக்கேணியிலுருந்து 27 ஈ பஸ்ஸில் கிளம்பினேன். பயங்கர கூட்டம். புட்போர்டில் பயணம். நுங்கம்பாக்கத்தில் ஒருவர் பஸ்ஸில் ஏறினார். கையில் ஒரு பைல். கறுத்த முகம்,டக் செய்த பேண்ட், மெல்லிய மீசை, இரு முனைகள் மட்டும் கொஞ்ஜம் பெரிதாக. வைரமுத்துதான். சில பத்திரிகைகளில் புகைப்படம் பார்திருக்கிறேன். ஓரிரு வாரங்களுக்கு முன்தான் 'நிழல்கள்' வெளியாயிருக்கிரது. புட்போர்டில் தொங்கிகொண்டெ அமிஞ்ஜிக்கரையில் இறஙினேன். அவரும் அதே ஸ்டாப்பில் இறங்கினார் . சாவி அலுவலகத்திற்க்கு போனேன். அவரும் பின் தொடர்ந்தார். அங்கிருந்து  'விசிட்டர்' பத்திரிகையும் வெளிவந்து கொண்டிருந்தது. அனந்து அறைக்குள் வைரமுத்து போய்விட்டார். அப்போது விசிட்டரில் தொடர்ந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தர்.&lt;br /&gt;&lt;br /&gt;'....திரைப்படத்தை&lt;br /&gt;சின்ன தீக்குச்சிக்கு&lt;br /&gt;தின்ன கொடுப்போம்'&lt;br /&gt;&lt;br /&gt;என்ற திரைப்படங்களுக்கெதிரான புகழ் பெற்ற வரிகள் அதில்தான் பிரசுரமாகின. அலுவலகத்தில் வழக்கம் போல கங்கனிடம் அர்ச்சனைகள், புன்முறுவலுடன் அரஸ், கடுகடுவென்றிருந்த நகைச்சுவையாளர் சாவி, பக்கத்து டேபிளில் பரபரப்பாக எழுதிக்கொண்டிருந்த பாலகுமாரன்....போன வேலையை முடித்துவிட்டு வெளியே வந்தேன். பஸ்ஸுக்கு காத்திருந்தபோது வைரமுத்துவும் வந்தார். மெதுவாக பேச்சு கொடுத்தேன். 'அது ஒரு பொன்மாலை பொழுது' பற்றித்தான் நிறைய பேசினோம். பஸ் வந்தது. மீண்டும் புட்போர்ட். அதிலும் பேசிக்கொண்டே வந்தோம். இறங்கும்போது  சொன்னேன். 'மறந்துடாதீங்க, என் பெயர்  ஜீவா'.&lt;br /&gt;பதிலுக்கு கூவினார்- 'மறக்க முடியுமா  ஜீவா என்ற பெயரை'. அவர் சொன்னது தோழர் ஜீவாவை.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்க்கு பிறகு பல விழாகளில் அவரை அருகே பார்த்திருக்கிறேன். பேசியதேயில்லை. பேச மனமும் வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;Aug 07&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-5760427865769637757?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/5760427865769637757/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=5760427865769637757' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/5760427865769637757'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/5760427865769637757'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2008/12/blog-post_7485.html' title='புட் போர்டில்'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-3218887377270316747</id><published>2008-12-05T23:35:00.000-08:00</published><updated>2008-12-07T01:36:57.972-08:00</updated><title type='text'>ஏழாவது மனிதன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuZKJhhxqI/AAAAAAAAAJ8/Hqelt91a9wY/s1600-h/shed.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 213px;" src="http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuZKJhhxqI/AAAAAAAAAJ8/Hqelt91a9wY/s320/shed.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5276979788028954274" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;எங்கள் வீடும் தொழிலும் டவுன் ஹால் 5 முக்கு பகுதியில் உள்ளன. இங்கு ஓட்டல் மனோகரா என்ற புகழ் பெற்ற பிரியாணி ஓட்டல் இருந்தது. இதன் உரிமையாளர் மைனர் நாராயணன். வீடும் எங்கள் ஏரியாவில்தான். இவரது மகன் வேலாயுதன் நாயர்; எம்.ஜி.யார் போன்ற தோற்றம். இன்னொரு புகழ் பெற்ற சென்ட்ரல் பிரியாணி கடையின் முதலாளியான வேலாயுதம் நாடாருடன் தொழில் பங்குதாரராக இருந்து நிரைய திரைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இன்னொரு சுவாரசியம்-இவர்களுடைய திரைப்படங்களுக்கு பேனர் கட் அவுட் வரைந்து கொடுப்பவர் வேலாயுதம் பிள்ளை (அட, எங்கப்பா! என்ன பொருத்தம்)&lt;br /&gt;&lt;br /&gt;நாயருக்கு ரெயின்போ தியேட்டருக்கு எதிரில் இன்னொரு ஓட்டல்/டீக்கடை இருந்தது. ரெயின்போவுக்கு ஆங்கிலப்படம் பார்க்க வரும் எந்த அறிவு/அறிவில்லாத ஜீவியும் இங்கே ஒரு டீயும் தம்மும் அடிக்காமல் போகமாட்டார்கள். இவரது மகன் ஒல்லியாக எங்கள் பகுதியில் சுற்றிக்கொண்டிருப்பான். ஒரு நாள் எங்கள் கடைக்கு ஒரு கவருடன் வந்தான்(ர்). ஏதோ அவருடைய அப்பா கொடுத்துவிட்டிருக்கிறர் என்று நினைத்து, என்ன என்றேன்.&lt;br /&gt;'நான் நடிச்ச படம் ஒண்ணு இந்த வாரம் ராயல் தியேட்டரில் ரிலீசாகுது, காந்திபுரத்தில் பெரிய ஹோர்டிங் வெக்கணும், இந்த ஸ்டில்லை வைத்து கொஞ்சம் முகத்தில் ஆக்ஷனோடு வரையணும்'.&lt;br /&gt;எனக்கு ஒன்றும் புரியவில்லை, இந்த பையன் நடிக்கிறானா..&lt;br /&gt;'படம் பேரு?'&lt;br /&gt;கேட்டவுடன் மகிழ்ச்சியடைந்தேன், நானும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த படம்தான். இயக்குனர் பூனே இன்ஸ்டிடியூட் மாணவர் ஆயிற்றே!&lt;br /&gt;'உங்கப்பா சொல்லவேயில்லையே, சரி செய்துடறேன்.'&lt;br /&gt;வரைந்து வைத்தேன். அவரும் உடன் இருந்தார். கல் வீசினால் விழும் தூரம்தானெ தாத்தா வீடு.&lt;br /&gt;படம் ரிலீசன்ரு தியேட்டரில் ஆளே இல்லை. என்னைப்போன்ற தீவிரவாதிகளும், அவர்களுடைய ஓட்டல் சப்ளையர்களும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் எங்கோ போய்விட்டார்.இப்போது தன் வயதுக்கு மீறிய தோற்றத்துடன் காணப்படுகிறார். எனக்கு அவருடைய நடிப்பு மிகவும் பிடிக்கும். அதற்க்கு பிறகு சந்தித்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;படம் : ஏழாவது மனிதன்&lt;br /&gt;நடிகர் : ரகுவரன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அவர் இல்லை என்பதை நம்ப முடியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-3218887377270316747?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/3218887377270316747/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=3218887377270316747' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/3218887377270316747'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/3218887377270316747'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2008/12/blog-post_7078.html' title='ஏழாவது மனிதன்'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuZKJhhxqI/AAAAAAAAAJ8/Hqelt91a9wY/s72-c/shed.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-102187464939257524</id><published>2008-12-05T23:32:00.000-08:00</published><updated>2008-12-07T01:35:13.106-08:00</updated><title type='text'>தகடு தகடு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuYw5XYa5I/AAAAAAAAAJ0/zVnlZn5ZIQ4/s1600-h/sathyaraj.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 174px;" src="http://1.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuYw5XYa5I/AAAAAAAAAJ0/zVnlZn5ZIQ4/s320/sathyaraj.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5276979354194701202" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வாழ்க்கையில் நிறைய பேரை கடந்து வருகிறோம். வெகு சாதாரணமாக பார்த்த ஆட்கள், பிரபலங்களானவுடன், அட எப்படி இருந்த இவன் எப்படி ஆயிட்டான் என்று பெருமூச்சு விடுவதில்லையா, நம் எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கும், அப்படி சில பேரை சொல்லட்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;கோவை அரசு கலை கல்லூரியில் சீனியர் ஒருவர், எப்போதும் கல்லூரி மதில் சுவர் மேலே அமர்ந்திருப்பார். படு ரகளை பார்ட்டி. ஒரு முறை கல்லூரி மாணவர்களுக்கும் ரயில்வே தொழிலாளர்களுக்கும் நடந்த கலவரத்தில், சம்பந்தமில்லாமல் ஒரு கோஷ்டி அக்கம் பக்கத்து ஹோட்டல்களிலிருந்து ஜாம் டின்கள், பிஸ்கட் ஜாடிகள் போன்ற அரிய பொருட்களை 'களவாடி ஓடிய அரிய பொழுதுகள்'..மற்றும் பல நிகழ்வுகளில் இந்த மாணவர் இருப்பதை பார்த்திருக்கிறேன். பெரிய இடத்து பிள்ளை.தந்தை சுத்த தமிழ் இனிஷியல் போட்ட பிரபல டாக்டர். இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகும் 'வசந்த மாளிகை' வசனத்தை நண்பர்களிடம் உரத்த குரலில் முழங்குவதுண்டு .&lt;br /&gt;&lt;br /&gt;நான் பிறகு சென்னையில் படிக்கும்போது, மதியம் கலைவாணர் அரங்குக்கு அடிக்கடி படம் பார்க்க போவேன். குறைந்த கட்டணம், 'யாருக்காக அழுதான்', 'திக்கற்ற பார்வதி' போன்ற தரமான படங்கள், தியேட்டரில் யாருமே இருக்க மாட்டார்கள். அப்போது இந்த நபரை அங்கு அடிக்கடி பார்ப்பேன். பேச்சுவார்த்தை இல்லை. பிறகு ஒரு நாள் ஒரு கமல் படத்தில் இவரை வில்லனாக பார்த்தேன். அட, சென்னைக்கு இதுக்குத்தான் வந்தீரா என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். கொஞ்ச காலம் கழித்து, இவர் கோவையில் எங்கள் கடையில் ஒரு கட் அவுட்டுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறர். அதாவது சொந்த ஊரில் ஒரு பெரிய கட் அவுட் வைத்து, மாலையெல்லாம்  போட்டு பார்ப்பதில் ஒரு சந்தோஷம். படம் பெயர் 'அவசரக்காரி'. படம் ஊத்தல். கட் அவுட் செய்தவர்கள், போஸ்டர் ஒட்டியவர்கள் அனைவருக்கும் நோ பேமெண்ட். யாராவது அந்த ஏரியாவில் இருந்தால்தானே! ரொம்ப வருடங்கள் கழித்து ஒரு பேட்டியில் கூட அவர் இதை மறைக்காமல் தெரிவித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைய ரங்கராஜ், இன்றைய சத்யராஜ்!&lt;br /&gt;&lt;br /&gt;Jul 07&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-102187464939257524?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/102187464939257524/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=102187464939257524' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/102187464939257524'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/102187464939257524'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2008/12/blog-post_6715.html' title='தகடு தகடு'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuYw5XYa5I/AAAAAAAAAJ0/zVnlZn5ZIQ4/s72-c/sathyaraj.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-8748029902021044733</id><published>2008-12-05T23:24:00.001-08:00</published><updated>2008-12-07T01:34:04.341-08:00</updated><title type='text'>ஒரே ஆள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuYfQyut3I/AAAAAAAAAJs/C4CcDnwmTsI/s1600-h/shed+2.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 213px;" src="http://1.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuYfQyut3I/AAAAAAAAAJs/C4CcDnwmTsI/s320/shed+2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5276979051245778802" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என்னிடம் அடி வாங்கிய ஒரே ஆள் (சூபர் தலைப்பு)&lt;br /&gt;&lt;br /&gt;நான் கல்லூரியில் படிக்கும் காலத்து ஒரு முறை சொந்த ஊரான பூதப்பாண்டிக்கு போயிருந்தபோது,எஙள்ள் கடை வேலைக்காக  என்னுடன் ஒரு தச்சு ஆசாரியை அனுப்பி வைத்தார்கள். அவன் அய்யப்பன். என்னை விட நாலைந்து வயது பெரியவன். அட்டை கருப்பு. ப்ரூஸ் லீயை போல் உடல் வாகு. என்னை அண்ணா என்றுதான் அழைப்பான். நானும் அவ்வாறுதான் அழைப்பேன். கொஞ்ச  நாள் ஒழுங்காக  இருந்தான். குடிக்க ஆரம்பித்தான். என் தந்தை இறந்தவுடன், பயம் விட்டு போய், அதிகமாக ஆட ஆரம்பித்துவிட்டான்.  எங்களுக்கோ வேறு  வழியில்லை. தொழிலை  ஒழுங்காக நடத்தவேண்டும் என்ற பயத்தில் இருக்கும்போது, இது வேறு பிரச்சினை. முக்கியமான வேலைகள் இருக்கும்போது முழு போதையில் வந்து அட்டகாசம் செய்வான். இதில் பெண் தொடர்புகள் வேறு. அம்மா மகள் என்று இரன்டு பேருடன் ஜாலி. சரி கல்யாணம் செய்து வைக்க அவன் உறவினர்கள் முடிவு செய்து ஒரு அப்பாவி பெண்ணையும் குமரி மாவட்டத்திலிருந்து கொண்டு வந்தனர். இந்த திருந்தாத கேஸ் , மேலும் ஆட்டம் போட்டது. தீபாவளி போன்ற சமயங்களில் எல்லா தியேட்டர்களிலும் ஒரே நேரத்தில் படம் மாற்றுவதால், எஙளுக்கு கடும் வேலைகள் இருக்கும். பேனர்கள், கட் அவுட்களை நிறுவ வேன்டும். அந்த சமயத்தில் முக்கியமான ஒரு பணியாள் , முழு போதையில் சாக்கடையில் கிடந்தால் எனக்கு எப்படி இருக்கும்?&lt;br /&gt;&lt;br /&gt;மணி என்ற ஒரு சிறுவன், பத்தாம் கிளாஸ் பெயிலாகி, பல அட்டம்ப்டுகள் அடித்து என்னிடம் ஓவியப்பயிற்சி பெற்று வந்தான். மலையாளி, மிகவும் ஏழை. சென்னை ஓவியக்கல்லூரியில் அவனை சேர்க்கவேண்டும் என்பது எங்களை போன்றவர்களின் ஆசை. அவனை இவனுக்கு ஏனோ பிடிக்காது. 'எடா கஞ்சி ' என்றுதான் அழைப்பான். ஒரு நாள் நான் வரைந்துகொண்டிருந்தேன். போதையுடன் அய்யப்பன் இன்னொரு கொட்டகையில் கத்திக்கொண்டிருந்தான். மணியை ஒரு வேலையாய் அங்கு அனுப்பினேன். திடீரென்று ஒரு மரணக்கூச்சல்..மணியிடமிருந்து. அய்யப்பனின் சத்தம் வேறு. எல்லோரும் பதறி ஓடினோம், என் கையில் தூரிகை .&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு கண்ட காட்சி. மணி படுத்து கிடக்கிறான். அவன் வயிற்றின்மீது அமர்ந்திருக்கிறான் அய்யப்பன். கையில் ரம்பம். அதைக்கொண்டு சிறுவனின் கழுத்தில் வைத்து அறுக்கும் முயற்ச்சி. ஒரே களேபரம். எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. தூரிகையை வீசினேன். 'டேய்' என்று அலறினேன். சன்னதம் வந்தது போல் அந்த ப்ரூஸ் லீயின் முடியை கொற்றாகப்பற்றி தூக்கி, விட்டேன் ஒரு குத்து. பத்தடி பறந்து விழுந்தான் அய்யப்பன். என் வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக நான் ஒரு மனிதனை அடித்த அடி!&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு பின் அய்யப்பன் கொஞம் அடங்கினான். குடித்திருக்கும்போது மட்டும் என்னிடம் 'அந்த மலையாளத்துக்காரனுக்காக என்னை அடித்துவிட்டீர்களே' என்று புலம்புவான். ஒரு ஏழெட்டு வருடங்களுக்கு பிறகு, ஒரு நாள் ரம்மில் பாலிடாலை கலந்து குடித்துவிட்டான். என் தந்தைக்கு கொள்ளி வைக்க  மறுத்த 'பகுத்தறிவுவாதியான' நான், ஊரிலிருந்து உறவினர்கள் வர தாமதமானதால், இவன் உடலுக்கு கொள்ளி வைத்தேன் .&lt;br /&gt;&lt;br /&gt;சரி, மணி என்ன ஆனான்.. கடும் சிரமங்களுக்கிடையே சென்னை ஓவியக்கல்லுரியில் படித்து,திரையுலகில் இப்போது ஒரு புகழ் பெற்ற கலை இயக்குனராக திகழ்கிறான். 'அதர்மம்' தொடங்கி 'தில்', 'தூள்', கில்லி' போன்ற படங்களின்  டைட்டில்களில் மணிராஜ் என்ற பெயரை பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;Aug 07&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-8748029902021044733?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/8748029902021044733/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=8748029902021044733' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/8748029902021044733'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/8748029902021044733'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2008/12/blog-post_5709.html' title='ஒரே ஆள்'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuYfQyut3I/AAAAAAAAAJs/C4CcDnwmTsI/s72-c/shed+2.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-1106928898056768309</id><published>2008-12-05T23:11:00.000-08:00</published><updated>2008-12-06T02:08:38.660-08:00</updated><title type='text'>ரகசிய ஓவியன்</title><content type='html'>இப்போது கருத்தில் எனக்கு வைத்திருக்கும் ஓவியப்போட்டியை பார்க்கும்போது, காவல் துறையுடன் எனக்கு இருந்த ஓவியத்தொடர்பு நினைவுக்கு வருகிறது. 22 வயது எனக்கு. அப்போது அரசாங்கமே பொருட்காட்சிகளை நடத்தும் புதிய முறை அமுலுக்கு வந்தது. காவல் துறை வழக்கம் போல ஒரு ஸ்டால் அமைக்கிறது. அப்போது புதிய மாவட்ட காவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்தவர். புதுமையாக ஏதாவது செய்ய ஆசைப்பட்டார். கோவை நகரில் ஓவிய நிறுவனம் நடத்தும் அத்தனை பேரையும் அழைக்க உத்தரவிட்டார். என் தந்தையோ கூச்ச சுபாவி. போலீஸ் என்றவுடன் ஒரு பயம். நைசாக என்னை தள்ளிவிட்டார்.&lt;br /&gt;'படிச்சிருக்கையில்லே, போய் இங்க்லீஷ் பேசி சமாளி , இதுக்கெல்லாம் நீதான் போணும்' என்றர். நான் அதை விட பயந்தாங்கொள்ளி . வேறு வழியில்லாமல் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரி அறையில் நாங்கள். எல்லோரும் தொழிற்துறை ஓவிய ஜாம்பவான்கள். நானோ கல்லூரியிலுருந்து வெளி வந்திருக்கும் ஒரு பச்சா. காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் உள்ள நட்புறவை சித்தரிப்பது போல் ஸ்டால் அமைய வேண்டும்  , உடனே கருத்துக்களை  சொல்லுங்கள் என்றார். எல்லோரும்  பேய் முழி முழித்துக்கொண்டிருந்தனர். ஒரு படத்தை பிரதி எடுத்து கொடுப்பதில் வல்லவர்களுக்கு, சுயமாக ஆலோசனை சொல்வதில் சிக்கல்...எனக்குள் இருந்த வீர இளைஞன் விழித்துக்கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;'சார், ஒரு பேப்பர் கொடுங்க' என்றேன்.&lt;br /&gt;சர சர என்று ஒரு ஸ்கெட்ச்..ஸ்டாலின் முகப்பை வரைந்து, நுழைவாசலுக்கு மேல் இரன்டு உருவங்கள் கை குலுக்குகின்றன. ஒரு போலீஸ்காரனும் ஒரு பொதுஜனமும்..கைகளுக்கு கீழே மக்கள் நுழையும் வழி. வெகு சாதாரண ஐடியா, ஆனால் நான் வரைந்த விதமும் வேகமும் அதிகாரியை கவர்ந்திருக்க வேண்டும். 'இந்த பையந்தான் இந்த ஸ்டாலை செய்யப்போகிறான். மற்ற அனைவரும் போகலாம்' என்றர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த இனிமையான, தலையில் நிறைய முடியுடைய அதிகாரிதான் தார்குண்டே, கலைஞர், தெஹல்கி புகழ் முகம்மது அலியாக பின்னாளில் உருவெடுப்பார் என்று சத்தியமாக தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பத்து ஆண்டுகளுக்கு, அதாவது கணிணியில் புகைப்படங்களை தொகுக்கும் காலம் வரை, எங்கள் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத குற்றவாளிகளை பிடிக்க ஒரு சினிமா பாணி உத்தியை கடைப்பிடித்தார்கள். சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளை என்னிடம் அழைத்து வருவார்கள். அவர்களிடம் விசாரித்து அந்த உருவத்தை அப்படியே கற்பனையில் வரைந்து கொடுப்பேன். இதை வைத்து அசல் குற்றவாளிகளையும் பிடித்தனர். ஒரு கட்டத்தில் இது எனக்கும் என் சீனியர் வக்கீலுக்கும் பெரிய தலைவலியாக மாறியது , நல்ல வேளை, கணிப்பொறியில் முகத்தின் பல பாகங்களை இணைத்து ஒரு புதிய வடிவம் கிடைக்க செய்யும் மென்பொருளை காவல் துறை இணைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;August 07&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-1106928898056768309?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/1106928898056768309/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=1106928898056768309' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/1106928898056768309'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/1106928898056768309'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2008/12/blog-post_810.html' title='ரகசிய ஓவியன்'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-2850534322059640362</id><published>2008-12-05T23:08:00.000-08:00</published><updated>2008-12-06T02:02:48.930-08:00</updated><title type='text'>இன்குலாப் ஜிந்தாபாத்</title><content type='html'>'பொலம்பல் பொங்கியண்ணன்' என்று நெருங்கிய நண்பர்களால் (!) அன்பாக அழைக்கப்பட்ட்ட என் நண்பர் பாலு ஒரு மார்வாடிக்காக ஒரு வழக்கில் ஆஜரானார். கேரளாவில் ஓடிக்கொண்டிருந்த ஒரு ரூட் பஸ்ஸிற்கு கடன் கொடுத்திருந்தான்  மார்வாடி. ஒரு பைசா  கடனும் வட்டியும் வரவில்லை. பஸ்ஸை வேறு கை மாற்றியும் விட்டனர். கோவை கோர்ட்டில் வண்டியை பறிமுதல் செய்ய உத்தரவு ஆகியது. நீதிபதியின் சார்பாக ஒரு கமிஷனர் நியமிக்கபட்டு வண்டியை ஜப்தி செய்யும் அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டது . எங்கள் நண்பர் 'மாமாஜி'தான் கமிஷனர். கொச்சிக்கு புறப்பட்டோம் அனைவரும். வழக்கம் போல் வெட்டி ஆபீசரான நான் துணைக்கு.தலைமை தாங்கியவர் பாலக்காட்டை சேர்ந்த வக்கீல் ஹரிஹரன்.கொச்சியில் இரண்டு குண்டர்கள் துணைக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;கொச்சி போலீஸ் கமிஷனர் எங்களுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டார். சட்டப்படி செய்ய வேண்டியதை செய்துகொள்ளுங்கள், நாங்கள் தலையிடமாட்டோம் என்று மட்டும் கூறினார். பஸ்ஸின் இப்போதைய உரிமையாளர்கள் மார்க்ஸிஸ்ட் யூனியனை சேர்ந்த இரண்டு டிரைவர்களும் கண்டக்டர்களும்தான். பஸ் டெர்மினஸ்ஸான கொச்சி  யூனிவெர்சிடியில் பஸ்ஸை  மடக்கினோம். மாமாஜி உத்தரவை காட்டினார். திகைத்துபோனவர்கள் முதலில் மறுத்தனர். அல்லது விடு ஸ்டேஷனுக்கு என்றவுடன் வண்டி கலமச்சேரி காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காவல் நிலையம் அப்போது இருந்தது ஒரு மேட்டின் மேல்.  ஒரே  ஒரு வண்டி மட்டும் போகமுடிந்த பாதை. பஸ்ஸை அங்கு நிறுத்தியாயிற்று. ஆய்வாளருடன் பேசிக்கொன்டிருக்கும்போதே எங்கிருந்தோ வந்து சேர்ந்து விட்டனர் 50 60 சி.ஐ.டி.யூ உறுப்பினர்கள். எங்கள் காரும் பஸ்ஸும் முற்றுகையிடப்பட்டன. ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட்களை பகைத்துகொள்ள ஆய்வாளருக்கு என்ன பைத்தியமா? அவர் அறைக்குள் சென்றுவிட்டார். நாங்கள் திகைத்து நின்றோம். பஸ்ஸுக்குள் எங்கள்  டிரைவரும் வக்கீல் உடையில் மாமாஜியும் . காருக்குள் நாங்கள். காம்பவுண்டுக்கு வெளியே ஒரே கூச்சல் . டேய் பாண்டி என்று எஙளை வாழ்த்தி முழக்கங்கள்! சில மணி நேரங்கள் அப்படியே இருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரத்தில் வெளியிலிருந்து ஒரு போலீஸ் வேன் உள்ளே வந்தது. குறுகிய வழி என்பதால் கொஞ்சம் குழப்பம். ஆட்கள் கலைய, எங்கள் பஸ் ரிவர்ஸ் எடுக்க, அந்த வேன் உள்ளெ வர, திடீரென்று எங்கள் டிரைவர் பஸ்ஸை வெளியே கிளப்பி விட்டான். பதற்றத்துடன் ஆட்கள் விலகி ஓட, எங்கள் கார் பின் தொடர, சட சட என்று கார் தாக்கப்பட்டது. கதவுக்கு வெளியே ஆவேசமான முகங்கள், சிலீரென்று கண்ணாடி உடைந்தது. நாங்கள் பயந்து அலற, ஹரிஹரன் காரை கிளப்பி விட்டார். பெரும் கூச்சலுடன் ஆட்கள் பின் தொடர்ந்து ஓடி வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய நெடுந்சாலையில் சினிமாவில் மட்டுமே நான் பார்த்து மகிழ்ந்த ஒரு கார்சேஸ். தடதடக்கும் இதயத்துடன் நாங்கள். முன்னால் பஸ், பின்னால் எங்கள் கார், எங்களை துரத்தி வரும் ஜீப்கள். எங்கள் டிரைவர் கில்லாடி. மாமாஜியை சாலக்குடியில் ஹரிஹரனுக்கு பரிச்சயமான ஒரு இடத்தில் இறக்கி விட்டு பறந்துவிட்டான். இருள் சூழ்ந்த நேரத்தில் சாலக்குடியை அடைந்தோம். காரை ஒரு சந்தில் ஒளித்துவைத்துவிட்டு, சாப்பிட்டோம். ஆம் ,காலையிலிருந்து பட்டினி. பிறகு ஒரு தியேட்டரில் இரவுக்காட்சி. எங்கள் உடமைகள்  எர்ணகுளத்தில் அல்லவா இருக்கின்றன. காரை இங்கேயே நிறுத்திவிட்டு டாக்ஸியில் சென்றோம். வழியில் எந்த ஜீப்பை பார்த்தாலும் பயம். லாட்ஜில் கதவை ரூம் பாய் தட்டினாலும் நடுங்கினோம். அடுத்த நாள்  பகலில் கிளம்பினோம். யாரை பார்த்தாலும், நேற்று பார்த்த முகம் போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வளர்ப்பானேன். அதற்க்கு பிறகு, வண்டி ஜப்தி என்றால் மரியாதையுடன் விலகி விடுவோம்.&lt;br /&gt;August 07&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-2850534322059640362?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/2850534322059640362/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=2850534322059640362' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/2850534322059640362'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/2850534322059640362'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2008/12/blog-post_3161.html' title='இன்குலாப் ஜிந்தாபாத்'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-159182949978604744</id><published>2008-12-05T23:03:00.000-08:00</published><updated>2008-12-07T02:19:42.429-08:00</updated><title type='text'>அக்னிபுத்திரன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STudiRoDJNI/AAAAAAAAAKc/6kJKryUQASo/s1600-h/atharmam.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 172px;" src="http://2.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STudiRoDJNI/AAAAAAAAAKc/6kJKryUQASo/s320/atharmam.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5276984600567162066" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;என் லட்சியமான சினிமா ஆசையை, என் தம்பியின் மீது திணித்த கதை இது. என் தந்தை இறக்கும்போது அவன் எட்டாவதுதான் படித்துக்கொண்டிருந்தான். தந்தையோடு கல்வி போகும் என்ற பழமொழியை பொய்யாக்க விரும்பினேன். +2 முடித்தவுடன் திரைப்படக்கல்லூரிக்கு விண்ணப்பித்தோம். எங்கள் குடும்பத்தில் பலத்த எதிர்ப்பு. ஏற்கனவே அவனுக்கு எனக்கு தெரிந்த காமெரா நுட்பங்களில் பயிற்ச்சி கொடுத்திருந்தேன். ஒளிப்பதிவாளருக்கான நேர்முகத்தேர்வுக்கு அவனுடன் நான் செல்லமுடியாததால் எங்கள் அத்தான் துணைக்கு சென்றார். சிறப்பாக அதையும் முடித்தவுடன், அங்கிருந்த ஒரு மாணவன் என் அத்தானை அணுகி, 'வாருங்கள், ஒருவரிடம் அழைத்து போகிறேன், அவர் நினைத்தால் உங்களுக்கு சீட் நிச்சயம்' என்று கூற, இந்த அப்பாவியும் போயிருக்கிறார். அந்த பெரிய மனிதர் (மறைந்துவிட்டார்) ஒரு தலை சிறந்த பேச்சாளர், எல்லா கட்சிக்கும் போய் வந்த அரசியல்வாதி, ஒரு வாரப்பத்திரிகையின் ஆசிரியர். யூகித்திருப்பீர்களே! போனவுடன் பல ஆயிரங்களை கேட்டார் . பணிவுடன் மறுத்துவிட்டு வந்துவிட்டது எங்கள் தரப்பு. ரேன்க் படி என் தம்பிக்கு தேர்வு வரிசையில் முதலிடம் கிடைத்தது. கல்லூரியில் சேர்த்துவிட்டோம். சில நாட்களுக்கு பிறகு 17 வயதேயான அவனுக்கு மிரட்டல்கள் வரத்தொடங்கின. நாங்கள்தான் இந்த சீட்டை ஏற்பாடு செய்தோம் , மரியாதையாக பணத்தை கொடுக்காவிட்டால் நடப்பதே வேறு என்ற ரீதியில் சிலர் மிரட்ட தொடங்கினார். இதை கேட்டு நான் பெரிதும் கலங்கினேன். எனக்கு யாரை தெரியும் , சில கம்யூனிஸ்ட் தோழர்களைத்தவிர? அவர்களால் நிச்சயம் இந்த விஷயத்தில் உதவ முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சமயத்தில் ஆபத்பாந்தவனாக வந்தார் என் தடாலடி நண்பர் இரவிச்சந்திரன். நேராக சென்னைக்கு போனோம். அந்த நபர் ஆசிரியராக இருந்த பத்திரிகை அதிபரை நேரில் சென்று பார்த்தோம். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் அப்புதான் அவர்! முறையிட்டார்  இரவி. தொலைபேசியில் உத்தரவுகள் பறந்தன. அன்றிலிருந்து சங்கு  மவுனமாகியது. என் தம்பி பிறகு தங்க பதக்கத்துடன் வெளியே  வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் வேலு ஒரு திரைப்பட வினியோகஸ்தர் என்பதை சொல்ல மறந்துவிட்டேன். அவருடன் சமயம் கிடைக்கும்போதெல்லாம் சென்னை போவேன். பிரசாத் ஸ்டுடியோவில்  நிறைய நண்பர்கள் கிடைத்தனர். அங்குள்ள பிரீவியூ தியேட்டரில் அமர்ந்து ரஷ்களும், சில சமயம் பின்னணி இசையில்லாமல் முழுப்படமும் பார்துக்கொண்டிருப்போம். யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள். ஒருமுறை 'அக்னிபுத்திரன்' என்ற திரைப்படத்தின் ரஷ்கள் ஓடிக்கொண்டிருந்தன. கார்த்திக் நடித்திருந்தார். ஒளிப்பதிவு அற்புதமாக இருந்தது. பக்கத்தில் இருந்தவர்தான் ஒளிப்பதிவாளர் என்றும், இது அவருடைய முதல் படம் என்றும் என் நண்பர் சொன்னார். பிரசாத்தில் இருந்து அமெரிக்கா சென்று ஸ்டெடிகாம் பயிற்சி எடுத்தவர், பிரபல பாடகியின் மகன் என்றும் பெயர் ராஜீவ் மேனன் என்றும் அறிந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடன் உடனே அறிமுகம் செய்து கொண்டு அறுத்து தள்ளிவிட்டேன். எல்லாம் உலக சினிமா விஷயங்கள்தான். தம்பியையும் அறிமுகம் செய்து வைத்தேன். அப்துல் ரகுமானிடம் உதவியாளராக  இருக்கிறான் என்றவுடன் ஆதரவாக பேசி, எஙளுக்கு அவருடைய பியட் காரில் ஏ.வி.எம். வரை லிப்டும் தந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டுகள் கடந்தன. பின்னர் என் தம்பி மேனன், மற்றும் அவர் மனைவி இயக்கிய நிறைய விளம்பரப்படங்களுக்கு பணியாற்றி கொண்டிருக்கிறேன் . ஒரு நாள்  அவனிடம் கேட்டேன் , உனக்கு அவரை அறிமுகம் செய்தது  யார், நினைவிருக்கிறதா?&lt;br /&gt;விழிக்கிறான், பாவம் மறந்து போச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு.இலங்கை தமிழர்களால் தயாரிக்கப்பட்ட அக்னிபுத்திரன் படம் பாதியிலேயே நின்று போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;July 07&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STujIJDcXJI/AAAAAAAAAK0/C0GNoB0PIMU/s1600-h/camera.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 240px;" src="http://2.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STujIJDcXJI/AAAAAAAAAK0/C0GNoB0PIMU/s320/camera.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5276990748659309714" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-159182949978604744?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/159182949978604744/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=159182949978604744' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/159182949978604744'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/159182949978604744'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2008/12/blog-post_7401.html' title='அக்னிபுத்திரன்'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STudiRoDJNI/AAAAAAAAAKc/6kJKryUQASo/s72-c/atharmam.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-475789317386447564</id><published>2008-12-05T23:00:00.000-08:00</published><updated>2008-12-06T01:34:28.182-08:00</updated><title type='text'>அன்புக்கடி</title><content type='html'>வேலு என் இனிய நண்பர்(பெயரை மாற்றி விட்டேன்). சிறு வயது முதல் எங்களை இணைத்தவர் சிவாஜி . நான் மிதவாதி. படம் பார்ப்பதோடு சரி. ஆனால் அவர் மன்ற மறவர். மாவட்ட அளவில் மன்ற பதவிகள் வகித்தவர். திருமணம் நிச்சயமானவுடன் சிவாஜிக்கு பத்திரிகை கொடுத்தே  ஆகவேன்டும் என்று சென்னைக்கு கிளம்பியவர். நானும் கூட போனேன். அது தனிக்கதை.&lt;br /&gt;&lt;br /&gt;வேலு ஒரு முன்கோபி. எவருடனும் சட்டென்று சன்டைக்கு கிளம்பி விடுவார். கை சில சமயம் நீண்டுவிடும். இவருக்கு பெண் கொடுத்தவர் ஒரு அரசு உயர் அதிகாரி. மிகவும் படித்த குடும்பம். திருமணத்தன்று முதலே இவருக்கும் மாமனாருக்கும் ஏதோ ஈகோ பிரச்சனை. நம்ம ஆள் அடிக்கடி உறுமிக்கொண்டு இருப்பார். மனைவி கருவுற்றார். ஒரு பிரபல மருத்துவமனையில் அழகிய  மகன் பிறந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் , கோர்ட்டிலிருந்து திரும்பியிருந்தேன். வேலுவின் தம்பியும் மானேஜரும் ஓடி வந்தனர்- 'பி 2 ஸ்டேஷனுக்கு உடனே வாருங்கள், அண்ணன் உள்ளே இருக்கிறார், வெளியே எடுக்கணும்'. ஸ்டேஷனில் லாக்கப் அறையில் எனது இனிய நண்பன்! சட்டை கிழிந்திருக்க, மேலே ரத்தத்துளிகள்! அதிர்ந்து திரும்பினேன். ஒரு பென்ச்சில் மாமனார். அதே கிழிசல் சட்டை, ரத்தம், ஆனாலும் அதிகமாக, கை காலெல்லாம் காயங்கள். விசாரித்ததில் தெரிந்தது, மருத்துவமனையில் ஏதோ அற்ப காரணங்களுக்காக வாக்குவாதம் ஆரம்பித்து வார்தை தடிக்க, நம்ம ஆள் அவர் வேலையை காட்டிவிட்டார். உயர் அதிகாரி மாமனாரோ தன் பல்லை ஆயுத்மாக பயன்படுத்தி மருமகனை அன்புக்கடி கடிக்க, இளமை முறுக்கு மாப்பிள்ளை பதிலுக்கு மாமனாரின் பொன்மேனியில் ஆங்காங்கே பல் பதிக்க, கட்டில், தொட்டில் எல்லாம் பறக்க, மருத்துவமனையிலிருந்து இவர்களுக்கு கல்தா கொடுத்துவிட்டனர். மாமனார் தரப்பு போலீசில் மருமகன் மேல் புகார் கொடுக்க, கிளைமாக்சில் நான் என் சக வக்கீல்கள் சகிதம் ஆஜராகும் அரிய காட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆய்வாளருடன் பேசினேன்  'சார், குடும்ப பிரச்சினை, இண்ணைக்கி அடிச்சுக்குவாங்க, நாளக்கி சேர்ந்துக்குவாங்க , பைசல் பண்ணி அனுப்பிடுங்க'. புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டால் துரத்திவிட அவரும் தயார்தான். மாமனார் தரப்பு விடுவதாயில்லை. ரத்தக்காயங்கள் அவர்களை உசுப்பேத்திவிட்டன. என்னையும் சபிக்க தொடங்கினர். சரி, கடைசி அஸ்திரத்தை  எடுத்தேன். இன்னொரு புகார் தயாரித்தேன். கதையை அப்படியே உல்டா செய்து , மாமனாரை வில்லனாக சித்தரித்த புதிய திரைக் கதை..'நீங்களும் புகார் கொடுங்க, நாங்களும் கொடுக்கிறோம், எல்லோரும் கோர்ட்டுக்கு வந்துதானெ ஆகணும், அப்ப காட்டுறோம் எங்க வேலையை' என்று சவால் (சவடால்) விட்டேன். எல்லோரும் கூடிப்பேசினர். புகார்கள் வாபஸ்  ஆயின. எல்லோரும் கலைந்து போக, ஒரு பைசா வருமானமில்லாத இந்த கேஸ்  தொலைந்ததே என்று காவலர்கள் பெருமூச்சுவிட, நாங்கள் எங்கள்  வழியே திரும்பினோம். நண்பரும் நானும் உணர்ச்சிப்பெருக்கில் 2கி.மீ நடந்தே  எங்கள்   கடைக்கு வந்தோம். கிழிந்த சட்டை, ரத்தத்துடன் வந்த அவரை பார்த்து  எல்லோரும் திகைத்து நிற்க, அவர் சாவகாசமாக ஒரு குண்டூசி கேட்டார். இது  யாரை  குத்த என்று யோசித்துக்கொண்டே ஒரு பின்டாக்ஸ் ஆணி கொடுத்தேன். பல்லிடுக்கில் நுழைத்து தோண்டி துருவி, ஒரு பெரும் இறைச்சி போன்ற துணுக்கை வெளியெ எடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அது மாமனாரின் சதைத்துணுக்கு! அடப்பாவி நரமாமிசபிரியா என்று அலறியது ஒன்றுதான் பாக்கி.&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சாயத்தும் நாங்கள்தான் செய்து, ஒரு வருடம் கழித்து பிரிந்த தம்பதிகளை சேர்த்துவைத்தோம். வேலுவின் மகன் இன்று கல்லூரியில் படிக்கிறான். எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் . ஆனால் மாமனார் தரப்பு இன்றும் கடுப்புடன் என்னை பார்க்கிறது . என்ன கொடுமை சார் இது!&lt;br /&gt;&lt;br /&gt;July 07&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-475789317386447564?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/475789317386447564/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=475789317386447564' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/475789317386447564'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/475789317386447564'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2008/12/blog-post_4.html' title='அன்புக்கடி'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-5773489324307433633</id><published>2008-12-05T22:58:00.000-08:00</published><updated>2008-12-07T02:17:35.700-08:00</updated><title type='text'>வேட்டையன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuXhI7s-kI/AAAAAAAAAJc/HrkhaCGtEWg/s1600-h/hunt.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuXhI7s-kI/AAAAAAAAAJc/HrkhaCGtEWg/s320/hunt.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5276977983984040514" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;table class="tableBorder" style="table-layout: fixed;" align="center" cellpadding="3" cellspacing="1"&gt;&lt;tbody&gt;&lt;tr class="msgEvenTableRow"&gt;&lt;/tr&gt;&lt;tr class="msgEvenTableRow"&gt;&lt;td class="msgLineDevider" valign="top" height="150"&gt;    &lt;!-- Start Member Post --&gt;    &lt;div class="msgBody" style="overflow: auto; float: left;"&gt; நான் ஒரு காட்டுமிராண்டி. வனங்களை நேசிப்பவன். சிறு வயதில் ஜிம் கார்பெட்டும் கென்னெத் ஆண்டர்சனும்தான் என் ஆதர்ச எழுத்தாளர்கள். அடிப்படையில் நான் ஒரு கோழை. நாயையும் பூனையையும் பார்த்தாலே  பயம். பைக் வாங்கி கொஞ்ச  காலம் மட்டும் ஓட்டிவிட்டு பிறகு நமக்கு பஸ்ஸும் பின் சீட்டும்தான் சரி என்று வாழ்பவன். ஆனால் அடர்ந்த காடுகளில் சுற்றுவது எனக்கு பிரியமான ஒன்று. பல வனவிலங்குகளை அருகாமையில் பார்திருக்கிறேன். இந்த தீபாவளியன்று, பந்திப்பூர் காட்டில் ஒரு யானையை புகைப்படம் எடுக்க முயல, அது என்னை துரத்த , கிட்டத்தட்ட 200 அடி தூரம் ஓடி உயிர் தப்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்லப்போகும் விஷயங்கள் ஏற்கனவே வேறொரு இழையில் எழுதியிருக்கிறேன். ஆனாலும் இந்த சந்தர்ப்பத்தை விட தயாராயில்லை. திருட்டு வேட்டைக்கு அடிக்கடி போகும் ஒரு வக்கீல் கவுண்டர் என் நண்பர். முதுமலைக்காடுகளிலும் சுற்றுப்புறஙளிலும் சுற்றோ சுற்றென்று சுற்றி, மூன்று வேளையும் காட்டுப்பன்றி இறைச்சி தின்று கழித்த நாட்கள். குழுவின் அதிகாரபூர்வமான போட்டோகிராபர் நான். மூணார் போகும் வழியில் சின்னாறு பகுதியில் வரையாடு அடிக்கலாம் என்று அவர்கள் முடிவெடுத்தனர். நாங்கள்  துரைமார்கள்  5 பேர். சாமான் செட்டு எல்லாம் சுமந்துவர அடிமைகள் 5 பேர். வழிகாட்டிகளாக இருளர்கள் 2 பேர். ஆப்ரிகன் சபாரி கெட்டது போங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று பகலும் இரவும் அலைந்தோம் திரிந்தோம். வரையாடும் பார்க்கவில்லை , வரிக்குதிரையும் பார்க்கவில்லை. அடிமைகள் சமைத்து தரும் ரசம் சோற்றை தின்பதற்க்காகவா காடு ஏகினோம்? ஒரு இரவில் காட்டெருமைகள் சூழ்ந்துகொண்டு பயமுறுத்தின. ஒன்றை அடித்தாலும் மிச்சத்தை எங்கே புதைப்பது, நாஙள் வனக்காவலர்களுக்கு பதில் சொல்ல முடியாது  என்று தடுத்துவிட்டனர் இருளர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கவுண்டர் சிந்தித்தார், முடிவெடுத்தார், இறைச்சி திங்காமல் வெளியெ போவது நம் குலப்பெருமைக்கே அவமானம்... துப்பாக்கியை இருளனிடம் கொடுத்தார். 'எதையாவது அடிச்சு கொண்டாடா, இல்லை தோலை  உறிச்சுடுவேன்' என்று உத்தரவு பறந்தது. ரசத்தை கரைத்து குடித்துவிட்டு மரத்துக்கு அடியில் இளைப்பாரினோம் நாங்கள். ரொம்ப நேரம் கழித்து ஒரு வேட்டு சத்தம். ஆஹாவென்றெழுந்தோம். ரெடி பண்றா மசாலாவை என்று உறுமினார் லவ்டேலில் படித்த எங்கள் இங்கிலீஷ் கவுண்டர். எல்லோரும் ஆவலுடன் பார்த்திருக்க, வேட்டையுடன் வந்து சேர்ந்தனர் அவர்கள். சுடப்பட்டு கிடந்தது ஒரு மந்தி. 'எண்றா கிரகம் இது, சரி, சரி, தோல உறி' என்று ஆணை பிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அது ஒரு பெண் குரங்கு. முலையெல்லாம்  ஒரு பெண்ணைப்போல் இருந்தது. நர மாமிசம் உண்பவர்களைப்போல் உணர்ந்தோம். அங்கு நீண்ட மவுனம் நிலவியது. ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டோம். கவுண்டரே மவுனத்தை கலைத்தார் - 'நீங்களே எடுத்துட்டு போங்கடா , எங்களுக்கு வேண்டாம் '!&lt;br /&gt;&lt;br /&gt;காட்டை விட்டு வெளியேறினோம். பிறகு இறைச்சிக்கு நாஙள் என்ன செய்தோம்  என்று சொன்னால் வெட்கக்கேடு.&lt;br /&gt;&lt;br /&gt;July 07&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;    &lt;!-- End Member Post --&gt;   &lt;/td&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuiiNlA1XI/AAAAAAAAAKs/Y4mYygyT0VI/s1600-h/hunt+a.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 195px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuiiNlA1XI/AAAAAAAAAKs/Y4mYygyT0VI/s320/hunt+a.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5276990097038824818" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-5773489324307433633?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/5773489324307433633/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=5773489324307433633' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/5773489324307433633'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/5773489324307433633'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2008/12/blog-post_3249.html' title='வேட்டையன்'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuXhI7s-kI/AAAAAAAAAJc/HrkhaCGtEWg/s72-c/hunt.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-1282190971351256775</id><published>2008-12-05T21:02:00.000-08:00</published><updated>2008-12-07T02:14:29.018-08:00</updated><title type='text'>இரவிசந்திரன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuh8zpBPuI/AAAAAAAAAKk/xcEm_7gRlcw/s1600-h/iravi.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 230px;" src="http://2.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuh8zpBPuI/AAAAAAAAAKk/xcEm_7gRlcw/s320/iravi.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5276989454421147362" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;table class="tableBorder" style="table-layout: fixed;" align="center" cellpadding="3" cellspacing="1"&gt;&lt;tbody&gt;&lt;tr class="msgEvenTableRow"&gt;&lt;/tr&gt;&lt;tr class="msgEvenTableRow"&gt;&lt;td class="msgLineDevider" valign="top" height="150"&gt;    &lt;!-- Start Member Post --&gt;    &lt;div class="msgBody" style="overflow: auto; float: left;"&gt; என் வாழ்க்கையில் ரொமான்சுக்கு இடம் இருந்ததில்லை. சிறு வயதிலேயே ஒரு சினிக் ஆக பரிமாணித்துவிட்டேன். எல்லாமே  நண்பர்கள்தான். கல்லூரி வாழ்க்கையின்போது நண்பர் சந்திரகுமார் அவசரமாக கூப்பிட்டார்-'விஜயா பதிப்பகத்திற்க்கு இரவிச்சந்திரன் வந்திருக்கிறார். போய் பார்க்கலாம்'. இரவி அப்போது தமிழில் பரபரப்பான எழுத்தாளராக உருவாகியிருந்தார். நகைச்சுவையும், சரளமும் கலந்த எழுத்து. சுஜாதாவின் வலது கரம், நேரடி சிஷ்யன் என்றெல்லாம் பேச்சு. விஜயா பதிப்பகம் அப்போது ஒரு பலசரக்கு கடை. அண்ணாச்சி ஒரு மூலையில் புத்தகங்களை வைத்து விற்றுக்கொண்டிருந்தார். இரவியை சந்தித்தோம். எங்களை விட நாலைந்து வயது அதிகம். குள்ள உருவம். சுறுசுற்ப்பான பேச்சு . நட்பு பற்றிக்கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் அவரும் மிக நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். தினமும் விசித்திர வாசகங்கள் அடங்கிய தபால் கார்டுகளை  எல்லோருக்கும் அனுப்புவது அவரது வழக்கம். நினைத்தால் பெங்களூர் போவேன். மல்லேஸ்வரத்திலுள்ள அவருடைய அறையில் வாசம். சுஜாதவுடனும் நட்பு. ஒரே லூட்டிதான். ஒரு முறை ஐ.ஏ.எஸ். நுழைவுத்தேர்வு எழுத பெங்களூரை  மைய்யமாக தேர்ந்தெடுத்து போனேன். தேர்வு எழுதாமல், அலுவலகத்தில் இருந்த சீனியர் எழுத்தாளர் ராஜேந்திரகுமாரையும் இழுத்துக்கொண்டு சினிமாவுக்கு போனோம். படம் முடிந்தவுடன், இருவரும் பைக்கில் சுஜாதா வீட்டுக்கு போனோம். வழியில் ஒரு சிறு விபத்து. சட்டையெல்லாம் கிழிந்து ரத்தம் ஒழுக வரும் எங்களை பார்த்து  சுஜாதா குடும்பமே பதறி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சுவாரசியங்கள் மிகுந்தவர் இரவி. சுப்ரமணிய ராஜூ போன்றவர்களையெல்லாம் அறிமுகம் செய்து  வைத்தார். எப்போதும் டை கட்டியிருப்பார் . என்ன வேலை செய்கிறர் என்று யாருக்கும் தெரியாது. தடாலடியாக யாரிடமும் பேசுவார். பயங்கரமாக புளுகுவார். ஒரு  நாள்  என்னை தேடி எங்கள் அலுவலகத்திற்க்கு வந்தவர், எனது சீனியரிடம் கர்நாடக முதல்வர் குண்டுராவின் பி.ஏ. வந்திருக்கிறேன், ஒரு முக்கியமான விஷயமாக ஜீவாவை பார்க்க சொல்லியிருக்கிறர் என்று அவிழ்த்துவிட, ஒரு கோஷ்டியே என்னை கோர்ட் வளாகம் முழுக்க தேடியது . எனக்கு கல்யாணமான புதிதில் ,ஒரு புதுமுக நடிகையின் புகைப்படத்தை இணைத்து எனக்கு ஒரு வாழ்த்து , அவள் எழுதியதுபோல் அனுப்பியிருந்தார். 'அடுத்த பிறவியிலாவது நம் காதல் வெல்லட்டும்', நல்ல வேளை, இவரது கையெழுத்து என் மனைவிக்கு தெரியும் என்பதால் தப்பித்தேன். இன்னும் சொல்லிக்கொண்டெ போவதற்க்கு நிறைய காமெடிகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக, ஆந்திர பெண் ஒருவருடன் இவருக்கு திருமணம் நிச்சயமானது.மிகவும் நல்ல பெண். அதற்க்கு பிறகு  இவரது வாழ்க்கையே மாறிப்போனதன் மர்மம்தான் இன்னும் புரியவில்லை. பொருளாதார நெருக்கடியா இல்லை வேறு  ஏதாவதா, யாருக்கும் சொல்லவில்லை, குடிப்பழக்கம் தொற்றிக்கொண்டது. ஊரெல்லாம் கடன், நண்பர்கள் அஞ்சி ஓடினர். ஒரு மனிதன் இவ்வளவு தலைகீழாக மாற முடியுமா என்ற அளவிற்க்கு..ஒரு முறை சென்னை திரைப்படக்கல்லூரி விடுதியில், என் தம்பியை சந்திக்கப் போனவர், கடும் போதையில் நினைவிழந்து விட்டார். என்ன செஇவது என்று அறியாமல், பக்கத்தில் குடியிருந்த எங்கள் எழுத்தாள நண்பர் உஷா சுப்ரமணியத்திடம் சென்று உதவி கேட்டு, கடைசியில் மருத்துவமனையில் சேர்த்துவிட்டனர். ஏற்கனவே வெளியான ஒரு சிறுகதையை, மீண்டும் விகடனுக்கு அனுப்பி வைக்க அவர்களும் பிரசுரித்துவிட்டனர். விஷயம் தெரிந்தவுடன், விகடனில் இவரை கட்டம் கட்டி, மீண்டும் இவரது படைப்புகளை பிரசுரிக்கமட்டோம் என்று அறிவித்தும்  விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரை கடைசியாக பார்தது, கிழிந்த சட்டையுடன் சாராய  மணத்துடன் என்னை பார்க்கவந்தபோதுதான். அவரது ஆசிரியர் கவிஞர் புவியரசுவும் நானும் பணம் கொடுத்து அனுப்பி வைத்தோம். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன், கடைசியாக ஹைதராபாத் வீதியொன்றில் இரவியை பார்த்ததாக சொன்னார். பத்து பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டன. இரவிச்சந்திரன் உயிரோடு இருந்தால் எப்படியும் ஒரு முறையாவது என்னை பார்க்க வந்திருப்பார் என்பது எனது நம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;July 2007&lt;br /&gt;&lt;/div&gt;    &lt;!-- End Member Post --&gt;   &lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-1282190971351256775?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/1282190971351256775/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=1282190971351256775' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/1282190971351256775'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/1282190971351256775'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2008/12/blog-post_05.html' title='இரவிசந்திரன்'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuh8zpBPuI/AAAAAAAAAKk/xcEm_7gRlcw/s72-c/iravi.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5895436808799092697.post-2094229924079626663</id><published>2008-12-05T20:54:00.000-08:00</published><updated>2008-12-07T01:27:19.494-08:00</updated><title type='text'>ஆதிமூலம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuWnv0y3_I/AAAAAAAAAJU/TWGPeRTblig/s1600-h/adimoolam.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 226px; height: 320px;" src="http://2.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuWnv0y3_I/AAAAAAAAAJU/TWGPeRTblig/s320/adimoolam.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5276976997991636978" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table class="tableBorder" style="table-layout: fixed;" align="center" cellpadding="3" cellspacing="1"&gt;&lt;tbody&gt;&lt;tr class="msgEvenTableRow"&gt;&lt;/tr&gt;&lt;tr class="msgEvenTableRow"&gt;&lt;td class="msgLineDevider" valign="top" height="150"&gt;    &lt;!-- Start Member Post --&gt;    &lt;div class="msgBody" style="overflow: auto; float: left;"&gt;    தூசி தட்டி ஒரு சம்பவத்தை எடுத்துவிட்டேன். கொட்டாவிகள் தவிர்க்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;எண்பதுகளில் மாலன் ஆசிரியராக இருந்த 'திசைகள்' இளைஞர் இதழில்  நிருபர்களாக பணியாற்றிக்கொண்டிருந்தோம். நான் தீவிரமாக பங்காற்றிக்கொன்டிருந்த ஓவியர் அமைப்பில் மாணவர்களுக்கு பயிற்சி தர சென்னையிலிருந்து பிரபல ஓவியர் ஆதிமூலத்தை அழைத்திருந்தோம். அவரை திசைகளுக்காக நவீன ஓவியம் குறித்த ஒரு பேட்டி எடுக்க சொன்னார் மாலன். அப்போதுதான், திரு ஆதிமூலத்தின் நவீன ஓவிய கோட்பாடுகளை கடுமையாக தாக்கி நான் எழுதிய ஒரு கடிதம் கணையாழியில் வெளியாகியிருந்தது. அரைவேக்காட்டுத்தனமாக எழுதியிருந்தேன். (இப்போதும்  அப்படித்தானே)&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் நான்கு பேர். இரண்டு பி எஸ் ஜி பொறியியல் மாணவர்கள் , ஒரு சட்டக்கல்லூரி மானவன், ஒரு ஆங்கில எம் ஏ மாணவி. ஆதி, என் பெயரை கேட்டவுடனேயெ சரியாக யூகித்து விட்டார்.. கணையாழி விவகாரம் குறித்து கேட்டார்.. நான் பாதி செத்து போய்விட்டேன். பேட்டி ஒரு வழியாக முடிந்தது. போட்டோ எடுக்க காமெரா  இல்லை. எங்கும் இரவலும் கிடைக்கவில்லை. ஆதியே ஒரு யோசனை சொன்னார் - 'தம்பி, நான் போஸ் கொடுக்கிரேன், நீ என்னை கோட்டோவியமாக வரைந்துவிடு, புதுமையாக இருக்கும்'!&lt;br /&gt;ஏற்கனவே அசடு வழிந்துகொண்டிருந்த நான் இன்னும் குறுகிப்போய்விட்டேன். அந்த மகா கலைஞன் போஸ் கொடுக்க, இந்த பொடியன் அவரை வரைய..என் வாழ்வின் உன்னத நிமிடங்கள்! அந்த படம்தான் பேட்டியுடன் பிரசுரமானது.என்னுடைய சக நிருபர்கள் ஸிகாகோவில் வாழும் சந்திரகுமார், இன்றைய பாண்டிச்சேரி டெலிகாம் ஜி.எம் மார்ஷல் ஆண்டனி லியோ, எழுத்தாளரும்  பேச்சாளருமான பேராசிரியை ஜெயந்தஸ்ரீ  பாலகிருஷ்ணன் ஆகியோர்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuWnUzbjOI/AAAAAAAAAJM/Z71X6H1-cdY/s1600-h/adimoolam+2.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 213px;" src="http://2.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuWnUzbjOI/AAAAAAAAAJM/Z71X6H1-cdY/s320/adimoolam+2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5276976990738156770" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அன்று முதல் ஆதி எனக்கு ஓவிய காட்பாதராக திகழ்கிறார்.வள்ளுவர் கோட்டத்தில் நிரந்தரமாக வைக்கப்பட்டிருக்கும் குரளோவியங்களில்  முதலாம் அதிகாரத்திற்க்கு அவர் ஓவியம் தீட்டியிருக்க, ஆறாம் அதிகாரத்திற்க்கு நான் ஒவியம் வரைந்திருக்கிறேன். பெருமையுடன் பூரிக்கிறேன்.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuWIeq4vVI/AAAAAAAAAJE/Jydt8LT32cE/s1600-h/valluvar.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 239px;" src="http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuWIeq4vVI/AAAAAAAAAJE/Jydt8LT32cE/s320/valluvar.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5276976460810730834" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;July 2007&lt;br /&gt;&lt;/div&gt;    &lt;!-- End Member Post --&gt;   &lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5895436808799092697-2094229924079626663?l=jeevartistjeeva.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jeevartistjeeva.blogspot.com/feeds/2094229924079626663/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5895436808799092697&amp;postID=2094229924079626663' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/2094229924079626663'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5895436808799092697/posts/default/2094229924079626663'/><link rel='alternate' type='text/html' href='http://jeevartistjeeva.blogspot.com/2008/12/blog-post.html' title='ஆதிமூலம்'/><author><name>ஜீவா ஓவியக்கூடம்</name><uri>http://www.blogger.com/profile/00704968549394669481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://3.bp.blogspot.com/_bAkfWRFUpXM/SY_KfEstvLI/AAAAAAAAAMM/TTgcHq0QZuo/S220/DSC02142.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_bAkfWRFUpXM/STuWnv0y3_I/AAAAAAAAAJU/TWGPeRTblig/s72-c/adimoolam.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry></feed>
